என் மலர்
இஸ்லாம்
‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)
மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் மக்பிரத்’ - ‘இறைவனின் மன்னிப்பு கிடைக்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
‘இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்’ என்று திருக்குர்ஆன் (3:133) வலியுறுத்துகிறது.
புனித ரமலானில் ஒரு இறைவிசுவாசி நோன்பு நோற்பதன் மூலமாகவும், இரவில் நின்று வணங்குவதன் வாயிலாகவும், உபகாரம் புரிவதின் வழியாகவும், இறைவனை நினைவு கூர்வதின் உதவியாலும், சாதாரண தொழுகைகளின் செயலாலும் அவரின் பாவங் களுக்கு மன்னிப்பு கிடைத்து விடுகிறது.
‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமையில் இருந்து மறுவெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு இடையில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)
‘பாவத்தினால் முகத்தில் கறுமையும், மண்ணறையில் இருளும், உடலில் சோர்வும், உணவில் குறையும், மற்றவர்களின் மனங்களில் குரோதமும் ஏற்படுகிறது’ என இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் சென்று, கல்வி கற்க அமர்ந்த போது, ‘இறைவன் உனது உள்ளத்தில் ஜோதியை போட்டுள்ளான். எனவே, அதை பாவத்தின் இருளைக் கொண்டு அணைத்துவிடாதே’ என இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்.
‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் யாவும் உரியது, அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்’ என்று ஒருநாளில் நூறுமுறை கூறியவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாக நற்பலன் தரும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரை சைத்தானிடமிருந்து அது அவருக்கு அரணாக இருக்கும். அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்யமுடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் செய்தால், புரிந்தாலே தவிர என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை கூறுவாரோ, அவரின் தவறுகள் கடல் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் அழிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘நிச்சயமாக நற்செயல்கள் தீயசெயல்களை போக்கிவிடும்’ என்பது திருக்குர்ஆன் (11:114) நமக்கு அளிக்கும் உறுதிமொழியாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து மன்னிப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அதற்காக நோன்பாளிகள் விரைந்து கொண்டே இருக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
‘இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்’ என்று திருக்குர்ஆன் (3:133) வலியுறுத்துகிறது.
புனித ரமலானில் ஒரு இறைவிசுவாசி நோன்பு நோற்பதன் மூலமாகவும், இரவில் நின்று வணங்குவதன் வாயிலாகவும், உபகாரம் புரிவதின் வழியாகவும், இறைவனை நினைவு கூர்வதின் உதவியாலும், சாதாரண தொழுகைகளின் செயலாலும் அவரின் பாவங் களுக்கு மன்னிப்பு கிடைத்து விடுகிறது.
‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமையில் இருந்து மறுவெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு இடையில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)
‘பாவத்தினால் முகத்தில் கறுமையும், மண்ணறையில் இருளும், உடலில் சோர்வும், உணவில் குறையும், மற்றவர்களின் மனங்களில் குரோதமும் ஏற்படுகிறது’ என இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் சென்று, கல்வி கற்க அமர்ந்த போது, ‘இறைவன் உனது உள்ளத்தில் ஜோதியை போட்டுள்ளான். எனவே, அதை பாவத்தின் இருளைக் கொண்டு அணைத்துவிடாதே’ என இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்.
‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் யாவும் உரியது, அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்’ என்று ஒருநாளில் நூறுமுறை கூறியவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாக நற்பலன் தரும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரை சைத்தானிடமிருந்து அது அவருக்கு அரணாக இருக்கும். அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்யமுடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் செய்தால், புரிந்தாலே தவிர என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை கூறுவாரோ, அவரின் தவறுகள் கடல் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் அழிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘நிச்சயமாக நற்செயல்கள் தீயசெயல்களை போக்கிவிடும்’ என்பது திருக்குர்ஆன் (11:114) நமக்கு அளிக்கும் உறுதிமொழியாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து மன்னிப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அதற்காக நோன்பாளிகள் விரைந்து கொண்டே இருக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)
புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் மர்சூக்’ - ‘வாழ்வாதாரம் வழங்கப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
வாழ்வாதாரம் என்பது, உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, பொருட்செல்வம், குழந்தை செல்வம் ஆகியவை ஆகும். இத்தகைய வாழ்வாதாரம் வழங்கப்படும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து அத்தகைய வாழ்வாதாரத்தை இறைவனிடம் கேட்டுப்பெற முன்வரவேண்டும்.
‘அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது, அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்’ என்பது திருக்குர்ஆன் (44: 4,5) வசனமாகும்.
மேலும், விசாலமான வாழ்வாதாரம் கிடைத்திட காரணங்களாக அமைந்திருக்கும் சில அம்சங்களையும் புனித ரமலானில் நிறைவேற்றிட வேண்டும். அவை வருமாறு:
1) வாழ்வாதாரம் கிடைத்திட இறையச்சம் அவசியம். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘எவர் இறைவனை அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் ஒரு வழியை உண்டாக்குவான்; அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து அவன் வாழ்வாதாரங் (வசதி)களை அளிக்கிறான்’.(திருக்குர்ஆன் 65: 2,3)
2) தவறாமல் மழை பொழிந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயம் அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்று கூறினேன், (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்”. (திருக்குர்ஆன் 71: 10, 11)
‘அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட் செல்வங்களையும், குழந்தை செல்வங்களையும் கொண்டு உதவி செய்வான்; மேலும் உங்களுக்காகத் தோட்டங்களையும், ஆறுகளையும் உண்டாக்குவான்’. (திருக்குர்ஆன் 71: 12)
3) நலிந்தவர்களிடம் நலமாக நடப்பதின் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் என்பது பற்றிய நபி மொழி வருமாறு: ‘என்னை நலிந்தவர்களுடன் தேடிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்படுவதும், உதவி செய்யப்படுவதும் உங்களிலுள்ள நலிந்தவர்களால் தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)
4) பெற்றோரிடம் நலமாக நடப்பது, 5) உறவுகளுடன் ஒட்டி வாழ்வது ஆகியவற்றாலும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படும். இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:
‘எவர் தமக்கு நீடித்த ஆயுளும், விசாலமான வாழ்வாதாரமும் வழங்கப்பட வேண்டுமென மகிழ்கிறாரோ, அவர் தம் பெற்றோருக்கு நன்மை செய்யட்டும்; மேலும் தம் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மது)
‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)
மேற்கூறப்பட்ட அம்சங்கள் நமது வாழ்வாதாரம் கிடைப்பதற்குரிய செயல்பாடாகும். அவற்றை புனித ரமலான் மாதத்தில் செயல்படுத்தி வளமாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக, ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
வாழ்வாதாரம் என்பது, உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, பொருட்செல்வம், குழந்தை செல்வம் ஆகியவை ஆகும். இத்தகைய வாழ்வாதாரம் வழங்கப்படும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து அத்தகைய வாழ்வாதாரத்தை இறைவனிடம் கேட்டுப்பெற முன்வரவேண்டும்.
‘அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது, அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்’ என்பது திருக்குர்ஆன் (44: 4,5) வசனமாகும்.
மேலும், விசாலமான வாழ்வாதாரம் கிடைத்திட காரணங்களாக அமைந்திருக்கும் சில அம்சங்களையும் புனித ரமலானில் நிறைவேற்றிட வேண்டும். அவை வருமாறு:
1) வாழ்வாதாரம் கிடைத்திட இறையச்சம் அவசியம். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘எவர் இறைவனை அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் ஒரு வழியை உண்டாக்குவான்; அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து அவன் வாழ்வாதாரங் (வசதி)களை அளிக்கிறான்’.(திருக்குர்ஆன் 65: 2,3)
2) தவறாமல் மழை பொழிந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயம் அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்று கூறினேன், (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்”. (திருக்குர்ஆன் 71: 10, 11)
‘அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட் செல்வங்களையும், குழந்தை செல்வங்களையும் கொண்டு உதவி செய்வான்; மேலும் உங்களுக்காகத் தோட்டங்களையும், ஆறுகளையும் உண்டாக்குவான்’. (திருக்குர்ஆன் 71: 12)
3) நலிந்தவர்களிடம் நலமாக நடப்பதின் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் என்பது பற்றிய நபி மொழி வருமாறு: ‘என்னை நலிந்தவர்களுடன் தேடிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்படுவதும், உதவி செய்யப்படுவதும் உங்களிலுள்ள நலிந்தவர்களால் தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)
4) பெற்றோரிடம் நலமாக நடப்பது, 5) உறவுகளுடன் ஒட்டி வாழ்வது ஆகியவற்றாலும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படும். இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:
‘எவர் தமக்கு நீடித்த ஆயுளும், விசாலமான வாழ்வாதாரமும் வழங்கப்பட வேண்டுமென மகிழ்கிறாரோ, அவர் தம் பெற்றோருக்கு நன்மை செய்யட்டும்; மேலும் தம் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மது)
‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)
மேற்கூறப்பட்ட அம்சங்கள் நமது வாழ்வாதாரம் கிடைப்பதற்குரிய செயல்பாடாகும். அவற்றை புனித ரமலான் மாதத்தில் செயல்படுத்தி வளமாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக, ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்லாம்’ - ‘இஸ்லாமிய கலாச்சார மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
‘இஸ்லாம்’ என்பதன் பொருள் கட்டுப்படுதல், அமைதி காத்தல், அடிபணிதல், அபயம் அளித்தல் போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியது.
‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்’ எனும் ஏகத்துவத்தை மொழிந்த ஒரு முஸ்லிம் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு, வணக்க வழிபாடுகளுக்கு, இஸ்லாமிய கடமைகளுக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாத்தின் உண்மையான அர்த்தம் ஆகும். இதுகுறித்த நபி மொழி வருமாறு:
வானவர்களின் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்கள் ஒருமுறை மனித உருவத்தில் வந்து, நபி (ஸல்) அவர்களை சந்தித்து, ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இறைவனை வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்கூடாது; கடமையான தொழுகைகளையும், கடமையான ஜகாத்தையும், ரமலான் மாத கடமையான நோன்பையும், கடமையான ஹஜ்ஜையும் நிறைவேற்றிட வேண்டும்’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.
அதிலும், குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் கலாச்சார செயல்பாடுகளையும், வணக்க வழிபாடுகளையும் அதிகம் வெளிப்படுத்த வேண்டும். மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு உட்பட அனைத்து வழிபாடுகளையும் தீவிரமாக முழுவீச்சில் செயலாற்றுவதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.
மேலும், இஸ்லாம் என்பது அமைதியை தன்னுள் வைத்திருப்பதால் ரமலானிலும், மற்ற மாதங்களிலும் முஸ்லிம்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ, அவரே உண்மையான முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டதற்கு, ‘பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளையும், பிறருக்கு செய்ய வேண்டிய உரிமைகளையும், பிறருக்கு நோவினை தருவதிலிருந்து தவிர்ந்திருப்பதும், பசித்தவருக்கு உணவளிப்பதையும் தான் இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.
இந்த கடமைகளை செய்ய நம் அனைவருக்கும் வழிகாட்டுவது தான் இந்த புனித ரமலான் மாதத்தின் கலாச்சாரம். இறையச்சத்துடன்கூடிய இறைவழிபாடு, பசித்தோருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவுவது போன்ற நற்செயல்களை நாம் ரமலானில் கடைப்பிடிப்பது போன்று வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம். இறையருள் பெற்று நிறைவான வாழ்வை ஈருலகிலும் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
‘இஸ்லாம்’ என்பதன் பொருள் கட்டுப்படுதல், அமைதி காத்தல், அடிபணிதல், அபயம் அளித்தல் போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியது.
‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்’ எனும் ஏகத்துவத்தை மொழிந்த ஒரு முஸ்லிம் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு, வணக்க வழிபாடுகளுக்கு, இஸ்லாமிய கடமைகளுக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாத்தின் உண்மையான அர்த்தம் ஆகும். இதுகுறித்த நபி மொழி வருமாறு:
வானவர்களின் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்கள் ஒருமுறை மனித உருவத்தில் வந்து, நபி (ஸல்) அவர்களை சந்தித்து, ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இறைவனை வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்கூடாது; கடமையான தொழுகைகளையும், கடமையான ஜகாத்தையும், ரமலான் மாத கடமையான நோன்பையும், கடமையான ஹஜ்ஜையும் நிறைவேற்றிட வேண்டும்’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.
அதிலும், குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் கலாச்சார செயல்பாடுகளையும், வணக்க வழிபாடுகளையும் அதிகம் வெளிப்படுத்த வேண்டும். மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு உட்பட அனைத்து வழிபாடுகளையும் தீவிரமாக முழுவீச்சில் செயலாற்றுவதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.
மேலும், இஸ்லாம் என்பது அமைதியை தன்னுள் வைத்திருப்பதால் ரமலானிலும், மற்ற மாதங்களிலும் முஸ்லிம்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ, அவரே உண்மையான முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டதற்கு, ‘பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளையும், பிறருக்கு செய்ய வேண்டிய உரிமைகளையும், பிறருக்கு நோவினை தருவதிலிருந்து தவிர்ந்திருப்பதும், பசித்தவருக்கு உணவளிப்பதையும் தான் இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.
இந்த கடமைகளை செய்ய நம் அனைவருக்கும் வழிகாட்டுவது தான் இந்த புனித ரமலான் மாதத்தின் கலாச்சாரம். இறையச்சத்துடன்கூடிய இறைவழிபாடு, பசித்தோருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவுவது போன்ற நற்செயல்களை நாம் ரமலானில் கடைப்பிடிப்பது போன்று வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம். இறையருள் பெற்று நிறைவான வாழ்வை ஈருலகிலும் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.
மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தவ்பா’ - ‘மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.
1) தனது தவறை உணர்ந்து, அதிலிருந்து விடுபடுவது, 2) தான் செய்த தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு கேட்பது, 3) இனி ஒருபோதும் தவறு செய்யமாட்டேன் என சபதம் எடுப்பது. இம்மூன்று வழிகளை ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் அவனை இறைவன் மன்னித்து விடுகின்றான்.
ஒரு முஸ்லிம் சகமனிதருக்கு துரோகம் செய்தாலோ, தவறிழைத்தாலோ அதுவும் பாவம். இந்த பாவத்திலிருந்து விடுபட நினைப்பவர் மேற்கூறப்பட்ட மூன்று வழிகளையும் கடைப்பிடிப்பதுடன் நான்காவது காரியமாக தவறிழைக்கப்பட்ட மனிதரிடம் சென்று தவறுக்கு தக்கவாறு பரிகாரம் தேடவேண்டும்.
பொருள் ரீதியாக துரோகம் செய்தால், அந்தப் பொருளை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்; உடல்ரீதியாக தவறிழைத்தாலோ, உளரீதியாக காயம் ஏற்படுத்தினாலோ, அதற்குரிய பரிகாரம் என்னவோ அதை நிறைவேற்றி நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும். மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் பக்குவத்தை புனித ரமலான் கற்றுத் தருகிறது.
மனந்திருந்தி மனிதப்புனிதனாக வாழ, ரமலானில் அதிகமாக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்துகிறது:
‘இறைநம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதுடன் இறைவனிடம் மனந்திருந்தி பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்களின் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்’ (திருக்குர்ஆன் 66:8)
“நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபதுக்கும் அதிகமான தடவை ‘இறைவா! நான் உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டி, மனந்திருந்தி வருகிறேன்’ என்பதை ஓதி வருவார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ, தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து இருந்தது. அவனது உணவும், பானமும் வைக்கப்பட்டிருந்த அவனது வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழே வைத்து ஒரு குட்டித் தூக்கம் தூங்கி எழுந்தான். அந்தநேரத்தில் அவனது வாகனப் பிராணி தப்பி ஓடிப் போயிருந்தது. எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான். அப்போது அவனுக்குக் கடுமையான வெப்பமும், தாகமும், அல்லது அல்லாஹ் நாடிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றான். பிறகு ஒரு குட்டித் தூக்கம் தூங்கி, பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தனது பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டு அவன் எந்தளவு மகிழ்வானோ, அதைவிடத் தன் அடியான் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டும்போது அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)
புனித ரமலானில் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்போம். இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.
1) தனது தவறை உணர்ந்து, அதிலிருந்து விடுபடுவது, 2) தான் செய்த தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு கேட்பது, 3) இனி ஒருபோதும் தவறு செய்யமாட்டேன் என சபதம் எடுப்பது. இம்மூன்று வழிகளை ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் அவனை இறைவன் மன்னித்து விடுகின்றான்.
ஒரு முஸ்லிம் சகமனிதருக்கு துரோகம் செய்தாலோ, தவறிழைத்தாலோ அதுவும் பாவம். இந்த பாவத்திலிருந்து விடுபட நினைப்பவர் மேற்கூறப்பட்ட மூன்று வழிகளையும் கடைப்பிடிப்பதுடன் நான்காவது காரியமாக தவறிழைக்கப்பட்ட மனிதரிடம் சென்று தவறுக்கு தக்கவாறு பரிகாரம் தேடவேண்டும்.
பொருள் ரீதியாக துரோகம் செய்தால், அந்தப் பொருளை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்; உடல்ரீதியாக தவறிழைத்தாலோ, உளரீதியாக காயம் ஏற்படுத்தினாலோ, அதற்குரிய பரிகாரம் என்னவோ அதை நிறைவேற்றி நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும். மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் பக்குவத்தை புனித ரமலான் கற்றுத் தருகிறது.
மனந்திருந்தி மனிதப்புனிதனாக வாழ, ரமலானில் அதிகமாக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்துகிறது:
‘இறைநம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதுடன் இறைவனிடம் மனந்திருந்தி பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்களின் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்’ (திருக்குர்ஆன் 66:8)
“நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபதுக்கும் அதிகமான தடவை ‘இறைவா! நான் உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டி, மனந்திருந்தி வருகிறேன்’ என்பதை ஓதி வருவார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ, தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து இருந்தது. அவனது உணவும், பானமும் வைக்கப்பட்டிருந்த அவனது வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழே வைத்து ஒரு குட்டித் தூக்கம் தூங்கி எழுந்தான். அந்தநேரத்தில் அவனது வாகனப் பிராணி தப்பி ஓடிப் போயிருந்தது. எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான். அப்போது அவனுக்குக் கடுமையான வெப்பமும், தாகமும், அல்லது அல்லாஹ் நாடிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றான். பிறகு ஒரு குட்டித் தூக்கம் தூங்கி, பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தனது பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டு அவன் எந்தளவு மகிழ்வானோ, அதைவிடத் தன் அடியான் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டும்போது அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)
புனித ரமலானில் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்போம். இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல் முஃமினீன்’- ‘இறைவிசுவாசிகளின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.
ஏனெனில், புனித ரமலான் வந்துவிட்டால், முஸ்லிம்களின் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறந்து விடுகின்றது. நோன்பு வைப்பது, இறைவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படுகிறது.
இதற்கு காரணம், புனித ரமலான் வந்துவிட்டால், சுவனம் அலங்காரம் செய்யப்படுகிறது; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; மேலும் வானத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. சுவனத்தின் வசந்தம் வானத்தின் வழியாக இவ்வையகத்திற்கு வந்து சேரும் மாதம் புனித ரமலான் மாதம் என்கிறது இந்த நபி மொழிகள்:
‘ரமலான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. 1) நோன்பு திறக்கும் நேரம்; 2) தமது இறைவனை காணும் நேரம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
உண்மையான வசந்தகாலம் பரிசாகத் தரக்கூடிய எல்லாவிதமான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், இதமான சந்தோஷங்களையும் புனித ரமலான் இறைவிசுவாசிகளுக்கு கொடையாக அளிக்கிறது. உண்மையான விசுவாசிகளுக்கு ரமலான் மாதமும் ஒரு வசந்தகாலம் தான்.
‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி)
‘சொர்க்கத்தில் எட்டுவாசல் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசலும் உண்டு. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி)
‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் ஒவ்வொன்றில் இருந்தும் ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்தது; இதன் வழியாகப் பிரவேசியுங்கள்’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளி ‘தொழுகை வாசலிலிருந்தும், அறப்போர் புரிபவர் ‘ஜிஹாத்’ வாசலிலிருந்தும், தர்மம் செய்பவர் ‘ஸதகா’ வாசலிலிருந்தும், நோன்பாளி ‘ரய்யான்’ வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துன்பம் ஏதும் இருக்காது; அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
நாமும் ரமலான் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி சொர்க்கத்தை பரிசாகப் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.
ஏனெனில், புனித ரமலான் வந்துவிட்டால், முஸ்லிம்களின் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறந்து விடுகின்றது. நோன்பு வைப்பது, இறைவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படுகிறது.
இதற்கு காரணம், புனித ரமலான் வந்துவிட்டால், சுவனம் அலங்காரம் செய்யப்படுகிறது; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; மேலும் வானத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. சுவனத்தின் வசந்தம் வானத்தின் வழியாக இவ்வையகத்திற்கு வந்து சேரும் மாதம் புனித ரமலான் மாதம் என்கிறது இந்த நபி மொழிகள்:
‘ரமலான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. 1) நோன்பு திறக்கும் நேரம்; 2) தமது இறைவனை காணும் நேரம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
உண்மையான வசந்தகாலம் பரிசாகத் தரக்கூடிய எல்லாவிதமான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், இதமான சந்தோஷங்களையும் புனித ரமலான் இறைவிசுவாசிகளுக்கு கொடையாக அளிக்கிறது. உண்மையான விசுவாசிகளுக்கு ரமலான் மாதமும் ஒரு வசந்தகாலம் தான்.
‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி)
‘சொர்க்கத்தில் எட்டுவாசல் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசலும் உண்டு. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி)
‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் ஒவ்வொன்றில் இருந்தும் ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்தது; இதன் வழியாகப் பிரவேசியுங்கள்’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளி ‘தொழுகை வாசலிலிருந்தும், அறப்போர் புரிபவர் ‘ஜிஹாத்’ வாசலிலிருந்தும், தர்மம் செய்பவர் ‘ஸதகா’ வாசலிலிருந்தும், நோன்பாளி ‘ரய்யான்’ வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துன்பம் ஏதும் இருக்காது; அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
நாமும் ரமலான் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி சொர்க்கத்தை பரிசாகப் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
பொதுமக்கள் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் அளவில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் அளவில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது எனவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் வாழுர், சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டுவரும் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் ஆற்றங்கரை தஸ்தகீர், செயலாளர் அழகன்குளம் பக்ருல் அமீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இதற்கான அறிவிப்புகளை செய்துள்ளனர். முழுஊரடங்கை தொடர்ந்து வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
நேற்று இரவு 9 மணி வரை கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். வெளிமாவட்டங்களில் வேலை செய்து சனி, ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரக்கூடியவர்கள் யாரும் வரவில்லை. வேலை செய்யும் இடத்திலேயே தங்கினர்.
மேலும் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது எனவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் வாழுர், சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டுவரும் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் ஆற்றங்கரை தஸ்தகீர், செயலாளர் அழகன்குளம் பக்ருல் அமீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இதற்கான அறிவிப்புகளை செய்துள்ளனர். முழுஊரடங்கை தொடர்ந்து வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
நேற்று இரவு 9 மணி வரை கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். வெளிமாவட்டங்களில் வேலை செய்து சனி, ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரக்கூடியவர்கள் யாரும் வரவில்லை. வேலை செய்யும் இடத்திலேயே தங்கினர்.
ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.
மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்திஃக்பார்’ - ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.
பாவமன்னிப்பு வழங்கப்படும் ரமலான் மாதத்தில் ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறியதோ, பெரியதோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செய்த பாவங்களுக்கும், முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
‘அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்?’ (திருக்குர்ஆன் 3:135)
‘(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:106)
‘ஆதமுடைய மக்கள் யாவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவிகளில் சிறந்தவர்கள் பாவமீட்சி பெறக்கூடியவர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பாவமன்னிப்பு தேடுவதால் ஏற்படும் பயன்கள் வருமாறு:-
1) மன அமைதி ஏற்படுகிறது, 2) உள்ளம் சாந்தம் அடைகிறது, 3) உடல் வலுவடைகிறது, 4) நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, 5) தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது, 6) மழை பொழிகிறது, 7) விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, 8) பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது, 9) பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது, 10) சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றது, 11) ஷைத்தானின் அதிருப்தியும், இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது, 12) கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியும், வசதியும் ஏற்படுகிறது, 13) இறைவனின் அன்பு கிடைக்கிறது, 14) உள்ளம் உயிர் பெறுகிறது, 15) அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, 16) மறுமையில் அபயம் கிடைக்கிறது, 17) வணக்க வழிபாடுகளில் இனிமை கிடைக்கிறது.
இன்னும் இதுபோல ஏராளமான பலன்கள் கிடைப்பதால், புனித ரமலானில் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டு பலன்களை பெற முன்வரவேண்டும்.
‘இறைவா நீயே எனது எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக. உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது’ என்ற பிரார்த்தனையை ஒருவர் பகலில் ஓதி விட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாசியாவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)
எனவே, புனித ரமலானில் இரவிலும், பகலிலும் பாவமன்னிப்பு வேண்டுவதில் தலைசிறந்த இந்த பிரார்த்தனையை அதிகம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாவங்களில் இருந்து மீட்சி பெற்று சொர்க்கவாசிகளாக மாறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.
பாவமன்னிப்பு வழங்கப்படும் ரமலான் மாதத்தில் ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறியதோ, பெரியதோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செய்த பாவங்களுக்கும், முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
‘அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்?’ (திருக்குர்ஆன் 3:135)
‘(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:106)
‘ஆதமுடைய மக்கள் யாவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவிகளில் சிறந்தவர்கள் பாவமீட்சி பெறக்கூடியவர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பாவமன்னிப்பு தேடுவதால் ஏற்படும் பயன்கள் வருமாறு:-
1) மன அமைதி ஏற்படுகிறது, 2) உள்ளம் சாந்தம் அடைகிறது, 3) உடல் வலுவடைகிறது, 4) நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, 5) தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது, 6) மழை பொழிகிறது, 7) விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, 8) பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது, 9) பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது, 10) சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றது, 11) ஷைத்தானின் அதிருப்தியும், இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது, 12) கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியும், வசதியும் ஏற்படுகிறது, 13) இறைவனின் அன்பு கிடைக்கிறது, 14) உள்ளம் உயிர் பெறுகிறது, 15) அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, 16) மறுமையில் அபயம் கிடைக்கிறது, 17) வணக்க வழிபாடுகளில் இனிமை கிடைக்கிறது.
இன்னும் இதுபோல ஏராளமான பலன்கள் கிடைப்பதால், புனித ரமலானில் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டு பலன்களை பெற முன்வரவேண்டும்.
‘இறைவா நீயே எனது எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக. உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது’ என்ற பிரார்த்தனையை ஒருவர் பகலில் ஓதி விட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாசியாவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)
எனவே, புனித ரமலானில் இரவிலும், பகலிலும் பாவமன்னிப்பு வேண்டுவதில் தலைசிறந்த இந்த பிரார்த்தனையை அதிகம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாவங்களில் இருந்து மீட்சி பெற்று சொர்க்கவாசிகளாக மாறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் பரகத்’ - ‘அபிவிருத்தி நிறைந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
இஸ்லாத்தின் பார்வையில் ‘அபிவிருத்தி’ என்பதற்கு அர்த்தம் ‘பொருள் குறைவு-பயன் அதிகம்’ அல்லது ‘சேவை குறைவு-நன்மை அதிகம்’, ‘வணக்கம் குறைவு-பிரதிபலன் அதிகம்’ என்பதாகும். இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும், ஒவ்வொரு தர்மத்திற்கும், ஒவ்வொரு நற்கருமத்திற்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது:
‘ஆதமின் மகன் நிறைவேற்றும் ஒவ்வொரு செயலுக்கும் பன்மடங்கு நன்மை வழங்கப்படும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கிலிருந்து ஏழு நூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படும். எனினும் நோன்பைத் தவிர. அது எனக்கு மட்டுமே உரியது. எனக்காக அவன் தமது உணவையும், தமது இச்சையையும் விட்டுவிடுகின்றான். அவனுக்கு நானே நேரடியாக கூலி வழங்குகிறேன்’ என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘எவர் ரமலானில் நன்மைகளில் இருந்து ஏதேனும் ஒரு நன்மையை உபரியாக செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் ஒரு (பர்ளை) கடமையை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார். எவர் ரமலானில் ஒரு கடமையை நிறைவேற்றுகிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார்’. (நபிமொழி)
அத்தகைய அபிவிருத்தி நிறைந்த இந்த மாதத்தில் ‘ஸஹர் நேரம்’ ஒரு அபிவிருத்தி நிறைந்த நேரமாக இருக்கிறது.
‘ஸஹர் உணவை உண்ணுங்கள். நிச்சயமாக ஸஹர் உணவுகளில் அபிவிருத்தி நிறைந்துள்ளதாக நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)
‘எவர் நோன்பு நோற்க நினைக்கிறாரோ அவர் ஏதேனும் ஒரு உணவைக் கொண்டு ஸஹர் செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)
மேலும், ஸஹர் நேரத்தில் நிறைவேற்றப்படும் ‘தஹஜ்ஜத்’ எனும் நடுநிசி நேரத் தொழுகையும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. நோன்பு திறக்கும் நேரமான இப்தார் நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அந்தநேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் மறுக்கப்படாமல் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், பாங்கு மற்றும் இகாமத் இடையே உள்ள நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.
மொத்தத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது. ஒரு நன்மைக்கு பல மடங்கு நன்மை தரும் இந்த அபிவிருத்தி ரமலான் முழுவதும் வியாபித்திருக்கிறது.
‘எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 6:160)
எனவே இந்த ரமலானில் அதிக நன்மைகளைச்செய்து அதற்கு பலனாக பல மடங்கு நற்கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்வோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
இஸ்லாத்தின் பார்வையில் ‘அபிவிருத்தி’ என்பதற்கு அர்த்தம் ‘பொருள் குறைவு-பயன் அதிகம்’ அல்லது ‘சேவை குறைவு-நன்மை அதிகம்’, ‘வணக்கம் குறைவு-பிரதிபலன் அதிகம்’ என்பதாகும். இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும், ஒவ்வொரு தர்மத்திற்கும், ஒவ்வொரு நற்கருமத்திற்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது:
‘ஆதமின் மகன் நிறைவேற்றும் ஒவ்வொரு செயலுக்கும் பன்மடங்கு நன்மை வழங்கப்படும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கிலிருந்து ஏழு நூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படும். எனினும் நோன்பைத் தவிர. அது எனக்கு மட்டுமே உரியது. எனக்காக அவன் தமது உணவையும், தமது இச்சையையும் விட்டுவிடுகின்றான். அவனுக்கு நானே நேரடியாக கூலி வழங்குகிறேன்’ என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘எவர் ரமலானில் நன்மைகளில் இருந்து ஏதேனும் ஒரு நன்மையை உபரியாக செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் ஒரு (பர்ளை) கடமையை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார். எவர் ரமலானில் ஒரு கடமையை நிறைவேற்றுகிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார்’. (நபிமொழி)
அத்தகைய அபிவிருத்தி நிறைந்த இந்த மாதத்தில் ‘ஸஹர் நேரம்’ ஒரு அபிவிருத்தி நிறைந்த நேரமாக இருக்கிறது.
‘ஸஹர் உணவை உண்ணுங்கள். நிச்சயமாக ஸஹர் உணவுகளில் அபிவிருத்தி நிறைந்துள்ளதாக நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)
‘எவர் நோன்பு நோற்க நினைக்கிறாரோ அவர் ஏதேனும் ஒரு உணவைக் கொண்டு ஸஹர் செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)
மேலும், ஸஹர் நேரத்தில் நிறைவேற்றப்படும் ‘தஹஜ்ஜத்’ எனும் நடுநிசி நேரத் தொழுகையும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. நோன்பு திறக்கும் நேரமான இப்தார் நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அந்தநேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் மறுக்கப்படாமல் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், பாங்கு மற்றும் இகாமத் இடையே உள்ள நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.
மொத்தத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது. ஒரு நன்மைக்கு பல மடங்கு நன்மை தரும் இந்த அபிவிருத்தி ரமலான் முழுவதும் வியாபித்திருக்கிறது.
‘எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 6:160)
எனவே இந்த ரமலானில் அதிக நன்மைகளைச்செய்து அதற்கு பலனாக பல மடங்கு நற்கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்வோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
புனித ரமலானுக்கு ஷஹ்ரு ளியாபதுல்லாஹ்- இறைவனின் விருந்தினர் மாதம் என்ற தத்துவப்பெயரும் உண்டு.
அரபி வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் புனித ரமலான் எல்லாம் வல்ல இறைவனின் விருந்தாளி மாதம் எனும் சிறப்பு பெயரை பெறுகிறது. விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
விருந்தாளிக்கென ஒரு மரியாதை இஸ்லாத்தில் உண்டு. புனித ரமலான் சாதாரண விருந்தாளியாக வரவில்லை. இறைவனின் விருந்தாளியாக நம் வசம் வந்துள்ளது. . அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை என்ன தெரியுமா? அந்த மாதம் முழுவதும் பகல் காலங்களில் நோன்பிருந்து இரவு நேரங்களில் நின்று வணங்குவதாகும்.
அரபு இலக்கியத்தில் மூன்று வகையான விருந்தோம்பல்கள் உண்டு.
1. தஃவதுல் அரப்: அரபிகளின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது
2. தஃவதுல் அஷ்ராப் : கண்ணியமானவர்களின் விருந்து இது விருந்தினருக்கு முன்னிலையில் உணவை வைத்து விட்டு சென்று விடுவது. அவர்கள் விரும்பியவாறு சாப்பிட வசதியாக.
3. தஃவதே கிலாப் : நன்றியுள்ள பிராணி (நாய்)யின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. உணவை வைத்து விட்டு செல்வதுமில்லை. மிஞ்சினால் உண்ணுவது.
விருந்தினருக்கு மரியாதை செய்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம் என்பது நபிமொழியாகும்.
இறைவனையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது விருந்தினருக்கு சங்கை செய்யட்டும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)
விருந்தளிப்பது மூன்று நாட்களாகும். அதற்கு பிறகு அது தர்மமாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைஸ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) (நூல்:புகாரி)
இப்ராகீமின் (அலை) கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (திருக்குர்ஆன் 51:24) என்று கூறி இறைவன் விருந்தின் மேன்மையையும் சொல்ல தவறவில்லை. விருந்தினரின் மகிமை அறிந்து புனித ரமலானில் மரியாதை செலுத்திடுவோம்.
இறைவனின் விருந்தாளியாக வலம் வரும் மாதங்கள் இரண்டு. 1. பொது விருந்தாளி, 2. சிறப்பு விருந்தாளி. பொது விருந்தாளி மாதம் என்பது புனிதரமலான் மாதம் ஆகும். சிறப்பு விருந்தாளி என்பது புனித ஹஜ் மாதம் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அரை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி(ஸல்)அவர்கள் அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மை சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி)
இறைவிருந்தினர் மூவர் ஆவர். 1. இறைவழியில் போராடும் போராளி, 2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜி, 3. உம்ரா பயணம் செய்யும் பிரியாணி என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : நஸயீ).
புனித ரமலான் காலத்தில் நோன்பாளிகளையும், விருந்தினர்களையும் உபசரித்து இறையருள் பெறுவோம்.
மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
அரபி வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் புனித ரமலான் எல்லாம் வல்ல இறைவனின் விருந்தாளி மாதம் எனும் சிறப்பு பெயரை பெறுகிறது. விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
விருந்தாளிக்கென ஒரு மரியாதை இஸ்லாத்தில் உண்டு. புனித ரமலான் சாதாரண விருந்தாளியாக வரவில்லை. இறைவனின் விருந்தாளியாக நம் வசம் வந்துள்ளது. . அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை என்ன தெரியுமா? அந்த மாதம் முழுவதும் பகல் காலங்களில் நோன்பிருந்து இரவு நேரங்களில் நின்று வணங்குவதாகும்.
அரபு இலக்கியத்தில் மூன்று வகையான விருந்தோம்பல்கள் உண்டு.
1. தஃவதுல் அரப்: அரபிகளின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது
2. தஃவதுல் அஷ்ராப் : கண்ணியமானவர்களின் விருந்து இது விருந்தினருக்கு முன்னிலையில் உணவை வைத்து விட்டு சென்று விடுவது. அவர்கள் விரும்பியவாறு சாப்பிட வசதியாக.
3. தஃவதே கிலாப் : நன்றியுள்ள பிராணி (நாய்)யின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. உணவை வைத்து விட்டு செல்வதுமில்லை. மிஞ்சினால் உண்ணுவது.
விருந்தினருக்கு மரியாதை செய்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம் என்பது நபிமொழியாகும்.
இறைவனையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது விருந்தினருக்கு சங்கை செய்யட்டும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)
விருந்தளிப்பது மூன்று நாட்களாகும். அதற்கு பிறகு அது தர்மமாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைஸ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) (நூல்:புகாரி)
இப்ராகீமின் (அலை) கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (திருக்குர்ஆன் 51:24) என்று கூறி இறைவன் விருந்தின் மேன்மையையும் சொல்ல தவறவில்லை. விருந்தினரின் மகிமை அறிந்து புனித ரமலானில் மரியாதை செலுத்திடுவோம்.
இறைவனின் விருந்தாளியாக வலம் வரும் மாதங்கள் இரண்டு. 1. பொது விருந்தாளி, 2. சிறப்பு விருந்தாளி. பொது விருந்தாளி மாதம் என்பது புனிதரமலான் மாதம் ஆகும். சிறப்பு விருந்தாளி என்பது புனித ஹஜ் மாதம் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அரை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி(ஸல்)அவர்கள் அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மை சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி)
இறைவிருந்தினர் மூவர் ஆவர். 1. இறைவழியில் போராடும் போராளி, 2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜி, 3. உம்ரா பயணம் செய்யும் பிரியாணி என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : நஸயீ).
புனித ரமலான் காலத்தில் நோன்பாளிகளையும், விருந்தினர்களையும் உபசரித்து இறையருள் பெறுவோம்.
மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன்பு இருந்த சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் திருக்குர்ஆனில் (2:183) குறிப்பிடுகின்றான்.
ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே, அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல், பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கி உள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கி உள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச் செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்”.
இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழவேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்தமாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தைப் பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான்: ‘உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்துக்கொள்’.
எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்கத் தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘வருடத்தில் ஒரு மாதம் தானே நோன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே’.
மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளைப்பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம்பெற உதவும் இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலானில் நாம் அதிகமதிகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.
மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்துக்கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து, ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள்.
அப்போது அவர்களைப்பார்த்து இறைவன், ‘நீங்கள் அனைவரும் ‘ரய்யான்’ என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழி மூடப்படும்.
“எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரோ அவருக்கு, மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும்.
எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.
இந்த ரமலான் முழுவதும் பிறர் நலன் பேணிவாழக்கூடிய நல்ல மக்களாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருளுவானாக, ஆமின்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன்பு இருந்த சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் திருக்குர்ஆனில் (2:183) குறிப்பிடுகின்றான்.
ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே, அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல், பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கி உள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கி உள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச் செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்”.
இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழவேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்தமாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தைப் பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான்: ‘உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்துக்கொள்’.
எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்கத் தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘வருடத்தில் ஒரு மாதம் தானே நோன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே’.
மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளைப்பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம்பெற உதவும் இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலானில் நாம் அதிகமதிகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.
மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்துக்கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து, ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள்.
அப்போது அவர்களைப்பார்த்து இறைவன், ‘நீங்கள் அனைவரும் ‘ரய்யான்’ என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழி மூடப்படும்.
“எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரோ அவருக்கு, மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும்.
எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.
இந்த ரமலான் முழுவதும் பிறர் நலன் பேணிவாழக்கூடிய நல்ல மக்களாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருளுவானாக, ஆமின்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருஸ் ஸப்ர்’ - ‘பொறுமையின் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)
ஒருவருக்கு பசி ஏற்பட்டால், அவர் தன்னை கட்டுப்படுத்துவது சிரமம். பசியும், தாகமும் மனிதனை பாடாய்படுத்திவிடும். பசித்தவன் பொறுமையுடன் இருப்பது முடியாத காரியம். இந்த நிலையிலும் ஒரு நோன்பாளி அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.
ஒரு நோன்பாளிக்கு சண்டை ஏற்படும் சூழ்நிலை வந்தாலும், அதில் அவர் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும் என நபி (ஸல்) பின்வருமாறு உபதேசிக்கிறார்கள்:
“யாரேனும் நோன்பாளியுடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால், ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
சகிப்புத்தன்மை புனிதமானது; தெய்வீகமானது. அவசர நிலை; மனித இயல்பு. ரமலான் மாதம் தெய்வீகத்தன்மையை மனிதனுக்கு பழக்கப்படுத்தி, அவனை பக்குவப்படுத்துகிறது.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் வருமாறு:-
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)
பொறுமை மூன்று வகை: 1) பாவங்களையும், தடுக்கப்பட்டவைகளையும் செய்வதிலிருந்து சகித்து இருப்பது, 2) தொடர்ந்து நன்மைகள் செய்வதற்கு பொறுமையாக இருப்பது, 3) சோதனைகள் மீது பொறுமையை கடைப்பிடிப்பது. இந்த மூன்று நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கடைப்பிடிப்பது தான் உண்மையான பொறுமை.
இந்த பொறுமையை ரமலான் மாத நோன்பின் வழியாக மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால், ரமலான் மாதம் பொறுமைக்குரிய மாதம். சோதனை காலத்தில் பொறுமையை வலியுறுத்தும் பக்குவம் நோன்புக்கு மட்டுமே உண்டு.
‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
ஆயிஷா (ரலி) கூறினார்: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்கள் மீது இறைவன் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான். மேலும், கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் பொறுமையாளராகவும், இறை வெகுமதியை விரும்பியவராகவும், இறைவன் நமக்கு எழுதியுள்ள விதிப்படியே தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது எனும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)
எனவே, நோய்கள் வடிவில் எத்தனை சோதனை வந்தாலும், அதை நாம் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அந்தப் பொறுமையே நமக்கு நற்பலனை பெற்றுத்தரும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)
ஒருவருக்கு பசி ஏற்பட்டால், அவர் தன்னை கட்டுப்படுத்துவது சிரமம். பசியும், தாகமும் மனிதனை பாடாய்படுத்திவிடும். பசித்தவன் பொறுமையுடன் இருப்பது முடியாத காரியம். இந்த நிலையிலும் ஒரு நோன்பாளி அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.
ஒரு நோன்பாளிக்கு சண்டை ஏற்படும் சூழ்நிலை வந்தாலும், அதில் அவர் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும் என நபி (ஸல்) பின்வருமாறு உபதேசிக்கிறார்கள்:
“யாரேனும் நோன்பாளியுடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால், ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
சகிப்புத்தன்மை புனிதமானது; தெய்வீகமானது. அவசர நிலை; மனித இயல்பு. ரமலான் மாதம் தெய்வீகத்தன்மையை மனிதனுக்கு பழக்கப்படுத்தி, அவனை பக்குவப்படுத்துகிறது.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் வருமாறு:-
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)
பொறுமை மூன்று வகை: 1) பாவங்களையும், தடுக்கப்பட்டவைகளையும் செய்வதிலிருந்து சகித்து இருப்பது, 2) தொடர்ந்து நன்மைகள் செய்வதற்கு பொறுமையாக இருப்பது, 3) சோதனைகள் மீது பொறுமையை கடைப்பிடிப்பது. இந்த மூன்று நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கடைப்பிடிப்பது தான் உண்மையான பொறுமை.
இந்த பொறுமையை ரமலான் மாத நோன்பின் வழியாக மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால், ரமலான் மாதம் பொறுமைக்குரிய மாதம். சோதனை காலத்தில் பொறுமையை வலியுறுத்தும் பக்குவம் நோன்புக்கு மட்டுமே உண்டு.
‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
ஆயிஷா (ரலி) கூறினார்: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்கள் மீது இறைவன் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான். மேலும், கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் பொறுமையாளராகவும், இறை வெகுமதியை விரும்பியவராகவும், இறைவன் நமக்கு எழுதியுள்ள விதிப்படியே தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது எனும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)
எனவே, நோய்கள் வடிவில் எத்தனை சோதனை வந்தாலும், அதை நாம் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அந்தப் பொறுமையே நமக்கு நற்பலனை பெற்றுத்தரும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
மகத்துவம் பொருந்திய ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தாஅத்’ - ‘கட்டுப்பாடு மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
மனித வாழ்வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை அவசியமானது. ஒவ்வொருவரின் வாழ்விலும் கடமை உணர்வு இருக்க வேண்டும்; கண்ணியம் காக்கப்பட வேண்டும்; கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்.
அந்தக்கட்டுப்பாடு, நன்மைகள் புரியவும், நற்செயல்கள் செய்யவும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். தீமைக்கும், தீய செயல்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க கூடாது. கடமையில்லா உணர்வும், கண்ணியக் குறைவும், கட்டுப்பாடற்ற வாழ்வும் பயன்தராது.
புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் தனிமையில் இருக்கும் போது, அருகில் உணவும், நீரும் இருக்கும். பசியும், தாகமும் அவரை பாடாய்படுத்தும். அவரை கட்டுப்படுத்துவதற்கு யாருமே இல்லை. இந்நிலையில், தான் நோன்பிருக்கும் போது உண்ணக்கூடாது, பருகக்கூடாது என அவரின் மனசாட்சி கூறும்.
பகல் நேரத்தில் உணவு, தண்ணீர், உடல் இச்சை போன்றவற்றை ஒரு நோன்பாளி தமது மனக்கட்டுப்பாட்டாலும், மனவலிமையாலும் விட்டுவிடுகிறார். ரமலான் மாதம் முழுவதும் தமது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எத்தனையோ செயல்களை விட்டு ஒரு நோன்பாளி விலகிவிடுகிறார். அதுபோல பிறரை புண்படுத்தும் தீய செயல்பாடுகளையும் தமது மனக்கட்டுப்பாட்டால் விட்டுவிடுகிறார்.
‘அல்லாஹ்வுக்கும், அவனின் திருத்தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்’ என்று திருக்குர்ஆன் (33:71) குறிப்பிடுகிறது.
இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல்தளத்தில் இருப் பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் நாம் நீருக்காக நமது பங்கில் கீழ்த்தளத்தில் ஓட்டையிட்டுக் கொள்வோம்; மேலே இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பேசிக்கொண்டனர். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் கப்பலில் இருப்போர் யாவரும் அழிந்து போவர். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்தால், அவர்களும் பிழைத்துக் கொண்டு, மற்றவரும் பிழைத்துக் கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பசீர் (ரலி), நூல்: புகாரி)
இவ்வாறு, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர், கட்டுப்பாடற்று நடப்பவரை அவ்வாறு விட்டு விடாமல், அவரை திருத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அழிவு அவருக்கு மட்டுமல்ல, அது நமக்கும்தான். இந்த கட்டுப்பாட்டை ரமலானையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் பேணவேண்டும். இவ்வாறு பயிற்சி அளிக்கும் இம்மாதத்தில் முழு பயிற்சியையும் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
மனித வாழ்வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை அவசியமானது. ஒவ்வொருவரின் வாழ்விலும் கடமை உணர்வு இருக்க வேண்டும்; கண்ணியம் காக்கப்பட வேண்டும்; கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்.
அந்தக்கட்டுப்பாடு, நன்மைகள் புரியவும், நற்செயல்கள் செய்யவும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். தீமைக்கும், தீய செயல்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க கூடாது. கடமையில்லா உணர்வும், கண்ணியக் குறைவும், கட்டுப்பாடற்ற வாழ்வும் பயன்தராது.
புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் தனிமையில் இருக்கும் போது, அருகில் உணவும், நீரும் இருக்கும். பசியும், தாகமும் அவரை பாடாய்படுத்தும். அவரை கட்டுப்படுத்துவதற்கு யாருமே இல்லை. இந்நிலையில், தான் நோன்பிருக்கும் போது உண்ணக்கூடாது, பருகக்கூடாது என அவரின் மனசாட்சி கூறும்.
பகல் நேரத்தில் உணவு, தண்ணீர், உடல் இச்சை போன்றவற்றை ஒரு நோன்பாளி தமது மனக்கட்டுப்பாட்டாலும், மனவலிமையாலும் விட்டுவிடுகிறார். ரமலான் மாதம் முழுவதும் தமது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எத்தனையோ செயல்களை விட்டு ஒரு நோன்பாளி விலகிவிடுகிறார். அதுபோல பிறரை புண்படுத்தும் தீய செயல்பாடுகளையும் தமது மனக்கட்டுப்பாட்டால் விட்டுவிடுகிறார்.
‘அல்லாஹ்வுக்கும், அவனின் திருத்தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்’ என்று திருக்குர்ஆன் (33:71) குறிப்பிடுகிறது.
இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல்தளத்தில் இருப் பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் நாம் நீருக்காக நமது பங்கில் கீழ்த்தளத்தில் ஓட்டையிட்டுக் கொள்வோம்; மேலே இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பேசிக்கொண்டனர். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் கப்பலில் இருப்போர் யாவரும் அழிந்து போவர். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்தால், அவர்களும் பிழைத்துக் கொண்டு, மற்றவரும் பிழைத்துக் கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பசீர் (ரலி), நூல்: புகாரி)
இவ்வாறு, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர், கட்டுப்பாடற்று நடப்பவரை அவ்வாறு விட்டு விடாமல், அவரை திருத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அழிவு அவருக்கு மட்டுமல்ல, அது நமக்கும்தான். இந்த கட்டுப்பாட்டை ரமலானையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் பேணவேண்டும். இவ்வாறு பயிற்சி அளிக்கும் இம்மாதத்தில் முழு பயிற்சியையும் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி






