என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
    சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
    மஹா ஜ்வாலாய தீமஹி
    தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

    என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.
    புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து நாகராஜ காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள்.
    ஸ்ரீநாகராஜ காயத்ரி

    ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
    நாகமணி சேகராய தீமஹி
    தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்

    அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம்.

    இந்த நாகராஜ காயத்ரியைச்சொல்லுங்கள். வழிபடுங்கள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து வழிபட்டு வாருங்கள். கால சர்ப்ப தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். உத்தியோகம் நிலைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
    சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கல் ஆச்சார்யப் பெருமக்கள்.
    சிவ மந்திரம் சொல்லி நாம் செய்கிற பூஜை மிக மிக வலிமையானது. அதேபோல், சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கல் ஆச்சார்யப் பெருமக்கள்.

    சிவபெருமானின் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.

    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர

    சிவசிவ ஹரஹர மஹாதேவ

    வில்வதள ப்ரிய சந்திர கலாதர

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    மெளலீஸ்வராய யோகேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    நடேஸ்வராய நாகேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவ

    கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும்.
    தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பைரவரை வணங்குவோம். பயம் அனைத்தையும் நீக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருளுவார்; வழக்கில் வெற்றியைக் கொடுப்பார் காலபைரவர்!

    கால பைரவாஷ்டகம்

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥

    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்கநிர்மலம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாபநாஸனம்
    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
    த்ருவம்॥

    உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர். ஸ்ரீராகவேந்திரரை மனதால் நினைத்தாலே போதும்... நம்மையும் நம் சந்ததியும் செழிக்கச் செய்து அருளுவார்.
    ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி

    ஓம் பிரகலநாதாய வித்மஹே
    வியாசராஜாய தீமஹி
    தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத்

    ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அருளிய பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய் என்று அர்த்தம்.

    இந்த ஸ்ரீராகவேந்திரரின் ஸ்லோகத்தை, காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள். ராகவேந்திரரை நினைத்து, ஒருவருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர்.
    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
    ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
    வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

    பொதுப் பொருள்:

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...
    பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.
    1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
    2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
    3. ஓம் அனுகூலனே போற்றி
    4. ஓம் அருந்துணையே போற்றி
    5. ஓம் அண்ணலே போற்றி
    6. ஓம் அருள்வடிவே போற்றி
    7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
    8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
    9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
    10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
    12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
    15. ஓம் இனியவனே போற்றி
    16. ஓம் இணையிலானே போற்றி
    17. ஓம் இடப உருவனே போற்றி
    18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
    19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
    20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
    21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
    22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
    23. ஓம் உத்தமனே போற்றி
    24. ஓம் உபகாரனே போற்றி
    25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
    26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
    27. ஓம் எளியவனே போற்றி
    28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
    29. ஓம் ஐயனே போற்றி
    30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
    31. ஓம் கனிவுருவே போற்றி
    32. ஓம் களிப்புருவே போற்றி
    33. ஓம் களங்கமிலானே போற்றி
    34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
    35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
    36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
    37. ஓம் கம்பீர உருவனே போற்றி
    38. ஓம் குணநிதியே போற்றி
    39. ஓம் குருபரனே போற்றி
    40. ஓம் குறை களைவோனே போற்றி
    41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
    42. ஓம் கோயில் நாயகனே போற்றி
    43. ஓம் சிவபுரத்தனே போற்றி
    44. ஓம் சிவதூதனே போற்றி
    45. ஓம் சிவனடியானே போற்றி
    46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
    47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
    48. ஓம் சிவஞான போதகனே போற்றி
    49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
    50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
    51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
    52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
    53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
    54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
    55. ஓம் ஞானியே போற்றி
    56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
    57. ஓம் தருமவிடையே போற்றி
    58. ஓம் தயாபரனே போற்றி
    59. ஓம் தளையறுப்பவனே போற்றி
    60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
    61. ஓம் தவசீலனே போற்றி
    62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
    63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
    64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
    66. ஓம் நந்தியே போற்றி
    67. ஓம் நலமளிப்பவனே போற்றி
    68. ஓம் நமனை வென்றவனே போற்றி
    69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
    70. ஓம் நாடப்படுபவனே போற்றி
    71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
    72. ஓம் நாதனே போற்றி
    73. ஓம் நிமலனே போற்றி
    74. ஓம் நீறணிந்தவனே போற்றி
    75. ஓம் நீதி காப்பவனே போற்றி
    76. ஓம் பராக்கிரமனே போற்றி
    77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
    78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
    79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
    80. ஓம் பதமளிப்பவனே போற்றி
    81. ஓம் பர்வதமானவனே போற்றி
    82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
    83. ஓம் புண்ணியனே போற்றி
    84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
    85. ஓம் பெரியவனே போற்றி
    86. ஓம் பெருமையனே போற்றி
    87. ஓம் மஞ்சனே போற்றி
    88. ஓம் மலநாசகனே போற்றி
    89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
    90. ஓம் மறையே கால்களானவனே போற்றி
    91. ஓம் மால்விடையே போற்றி
    92. ஓம் மகாதேவனே போற்றி
    93. ஓம் முனியவனே போற்றி
    94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
    95. ஓம் யோகியே போற்றி
    96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
    97. ஓம் வள்ளலே போற்றி
    98. ஓம் வல்லாளா போற்றி
    99. ஓம் வித்தகனே போற்றி
    100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி
    101. ஓம் வீர உருவமே போற்றி
    102. ஓம் வீரபத்திரனே போற்றி
    103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
    104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
    106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
    107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
    108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி
    இந்த ஸ்லோகத்தைக் கூறி சிவபெருமானை வழிபட ஆரோக்கியம், ஆயுள், ஸம்பத்து முதலான சகல பாக்கியங்களும் உண்டாகும்.
    ஸுவர்ணபத்மினீ தடாந்ததிவ்ய ஹர்ம்யவாஸினே
    ஸுபர்ணவாஹனப்ரியாய ஸூர்யகோடி தேஜஸே
    அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ரதாரிணே
    ஸதா நமஸ்ஸிவாய தே ஸதாஸிவாய ஸம்பவே

    கருத்து: தங்கத் தாமரை நிறைந்த குளத்தின் கரையில் உள்ள ஸர்வோத்தமமான கோயிலில் வசிப்பவரும் கருடனை வாகனமாக உடைய மஹா விஷ்ணுவிடத்தில் ப்ரீதி உள்ளவரும், கோடி சூரியர்களுடைய ஒளியை உடையவரும், மீனாட்சியுடன் விளையாடுகிறவரும் ஸர்ப்பராஜனை சிரசில் தரித்திருக்கின்றவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்போதும் மங்களத்தைக் கொடுக்கிறவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்போதும் நமஸ்காரம்.
    முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம்.
    முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம். முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம். வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம். ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்.

    ஓம் நமோ பகவதே
    சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
    ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
    காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
    வீராய சூராய மக்தாய மஹா பலாய
    பக்தாய பக்த பரிபாலனாயா
    தனாய தனேஸ்வராய
    மம ஸர்வா பீஷ்டம்
    ப்ரயச்ச ஸ்வாஹா!
    ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
    ஓம் முருகா சரணம்!!!
    ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவதால் துன்பங்கள் தொலையும், ஆயுள் பெருகும். பிரச்னைகள் யாவும் நீங்கி நலம்பெறலாம். வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும்.
    நரசிம்ம காயத்ரீ

    வஜ்ரநகாய வித்மஹே
    தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
    தந்நோநாரஸிகும்ஹ ப்ரசோதயாத்:

    திருப்பல்லாண்டு

    எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
    வந்துவழிவழி யாட்செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்
    அந்தியம்போதில ரியுருவாகி அரியையழித்தவனை
    பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

    ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவதால் துன்பங்கள் தொலையும், ஆயுள் பெருகும். பிரச்னைகள் யாவும் நீங்கி நலம்பெறலாம். வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபடுவதும் துர்கையை வழிபடுவதும் மனதில் நம்பிக்கையை விதைக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.
    செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில்... இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வளம் சேர்க்கும்.

    வீட்டில் ராகுகால வேளையில் விளக்கேற்றுங்கள்.

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தந்நோ துர்கி ப்ரசோதயாத்

    எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.

    துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்காதேவியை சரணடைவோம்.
    சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரம் அதை ஜெபிப்பது சிறந்தது.
    சாய் பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது. அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத சக்தியாக விளங்குகிறார் என்பது சாய் பாபா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.

    விபூதி மந்திரம்:

    பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
    பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
    பரமார்த்த இஷ்டார்த்த மோகபஷ
    ப்ரதானம் பாபா விபூதிம் இதமஸ்ரயாமி

    இந்த மந்திரத்தை ஜபித்தபடி விபூதி அணிவதன் பயனாக, அந்த நாள் முழுக்க அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும், அந்த விபூதி கவசம் போல காக்கும். அது மட்டும் அல்லாமல் அன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாக அமையும் என்பது நம்பிக்கை.
    ×