என் மலர்
இஸ்லாம்
கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஷவ்வால் மாத பிறை நேற்று முன்தினம் தமிழகத்தில் தென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
னித ரமலானுக்கு ‘ஷஹ்ருத் துஹூர்’- தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இஸ்லாம் ஐந்து பெரும் கடமைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை: 1) கலிமா, 2) தொழுகை, 3) நோன்பு, 4) ஜகாத், 5) ஹஜ். இவை ஒவ்வொன்றுமே அதில் ஈடுபடக்கூடியவரை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கும், அதன் மூலம் அவர் வாழ்வில் நன்மைகளும், மேன்மைகளும் பெறுவார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அதுபற்றி காண்போம்.
கலிமா: ஒருவர் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினால், அவரின் முந்தைய அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு அவர் பரிசுத்தம் அடைகிறார்.
‘என் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையின்படி நான் இஸ்லாத்தை ஏற்றபோது, அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் முந்தைய பாவங்களை அழித்துவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
தொழுகை: ஒருவர் ஐந்துவேளைத் தொழும் போதும் அவரும் பாவ அழுக்கில் இருந்து விடுபட்டு தூய்மை அடைகிறார்.
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக்கூறுங்கள்?’ என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐந்து வேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
ஜகாத்: இதன் பொருள் ‘வளர்தல், தூய்மைப்படுத்துதல்’ என்பதாகும். ஒருவர் தமது நிதியில் இருந்து ஜகாத்தை ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் அவர் உலோபித்தனத்தில் இருந்தும், பாவத்திலிருந்தும் தூய்மை பெறுகிறார். தானம் செய்ததால் அவரின் செல்வமும் வளர்ச்சி அடைகிறது.
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
ஹஜ்: ‘ஹஜ்ஜூம் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ருபின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
நோன்பு: ‘நோன்பு (பாவ அழுக்கிலிருந்து) காக்கும் ஒரு கேடயம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி).
தண்ணீர் எவ்வாறு உடலின் அழுக்கையும், உடையின் அழுக்கையும் நீக்கி சுத்தப்படுத்துகிறதோ, அவ்வாறே நோன்பும் உள்ளத்தின் அழுக்கையும், புறஉறுப்புகளின் அழுக்கையும் நீக்கி நோன்பாளியை தூய்மையாக்கி மேன்மை யான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால்தான் ரமலானுக்கு
தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப்பெயரும் ஏற்படக் காரணமாகி விட்டது.
உடல் சுத்தமும், உள்ள சுத்தமும் ஏற்படுவதினால் உடல் ரீதியான ஆரோக்கியமும், மனவலிமையும், நீண்ட ஆயுளும் கிடைத்து விடுகிறது.
நோன்பினால் சுத்தம் பெறுவோம், சுத்தம் அடைவதால் ஆரோக்கியம் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
கலிமா: ஒருவர் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினால், அவரின் முந்தைய அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு அவர் பரிசுத்தம் அடைகிறார்.
‘என் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையின்படி நான் இஸ்லாத்தை ஏற்றபோது, அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் முந்தைய பாவங்களை அழித்துவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
தொழுகை: ஒருவர் ஐந்துவேளைத் தொழும் போதும் அவரும் பாவ அழுக்கில் இருந்து விடுபட்டு தூய்மை அடைகிறார்.
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக்கூறுங்கள்?’ என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐந்து வேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
ஜகாத்: இதன் பொருள் ‘வளர்தல், தூய்மைப்படுத்துதல்’ என்பதாகும். ஒருவர் தமது நிதியில் இருந்து ஜகாத்தை ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் அவர் உலோபித்தனத்தில் இருந்தும், பாவத்திலிருந்தும் தூய்மை பெறுகிறார். தானம் செய்ததால் அவரின் செல்வமும் வளர்ச்சி அடைகிறது.
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
ஹஜ்: ‘ஹஜ்ஜூம் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ருபின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
நோன்பு: ‘நோன்பு (பாவ அழுக்கிலிருந்து) காக்கும் ஒரு கேடயம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி).
தண்ணீர் எவ்வாறு உடலின் அழுக்கையும், உடையின் அழுக்கையும் நீக்கி சுத்தப்படுத்துகிறதோ, அவ்வாறே நோன்பும் உள்ளத்தின் அழுக்கையும், புறஉறுப்புகளின் அழுக்கையும் நீக்கி நோன்பாளியை தூய்மையாக்கி மேன்மை யான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால்தான் ரமலானுக்கு
தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப்பெயரும் ஏற்படக் காரணமாகி விட்டது.
உடல் சுத்தமும், உள்ள சுத்தமும் ஏற்படுவதினால் உடல் ரீதியான ஆரோக்கியமும், மனவலிமையும், நீண்ட ஆயுளும் கிடைத்து விடுகிறது.
நோன்பினால் சுத்தம் பெறுவோம், சுத்தம் அடைவதால் ஆரோக்கியம் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
ரமலான் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
ஷவ்வால் மாத பிறை நேற்று (புதன்கிழமை) தென்படவில்லை. எனவே ரமலான் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ரு நுஸூலுல் குர்ஆன்’ - திருக்குர்ஆன் இறங்கிய மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. ரமலான் மாதம் புனிதமானது. புனிதத்திற்கு புனிதம் சேர்க்கும் வகையில் ரமலான் மாதத்தில் தான் அகிலத்தாருக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் இறங்கியது.
‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)
புனித ரமலானுக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. அது யாதெனில், அனைத்து இறைவேதங்களும் ரமலானில் தான் இவ்வுலகில் இறங்கியது.
ரமலான் முதல் நாளில் இப்ராகீம் (அலை) அவர்களுக்கு இறைவனின் ஏடுகள் இறங்கின; ரமலானின் ஆறாம் நாளன்று மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ வேதம் இறங்கியது; ரமலானின் பனிரெண்டாம் நாளில் தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் இறங்கியது. ரமலான் பதினெட்டாம் தினத்தில் தான் ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இன்ஜில்’ எனும் வேதம் வழங்கப்பட்டது. புனித ரமலானின் ‘லைலத்துல் கத்ர்’ அன்று தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.
‘நிச்சயமாக நாம் திருக்குர்ஆனை கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) எனும் இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?, கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது. அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி இறங்குகின்றனர். சாந்தி அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.’ (திருக்குர்ஆன் 97:1-5)
‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘அல்லாஹ்வின் தூதரே, லைலத்துல் கத்ர் எந்த இரவு என்பதை நான் அறிந்தால், அதில் நான் என்ன கூறவேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ‘இறைவா, நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன். எனவே, என்னை மன்னித்துவிடு என்று கூறுவீராக’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
திருக்குர்ஆன் மூன்று கட்டங்களாக அருளப்பட்டது. முதல் கட்டமாக திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த பதிவேட்டிலிருந்து முழுக்குர்ஆனும் புனித லைலத்துல் கத்ர் இரவு அன்று கண்ணியம் நிறைந்த இடத்தில் இறைவனால் இறக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்காவில் 10 ஆண்டுகளும், மதீனாவில் 13 ஆண்டுகளுமாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளில் திருக்குர்ஆன் அருளப்பெற்று, நிறைவு பெற்றது. இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில், ‘இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக இறக்கியருளப்படக்கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே) இப்படித்தான் இதன்மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்’ (25:32) என்று தெரிவிக்கின்றது.
சிறப்புகள் நிறைந்த திருக்குர்ஆனை இந்த ரமலானில் அதிகம் ஓதிடுவோம். நோன்பின் பலனுடன், திருக்குர்ஆன் ஓதிய பலனையும் பெற்றிடுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)
புனித ரமலானுக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. அது யாதெனில், அனைத்து இறைவேதங்களும் ரமலானில் தான் இவ்வுலகில் இறங்கியது.
ரமலான் முதல் நாளில் இப்ராகீம் (அலை) அவர்களுக்கு இறைவனின் ஏடுகள் இறங்கின; ரமலானின் ஆறாம் நாளன்று மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ வேதம் இறங்கியது; ரமலானின் பனிரெண்டாம் நாளில் தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் இறங்கியது. ரமலான் பதினெட்டாம் தினத்தில் தான் ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இன்ஜில்’ எனும் வேதம் வழங்கப்பட்டது. புனித ரமலானின் ‘லைலத்துல் கத்ர்’ அன்று தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.
‘நிச்சயமாக நாம் திருக்குர்ஆனை கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) எனும் இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?, கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது. அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி இறங்குகின்றனர். சாந்தி அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.’ (திருக்குர்ஆன் 97:1-5)
‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘அல்லாஹ்வின் தூதரே, லைலத்துல் கத்ர் எந்த இரவு என்பதை நான் அறிந்தால், அதில் நான் என்ன கூறவேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ‘இறைவா, நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன். எனவே, என்னை மன்னித்துவிடு என்று கூறுவீராக’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
திருக்குர்ஆன் மூன்று கட்டங்களாக அருளப்பட்டது. முதல் கட்டமாக திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த பதிவேட்டிலிருந்து முழுக்குர்ஆனும் புனித லைலத்துல் கத்ர் இரவு அன்று கண்ணியம் நிறைந்த இடத்தில் இறைவனால் இறக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்காவில் 10 ஆண்டுகளும், மதீனாவில் 13 ஆண்டுகளுமாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளில் திருக்குர்ஆன் அருளப்பெற்று, நிறைவு பெற்றது. இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில், ‘இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக இறக்கியருளப்படக்கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே) இப்படித்தான் இதன்மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்’ (25:32) என்று தெரிவிக்கின்றது.
சிறப்புகள் நிறைந்த திருக்குர்ஆனை இந்த ரமலானில் அதிகம் ஓதிடுவோம். நோன்பின் பலனுடன், திருக்குர்ஆன் ஓதிய பலனையும் பெற்றிடுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
புனித ரமலான் மாதத்திற்கு ‘ஸய்யிதுஷ் ஷுஹூர்’ - ‘மாதங்களின் தலைவன்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இத்தகைய தத்துவப் பெயரைக் கொண்ட இம்மாதம் மகத்துவமிக்கது.
நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த தனிச்சிறப்பு மற்ற நாட்களுக்கு இல்லை. இவ்வாறே புனித ரமலானுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய தனிச்சிறப்பு மற்ற மாதங்களுக்குக் கிடையாது.
‘நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் அந்த தினம் இரண்டு பெருநாட்களை விட இறைவனிடம் மகத்துவமிக்கது ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘மாதங்களின் தலைவன் புனித ரமலான்; நாட்களின் தலைவன் புனித வெள்ளிதினம் ஆகும்’ என இப்னுமஸ்ஊத் (ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தமது அன்புத் தோழர்களிடம் உரையாற்றும் போது, ‘அடியார்கள் ரமலானில் இருக்கும் மகத்துவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஆண்டு முழுவதும் புனித ரமலானாக இருக்க வேண்டுமே என எனது சமுதாயத்தினர் ஆசை கொள்வர்’ என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி).
மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘ரமலானுக்காக வருட ஆரம்பத்திலிருந்து வருட நிறைவு வரைக்கும் சுவனம் அலங்கரிக்கப்படுகிறது. ரமலானின் முதல் நாள் துவங்கினால், இறை சிம்மாசனத்திற்கு கீழ் திசையிலிருந்து தென்றல் காற்று வீசுகிறது. அதனால் சுவனத்தின் மரக்கிளைகளும், இலைகளும் மெல்லிய சப்தத்தை ரீங்காரம் இடுகிறது. இதை சுவன பேரழகிகள் காட்சி காணுகிறார்கள். ‘இறைவா! இந்த மாதத்தில் நோன்பு நோற்கும் உனது அடியார்களை எனக்கு கணவனாக தேர்வு செய்வாயாக; எங்களின் மூலம் அவர்கள் கண்குளிர்ச்சி பெறட்டும்; அவர்களின் வழியாக நாங்களும் கண் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுவார்கள்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்.
புனித ரமலானில் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்கள் நன்மை செய்வதை விட சிறப்பானது. இந்த சிறப்பு வேறு எந்த மாதத்திலும் கிடையாது. புனித ரமலானின் ஒவ்வொரு இரவிலும் 6 லட்சம் நரக கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ரமலானின் நிறைவு நாளில் ஒட்டு மொத்த மாதமும் விடுதலை செய்யப்பட்ட எண்ணிக்கை அளவு ஒரே நாளில் மட்டும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
‘உங்களிடம் ரமலான் வந்துள்ளது. அதில் உங்களில் போட்டி போடுவோரை இறைவன் உற்று நோக்குகிறான். மேலும் இறைவன் உங்களைப் பற்றி தமது வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உங்களை சிறந்தவராக காட்டி விடுங்கள். பாக்கியமற்றவர் யாரென்றால், எவர் இறைவனது அருளை விட்டும் தடுக்கப்படுகிறாரோ அவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)
இத்தகைய பாக்கியம் நிறைந்த ரமலான் மாதத்தில் அதன் சிறப்புக்களை அடைய நாம் முயற்சிகள் செய்வோம், இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த தனிச்சிறப்பு மற்ற நாட்களுக்கு இல்லை. இவ்வாறே புனித ரமலானுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய தனிச்சிறப்பு மற்ற மாதங்களுக்குக் கிடையாது.
‘நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் அந்த தினம் இரண்டு பெருநாட்களை விட இறைவனிடம் மகத்துவமிக்கது ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘மாதங்களின் தலைவன் புனித ரமலான்; நாட்களின் தலைவன் புனித வெள்ளிதினம் ஆகும்’ என இப்னுமஸ்ஊத் (ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தமது அன்புத் தோழர்களிடம் உரையாற்றும் போது, ‘அடியார்கள் ரமலானில் இருக்கும் மகத்துவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஆண்டு முழுவதும் புனித ரமலானாக இருக்க வேண்டுமே என எனது சமுதாயத்தினர் ஆசை கொள்வர்’ என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி).
மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘ரமலானுக்காக வருட ஆரம்பத்திலிருந்து வருட நிறைவு வரைக்கும் சுவனம் அலங்கரிக்கப்படுகிறது. ரமலானின் முதல் நாள் துவங்கினால், இறை சிம்மாசனத்திற்கு கீழ் திசையிலிருந்து தென்றல் காற்று வீசுகிறது. அதனால் சுவனத்தின் மரக்கிளைகளும், இலைகளும் மெல்லிய சப்தத்தை ரீங்காரம் இடுகிறது. இதை சுவன பேரழகிகள் காட்சி காணுகிறார்கள். ‘இறைவா! இந்த மாதத்தில் நோன்பு நோற்கும் உனது அடியார்களை எனக்கு கணவனாக தேர்வு செய்வாயாக; எங்களின் மூலம் அவர்கள் கண்குளிர்ச்சி பெறட்டும்; அவர்களின் வழியாக நாங்களும் கண் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுவார்கள்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்.
புனித ரமலானில் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்கள் நன்மை செய்வதை விட சிறப்பானது. இந்த சிறப்பு வேறு எந்த மாதத்திலும் கிடையாது. புனித ரமலானின் ஒவ்வொரு இரவிலும் 6 லட்சம் நரக கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ரமலானின் நிறைவு நாளில் ஒட்டு மொத்த மாதமும் விடுதலை செய்யப்பட்ட எண்ணிக்கை அளவு ஒரே நாளில் மட்டும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
‘உங்களிடம் ரமலான் வந்துள்ளது. அதில் உங்களில் போட்டி போடுவோரை இறைவன் உற்று நோக்குகிறான். மேலும் இறைவன் உங்களைப் பற்றி தமது வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உங்களை சிறந்தவராக காட்டி விடுங்கள். பாக்கியமற்றவர் யாரென்றால், எவர் இறைவனது அருளை விட்டும் தடுக்கப்படுகிறாரோ அவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)
இத்தகைய பாக்கியம் நிறைந்த ரமலான் மாதத்தில் அதன் சிறப்புக்களை அடைய நாம் முயற்சிகள் செய்வோம், இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதிலும் நோன்பு நோற்பதோடு இரவு சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவர். ரமலான் மாதத்தின் கடைசி 10 இரவுகளில் ஒரு இரவில் இஸ்லாமியர்கள் புனித வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட தினமாக கருதப்பட்டு அன்றைய தினத்தை லைலத்துல் கத்ரு என்ற புனித இரவாக வழிபடுகின்றனர். ரமலான் மாதத்தின் 27-வது இரவான நேற்று இஸ்லாமியர்கள் இரவு முழுவதிலும் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். மதுரையில் மகபூப்பாளையம், காஜிமார் தெரு, நெல்பேட்டை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, ஆனையூர், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கைகளை குலுக்காமல், ஒருவொருக்கொருவரும் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டியும், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். மதுரையில் மகபூப்பாளையம், காஜிமார் தெரு, நெல்பேட்டை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, ஆனையூர், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கைகளை குலுக்காமல், ஒருவொருக்கொருவரும் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டியும், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இது குறித்த நபிமொழிகள் கூறுவதை காண்போம்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இது குறித்த நபிமொழிகள் கூறுவதை காண்போம்.
‘ஷஃபான் அது எனது மாதம்; ரமலான் அது உங்கள் மாதம்; மேலும் புனித ரமலான் ஏழைகளின் வசந்த மாதமாகவும் உள்ளது; மேலும் தியாகத்திருநாளை உங்களின் ஏழைகள் மாமிசம் உண்டு வயிறு நிறையவும், மனநிறைவு அடையவும் இறைவன் ஏற்படுத்தி உள்ளான். எனவே அவர்களின் பசியைப் போக்க உண்ணக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி).
புனித ரமலானில் ஏழைகளின் பசியையும், வறுமையையும் போக்க, அவர்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைய, ‘ஜகாத்’ எனும் ஏழை வரியையும், ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாமிய மார்க்கம் கடமையாக்கியுள்ளது.
புனித ரமலான் மாதத்தில்தான் ஜகாத் கடமையானது.
‘ஜகாத் எனும் நிதிகள் வறியவர்கள், ஏழைகள், நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய சகோதர(சமுதாயத்தவ)ர்கள், அடிமைகள் (விடுதலை செய்வதற்கும்), கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் அறப்போராட்டம் நடத்துபவர்கள், நாடோடிகள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமை; இறைவன் அறிபவன், ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)
நோன்புப் பெருநாளன்று வழங்கப்படும் தானிய அறத்திற்கு ‘ஜகாதுல் பித்ர்: நோன்புப் பெருநாள் தர்மம்’ என்று சொல்லப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தமக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர்களுக்காகவும் தலா நபர் ஒன்றுக்கு இரண்டரை கிலோ வீதம் நாம் உண்ணும் உணவு பண்டங்களான அரிசி அல்லது கோதுமை போன்ற தானியங்களை, அல்லது இதன் அன்றைய சந்தை விலையை சரிபார்த்து ஏழை எளியோருக்கு, பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்பே வழங்கிட வேண்டும்.
‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) கடமையாக்கினார்கள்; அது நோன்பாளியைச் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியைப் போக்குகிறது. தொழுகைக்கு முன்பு கொடுப்பது ஜகாத்துல் பித்ராக அமைந்து விடுகிறது; அதற்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)
ஜகாத்தின் மூலமாகத்தான் இஸ்லாம் வறுமையை போக்கியது. அதைத்தான் நபியும், நபித்தோழர்களும் செயல்படுத்தினார்கள்.
ஜகாத் கொடுக்காத செல்வந்தரும், கொடுக்கப்படாத செல்வமும் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.
‘இன்னும் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 9:34)
‘ஜகாத் நிதி (ஜகாத் அல்லாத இதர) செல்வத்துடன் கலந்து விடுமானால், அந்த செல்வம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ‘ஜக்காத்’ என்னும் தர்மத்தை வாரிவழங்கிட இந்த ரமலான் வழிகாட்டுகிறது. இதன் மூலம் இறைவனின் நெருக்கமும், நன்மைகளும் நமக்கு பரிசாக கிடைக்கின்றது.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
‘ஷஃபான் அது எனது மாதம்; ரமலான் அது உங்கள் மாதம்; மேலும் புனித ரமலான் ஏழைகளின் வசந்த மாதமாகவும் உள்ளது; மேலும் தியாகத்திருநாளை உங்களின் ஏழைகள் மாமிசம் உண்டு வயிறு நிறையவும், மனநிறைவு அடையவும் இறைவன் ஏற்படுத்தி உள்ளான். எனவே அவர்களின் பசியைப் போக்க உண்ணக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி).
புனித ரமலானில் ஏழைகளின் பசியையும், வறுமையையும் போக்க, அவர்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைய, ‘ஜகாத்’ எனும் ஏழை வரியையும், ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாமிய மார்க்கம் கடமையாக்கியுள்ளது.
புனித ரமலான் மாதத்தில்தான் ஜகாத் கடமையானது.
‘ஜகாத் எனும் நிதிகள் வறியவர்கள், ஏழைகள், நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய சகோதர(சமுதாயத்தவ)ர்கள், அடிமைகள் (விடுதலை செய்வதற்கும்), கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் அறப்போராட்டம் நடத்துபவர்கள், நாடோடிகள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமை; இறைவன் அறிபவன், ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)
நோன்புப் பெருநாளன்று வழங்கப்படும் தானிய அறத்திற்கு ‘ஜகாதுல் பித்ர்: நோன்புப் பெருநாள் தர்மம்’ என்று சொல்லப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தமக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர்களுக்காகவும் தலா நபர் ஒன்றுக்கு இரண்டரை கிலோ வீதம் நாம் உண்ணும் உணவு பண்டங்களான அரிசி அல்லது கோதுமை போன்ற தானியங்களை, அல்லது இதன் அன்றைய சந்தை விலையை சரிபார்த்து ஏழை எளியோருக்கு, பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்பே வழங்கிட வேண்டும்.
‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) கடமையாக்கினார்கள்; அது நோன்பாளியைச் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியைப் போக்குகிறது. தொழுகைக்கு முன்பு கொடுப்பது ஜகாத்துல் பித்ராக அமைந்து விடுகிறது; அதற்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)
ஜகாத்தின் மூலமாகத்தான் இஸ்லாம் வறுமையை போக்கியது. அதைத்தான் நபியும், நபித்தோழர்களும் செயல்படுத்தினார்கள்.
ஜகாத் கொடுக்காத செல்வந்தரும், கொடுக்கப்படாத செல்வமும் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.
‘இன்னும் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 9:34)
‘ஜகாத் நிதி (ஜகாத் அல்லாத இதர) செல்வத்துடன் கலந்து விடுமானால், அந்த செல்வம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ‘ஜக்காத்’ என்னும் தர்மத்தை வாரிவழங்கிட இந்த ரமலான் வழிகாட்டுகிறது. இதன் மூலம் இறைவனின் நெருக்கமும், நன்மைகளும் நமக்கு பரிசாக கிடைக்கின்றது.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருன் அழீம்’ - ‘கண்ணியமான மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
கண்ணியம் நிறைந்த, உயர்வான சிந்தனைகளை இம்மாதம் விதைக்கிறது. சாதாரண அடியார்களை கண்ணியமிக்கவர்களாக மாற்றம் அடையச்செய்கிறது.
மனிதனின் உயர்வான சிந்தனைகள் வருமாறு:
1) வாய்மை, 2) அமானிதம் (நம்பி ஒப்படைக்கப்பட்டதை திரும்பக் கொடுப்பது), 3) நிதானம், 4) சாந்தம், 5) பொறுமை, 6) உபகாரம், 7) நேர்மை, 8) கொடைத்தன்மை, 9) பிறருக்கு முன்னுரிமை, 10) நீதி, 11) மென்மை, 12) நன்றி, 13) நாவடக்கம், 14) பத்தினித்தனம், 15) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது, 16) பணிவு, 17) பிறரின் குறைகளை மறைத்தல், 18) மன்னிக்கும் மனப்பான்மை, 19) ஒருவருக்கொருவர் உதவிடும் தன்மை, 20) இரக்க சிந்தனை, 21) போதும் என்ற மனப்பான்மை, 22) நன்மை, 23) நாணம், 24) பிறரை நேசிக்கும் மனப்பான்மை, 25) சேவை மனப்பான்மை, 26) பிறரை மதிக்கும் மனப்பான்மை, 27) இருப்பதைக் கொண்டு திருப்தியோடு இருப்பது, 28) சமமாக நடக்கும் தன்மை.
இது போன்ற உயர்வான பல சிந்தனைகளை மனித மனதில் விதைத்து, கண்ணியமானவர்களை உருவாக்கும் செயல்களைத்தான் புனித ரமலான் நோன்பு செய்கின்றது. அதிகமான நற்சிந்தனைகளை விதைத்து, பல நல்ல உள்ளங்களையும், கண்ணியமான மனிதர்களையும் உருவாக்கும் மாதம் தான் ரமலான்.
அபூ உமாமா (ரலி) அறிவிப்பதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு பயன்தரும் ஒரு விஷயத்தை என்னிடம் ஏவுங்கள்’ என வேண்டியபோது ‘நோன்பு நோற்பதை நீர் அவசியமாக்கிக் கொள்வீராக, அதைப் போன்று வேறெதுவும் கிடையாது’ என நபி (ஸல்) கூறினார்கள்”.
‘செயலில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பை பற்றிக் கொள்வீராக, அதற்கு ஈடானது வேறு எதுவும் வரமுடியாது’ என்று கூறினார்கள்.
பிறகு நான் நபியவர்களிடம் வந்து, ‘நான் போரில் கலந்து கொள்ளும் பாக்கியம் வேண்டி எனக்காக பிரார்த்தனை புரியுங்கள்’ என வேண்டியபோது, ‘இறைவா அவர்களை போரில் கலந்து கொள்ளச் செய்து, வெற்றி வாகை சூடி, போரின் செல்வங்களை அவர்களுக்கு வழங்குவாயாக’ என மூன்று தடவை நபி (ஸல்) வேண்டினார்கள்.
பிறகு நான் நபியவர்களிடம் வந்து ‘இறைவனின் தூதரே, நீங்கள் பிரார்த்தித்தது போலவே நடந்துவிட்டது. ‘நான் சொர்க்கத்தில் நுழையும்படி ஒரு செயலை எனக்கு ஏவுங்கள்’ என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘உம் மீது நோன்பு நோற்பதை கடமையாகக் கொள்வீராக. அதற்கு நிகரானது வேறு எதுவும் கிடையாது’ என்று கூறினார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)
இதற்குப் பிறகு அபூஉமாமா (ரலி) அவர்களின் வீட்டில் புகை வருவதை பார்க்க முடியாது. பகலில் அவரின் வீட்டில் அடுப்பு எரியாது. அதிகமாக நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்.
அவரின் வீட்டில் புகை வெளியே வந்தால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் ‘இன்று அவரின் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பார்கள்’ என்பதாக.
அந்தளவுக்கு நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
கண்ணியம் நிறைந்த, உயர்வான சிந்தனைகளை இம்மாதம் விதைக்கிறது. சாதாரண அடியார்களை கண்ணியமிக்கவர்களாக மாற்றம் அடையச்செய்கிறது.
மனிதனின் உயர்வான சிந்தனைகள் வருமாறு:
1) வாய்மை, 2) அமானிதம் (நம்பி ஒப்படைக்கப்பட்டதை திரும்பக் கொடுப்பது), 3) நிதானம், 4) சாந்தம், 5) பொறுமை, 6) உபகாரம், 7) நேர்மை, 8) கொடைத்தன்மை, 9) பிறருக்கு முன்னுரிமை, 10) நீதி, 11) மென்மை, 12) நன்றி, 13) நாவடக்கம், 14) பத்தினித்தனம், 15) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது, 16) பணிவு, 17) பிறரின் குறைகளை மறைத்தல், 18) மன்னிக்கும் மனப்பான்மை, 19) ஒருவருக்கொருவர் உதவிடும் தன்மை, 20) இரக்க சிந்தனை, 21) போதும் என்ற மனப்பான்மை, 22) நன்மை, 23) நாணம், 24) பிறரை நேசிக்கும் மனப்பான்மை, 25) சேவை மனப்பான்மை, 26) பிறரை மதிக்கும் மனப்பான்மை, 27) இருப்பதைக் கொண்டு திருப்தியோடு இருப்பது, 28) சமமாக நடக்கும் தன்மை.
இது போன்ற உயர்வான பல சிந்தனைகளை மனித மனதில் விதைத்து, கண்ணியமானவர்களை உருவாக்கும் செயல்களைத்தான் புனித ரமலான் நோன்பு செய்கின்றது. அதிகமான நற்சிந்தனைகளை விதைத்து, பல நல்ல உள்ளங்களையும், கண்ணியமான மனிதர்களையும் உருவாக்கும் மாதம் தான் ரமலான்.
அபூ உமாமா (ரலி) அறிவிப்பதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு பயன்தரும் ஒரு விஷயத்தை என்னிடம் ஏவுங்கள்’ என வேண்டியபோது ‘நோன்பு நோற்பதை நீர் அவசியமாக்கிக் கொள்வீராக, அதைப் போன்று வேறெதுவும் கிடையாது’ என நபி (ஸல்) கூறினார்கள்”.
‘செயலில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பை பற்றிக் கொள்வீராக, அதற்கு ஈடானது வேறு எதுவும் வரமுடியாது’ என்று கூறினார்கள்.
பிறகு நான் நபியவர்களிடம் வந்து, ‘நான் போரில் கலந்து கொள்ளும் பாக்கியம் வேண்டி எனக்காக பிரார்த்தனை புரியுங்கள்’ என வேண்டியபோது, ‘இறைவா அவர்களை போரில் கலந்து கொள்ளச் செய்து, வெற்றி வாகை சூடி, போரின் செல்வங்களை அவர்களுக்கு வழங்குவாயாக’ என மூன்று தடவை நபி (ஸல்) வேண்டினார்கள்.
பிறகு நான் நபியவர்களிடம் வந்து ‘இறைவனின் தூதரே, நீங்கள் பிரார்த்தித்தது போலவே நடந்துவிட்டது. ‘நான் சொர்க்கத்தில் நுழையும்படி ஒரு செயலை எனக்கு ஏவுங்கள்’ என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘உம் மீது நோன்பு நோற்பதை கடமையாகக் கொள்வீராக. அதற்கு நிகரானது வேறு எதுவும் கிடையாது’ என்று கூறினார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)
இதற்குப் பிறகு அபூஉமாமா (ரலி) அவர்களின் வீட்டில் புகை வருவதை பார்க்க முடியாது. பகலில் அவரின் வீட்டில் அடுப்பு எரியாது. அதிகமாக நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்.
அவரின் வீட்டில் புகை வெளியே வந்தால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் ‘இன்று அவரின் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பார்கள்’ என்பதாக.
அந்தளவுக்கு நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
‘நோன்பு (மட்டரகமானவற்றிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே ஒரு நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; மடத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தம்ஹுஸ்’ - ‘மட்டரகமான காரியங்களில் இருந்து மனிதனை விடுவிக்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
முதலில் மட்டரகமான காரியங்கள் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
கஞ்சத்தனம், பொறாமை, தற்பெருமை, புறம், கோள், கோழைத்தனம், மடமைத்தனம், பேராசை, கடின உள்ளம், முகஸ்துதி, பொய், திட்டுவது, பழிப்பது, அவதூறு பரப்புவது, மோசடி, பித்தலாட்டம், உறவை முறிப்பது, பெற்றோரை நோவினைப்படுத்துவது, குறைகளைத் துருவி துருவி விசாரிப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது, பரிகாசம் செய்வது, நயவஞ்சகத்தன்மை, வெறுப்பை விதைப்பது, நன்றிகெட்டத்தனம், அநீதம் இழைப்பது, மனோ இச்சைக்கு கட்டுப்படுவது, குரோத மனப்பான்மை இன்னும் இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்கள் அனைத்தும் மட்ட ரகமானவைகள் தாம்.
இவைகளில் இருந்து நோன்பாளியை ரமலான் மாத நோன்பு பாதுகாக்கிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலையும், விரிவான விளக்கத்தையும் இனி காண்போம்.
‘நோன்பு ஒரு கேடயம் ஆகும்; அதனை உடைக்காமல் இருக்கும் வரை.... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என ஆபூஉபைதா (ரலி) கூறுகிறார்’. (அறிவிப்பாளர்: இப்னுமாஜா, நூல்: நஸயீ)
‘நோன்பு (மட்டரகமானவற்றிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே ஒரு நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; மடத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப்பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி)
போர் வீரர்களின் உயிர்களையும், உடல்களையும் கேடயம் பாதுகாப்பது போன்றே, ரமலான் மாத நோன்பும் நோன்பாளிகளை மட்டரகமான அனைத்து செயல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது என்று கேட்டார்?’. ‘பொய், புறம் பேசுவதினால்’ என நபி (ஸல்) விடையளித்தார்கள்’.
‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமே அல்ல. தகாத காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும், மட்டரகமான காரியங்களிலிருந்து விட்டு விலகியிருப்பதும் தான் உண்மையான நோன்பு.
இதற்கு ஏற்ப இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மட்டரகமான செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம், அதுபோன்ற செயல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்படி இறைவனிடம் வேண்டுவோம். நற்செயல்கள் செய்து இறையருள் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
முதலில் மட்டரகமான காரியங்கள் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
கஞ்சத்தனம், பொறாமை, தற்பெருமை, புறம், கோள், கோழைத்தனம், மடமைத்தனம், பேராசை, கடின உள்ளம், முகஸ்துதி, பொய், திட்டுவது, பழிப்பது, அவதூறு பரப்புவது, மோசடி, பித்தலாட்டம், உறவை முறிப்பது, பெற்றோரை நோவினைப்படுத்துவது, குறைகளைத் துருவி துருவி விசாரிப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது, பரிகாசம் செய்வது, நயவஞ்சகத்தன்மை, வெறுப்பை விதைப்பது, நன்றிகெட்டத்தனம், அநீதம் இழைப்பது, மனோ இச்சைக்கு கட்டுப்படுவது, குரோத மனப்பான்மை இன்னும் இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்கள் அனைத்தும் மட்ட ரகமானவைகள் தாம்.
இவைகளில் இருந்து நோன்பாளியை ரமலான் மாத நோன்பு பாதுகாக்கிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலையும், விரிவான விளக்கத்தையும் இனி காண்போம்.
‘நோன்பு ஒரு கேடயம் ஆகும்; அதனை உடைக்காமல் இருக்கும் வரை.... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என ஆபூஉபைதா (ரலி) கூறுகிறார்’. (அறிவிப்பாளர்: இப்னுமாஜா, நூல்: நஸயீ)
‘நோன்பு (மட்டரகமானவற்றிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே ஒரு நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; மடத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப்பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி)
போர் வீரர்களின் உயிர்களையும், உடல்களையும் கேடயம் பாதுகாப்பது போன்றே, ரமலான் மாத நோன்பும் நோன்பாளிகளை மட்டரகமான அனைத்து செயல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது என்று கேட்டார்?’. ‘பொய், புறம் பேசுவதினால்’ என நபி (ஸல்) விடையளித்தார்கள்’.
‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமே அல்ல. தகாத காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும், மட்டரகமான காரியங்களிலிருந்து விட்டு விலகியிருப்பதும் தான் உண்மையான நோன்பு.
இதற்கு ஏற்ப இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மட்டரகமான செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம், அதுபோன்ற செயல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்படி இறைவனிடம் வேண்டுவோம். நற்செயல்கள் செய்து இறையருள் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.40 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல்குர்ஆன்’- ‘திருக்குர்ஆனின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. திருக்குர்ஆன் புனித ரமலான் மாதத்தில் தான் இறங்கியது.
‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.
‘உங்களில் சிறந்தவர் திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: புகாரி)
‘திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளசிச்செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது; அதன் வாடையும் வெறுப்பானது. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர் ஆவார். அதன் சுவை நன்று; அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்படக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)
‘எவர் ஒருவர் இரவில் திருக்குர்ஆனின் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் பொடு போக்கானவராக எழுதப்படமாட்டார்; ஐம்பது வசனங்களை ஓதுபவர் இறைதியானிப்பவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; நூறு வசனங்களை ஓதுபவர் இறைவழிபாடு செய்தவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; இருநூறு வசனங்களை ஓதுபவர் இறையச்சம் உள்ளவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார். முன்னூறு வசனங்களை ஓதுபவர் வெற்றியாளராகவும், 500 வசனங்களை ஓதுபவர் பெரும் முயற்சியாளராகவும், ஆயிரம் வசனங்களை ஓதுபவர் பெரும் தங்கக்குவியலை பெற்ற பாக்கியசாலியாகவும் எழுதப்படுகிறார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)
திருக்குர்ஆன் ஓதத் தெரியாதவர் இத்தகைய நற்பாக்கியங்களை அடையமுடிய வில்லையே என ஏங்க வேண்டாம். ஓதுவதை செவிமடுத்தாலும் அதற்கும் நன்மையும், அந்தஸ்தும் உண்டு.
‘திருக்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை தான் ஓதாமல், பிறர் ஓதுவதை செவியுறுபவருக்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு பாவம் அழிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (நபிமொழி).
‘உங்களின் இல்லங்களை திருக்குர்ஆனை ஓதுவதைக் கொண்டு ஒளிமயமாக ஆக்குங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: லைஸ் பின் அபூசலீம் (ரலி), நபிமொழி)
“நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது”. (திருக்குர்ஆன் 17:9)
குர்ஆனை ஓதினால் மட்டுமே சத்தியமும், நேர்வழியும், பாக்கியமும் கிட்டிவிடாது. அதன்படி நடந்தால்தான் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.
“நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்” (திருக்குர்ஆன் 86:13).
“நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடை யவர்களுக்கு நல்லுபதேசமாகும்” (திருக்குர் ஆன் 69:48).
புனித ரமலான் மாதம் திருக்குர்ஆனின் வசந்த மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மைகளை அடையவும், மேன்மைகளை பெறவும் முயல வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.
‘உங்களில் சிறந்தவர் திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: புகாரி)
‘திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளசிச்செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது; அதன் வாடையும் வெறுப்பானது. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர் ஆவார். அதன் சுவை நன்று; அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்படக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)
‘எவர் ஒருவர் இரவில் திருக்குர்ஆனின் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் பொடு போக்கானவராக எழுதப்படமாட்டார்; ஐம்பது வசனங்களை ஓதுபவர் இறைதியானிப்பவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; நூறு வசனங்களை ஓதுபவர் இறைவழிபாடு செய்தவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; இருநூறு வசனங்களை ஓதுபவர் இறையச்சம் உள்ளவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார். முன்னூறு வசனங்களை ஓதுபவர் வெற்றியாளராகவும், 500 வசனங்களை ஓதுபவர் பெரும் முயற்சியாளராகவும், ஆயிரம் வசனங்களை ஓதுபவர் பெரும் தங்கக்குவியலை பெற்ற பாக்கியசாலியாகவும் எழுதப்படுகிறார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)
திருக்குர்ஆன் ஓதத் தெரியாதவர் இத்தகைய நற்பாக்கியங்களை அடையமுடிய வில்லையே என ஏங்க வேண்டாம். ஓதுவதை செவிமடுத்தாலும் அதற்கும் நன்மையும், அந்தஸ்தும் உண்டு.
‘திருக்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை தான் ஓதாமல், பிறர் ஓதுவதை செவியுறுபவருக்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு பாவம் அழிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (நபிமொழி).
‘உங்களின் இல்லங்களை திருக்குர்ஆனை ஓதுவதைக் கொண்டு ஒளிமயமாக ஆக்குங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: லைஸ் பின் அபூசலீம் (ரலி), நபிமொழி)
“நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது”. (திருக்குர்ஆன் 17:9)
குர்ஆனை ஓதினால் மட்டுமே சத்தியமும், நேர்வழியும், பாக்கியமும் கிட்டிவிடாது. அதன்படி நடந்தால்தான் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.
“நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்” (திருக்குர்ஆன் 86:13).
“நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடை யவர்களுக்கு நல்லுபதேசமாகும்” (திருக்குர் ஆன் 69:48).
புனித ரமலான் மாதம் திருக்குர்ஆனின் வசந்த மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மைகளை அடையவும், மேன்மைகளை பெறவும் முயல வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இனாபா’- ‘இறைவனின் பக்கம் திரும்பும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இறைவனின் பக்கம் திரும்புவது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது.
1) இறைவன் தன்னை படைத்து பரிபாலிப்பவன் எனும் அடிப்படையில் படைப்பினங்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வு இன்றி, தங்களுக்கு பிரச்சினை வரும்போது இறைவன் பக்கமே திரும்பி, அவனை அழைக்கின்றனர். பிரச்சினை தீர்ந்ததும் அவனை மறந்து, அவனுக்கு மாறு செய்கின்றனர். இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 30:33)
2) அல்லாஹ் தான் நமது இறைவன் எனும் அடிப்படையில் அவன் பக்கம் அவனது நேசர்கள் திரும்புவது- அன்புள்ள அடிமையின் திரும்புதல் ஆகும்.
இத்தகைய திரும்புதலைத்தான் ரமலான் மாதம் இறையடியார்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இது முகத்தை மட்டுமே திருப்புவது ஆகாது. மாறாக இறைவனை நோக்கி உள்ளத்தை திருப்புவது.
‘ரமலான் மாதத்தில் பிறை 21 -ல் இருந்து 30 வரை இறையில்லத்தில் ஒருவர் இஃதிகாப் இருப்பது, அதாவது உடலை இறைவனுக்கு மட்டுமே சிறைப்படுத்தி வைப்பது போன்றதாகும்’ என இப்னுல் கய்யூம் (ரஹ்) கூறுகிறார்.
உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
இத்தகைய பண்புகளுடன் ஒவ்வொரு நபியும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
‘தாவூத் (அலை) தமது இறைவனிடம் மன்னிப்புக்கோரி குனிந்து விழுந்தவராக (அவன் பக்கம்) திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:24)
‘இன்னும் சுலைமான் (அலை) அவர்களைத் திட்டமாகச் சோதித்தோம்; அவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை போட்டோம்; ஆகவே, அவர் நம்மளவில் திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:34)
‘நிச்சயமாக இப்ராகீம் (அலை) சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக் கூடியவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 11:75)
‘மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை; அவனையே நான் சார்ந்துள்ளேன்; இன்னும் அவன் பக்கமே திரும்புகிறேன்’ என்று சுஅய்ப் (அலை) கூறினார். (திருக்குர்ஆன் 11:88)
‘அல்லாஹ்வே எனது இறைவன். அவனையே நான் சார்ந்துள்ளேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன், என நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக’ (திருக்குர்ஆன் 42:10)
எனவே, நாம் நமது வாழ்வில் எந்த நிலையிலும் இறைவனையே சார்ந்து இருந்து, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து நற்பேறுகளைப் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி
1) இறைவன் தன்னை படைத்து பரிபாலிப்பவன் எனும் அடிப்படையில் படைப்பினங்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வு இன்றி, தங்களுக்கு பிரச்சினை வரும்போது இறைவன் பக்கமே திரும்பி, அவனை அழைக்கின்றனர். பிரச்சினை தீர்ந்ததும் அவனை மறந்து, அவனுக்கு மாறு செய்கின்றனர். இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 30:33)
2) அல்லாஹ் தான் நமது இறைவன் எனும் அடிப்படையில் அவன் பக்கம் அவனது நேசர்கள் திரும்புவது- அன்புள்ள அடிமையின் திரும்புதல் ஆகும்.
இத்தகைய திரும்புதலைத்தான் ரமலான் மாதம் இறையடியார்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இது முகத்தை மட்டுமே திருப்புவது ஆகாது. மாறாக இறைவனை நோக்கி உள்ளத்தை திருப்புவது.
‘ரமலான் மாதத்தில் பிறை 21 -ல் இருந்து 30 வரை இறையில்லத்தில் ஒருவர் இஃதிகாப் இருப்பது, அதாவது உடலை இறைவனுக்கு மட்டுமே சிறைப்படுத்தி வைப்பது போன்றதாகும்’ என இப்னுல் கய்யூம் (ரஹ்) கூறுகிறார்.
உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
இத்தகைய பண்புகளுடன் ஒவ்வொரு நபியும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
‘தாவூத் (அலை) தமது இறைவனிடம் மன்னிப்புக்கோரி குனிந்து விழுந்தவராக (அவன் பக்கம்) திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:24)
‘இன்னும் சுலைமான் (அலை) அவர்களைத் திட்டமாகச் சோதித்தோம்; அவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை போட்டோம்; ஆகவே, அவர் நம்மளவில் திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:34)
‘நிச்சயமாக இப்ராகீம் (அலை) சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக் கூடியவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 11:75)
‘மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை; அவனையே நான் சார்ந்துள்ளேன்; இன்னும் அவன் பக்கமே திரும்புகிறேன்’ என்று சுஅய்ப் (அலை) கூறினார். (திருக்குர்ஆன் 11:88)
‘அல்லாஹ்வே எனது இறைவன். அவனையே நான் சார்ந்துள்ளேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன், என நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக’ (திருக்குர்ஆன் 42:10)
எனவே, நாம் நமது வாழ்வில் எந்த நிலையிலும் இறைவனையே சார்ந்து இருந்து, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து நற்பேறுகளைப் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி
நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இத்க்’ - ‘நரகத்தின் விடுதலை மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
மனிதன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவன். கஷ்டமான வாழ்க்கையை அவன் கடுகளவு கூட விரும்பமாட்டான். எனவே தான் உலகில் வேதனையும், சோதனையும் வரும்போதெல்லாம், ‘இது நரக வேதனையாக உள்ளது’ என்று அழுது புலம்புவான்.
குற்றவாளிகளுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை சிறைச்சாலை. அங்கு நிம்மதியாக உண்ண, உறங்க முடியாது. அங்கே கொசுக்கடி உண்டு; தர்மஅடியும் தாராளம் உண்டு. இதுபோன்று பாவிகளுக்கு மறுஉலகில் வழங்கப்படும் தண்டனை நரகம் ஆகும். நரகத்தில் அளிக்கப்படும் தண்டனை விபரம் வருமாறு:
நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
‘கொதிக்கும் ஊற்றிலிருந்து, நீர் புகட்டப்படும், அவர்களுக்கு விஷச்செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களை கொழுக்கவும் வைக்காது; பசியையும் தணிக்காது’. (திருக்குர்ஆன் 88:5,6,7)
‘உங்களுடைய (உலக) நெருப்பு, நரகத்தின் நெருப்பிலிருந்து எழுபது பங்கில் ஒரு பங்கு ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு கல் நரகத்தின் படுகுழியில் போடப்பட்டது; எழுபது வருடங்கள் ஆகியும் அது இன்னும் சேரவில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உத்பாபின் ஹிஸ்வான் (ரலி), நூல்: முஸ்லிம்)
இத்தகைய நரகிலிருந்து விடுதலை பெற வைக்கும் மகத்துவமிக்கது தான் ரமலான் மாத நோன்பு ஆகும்.
‘ரமலான் வந்துவிட்டால், நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன’. (நூல்: புகாரி)
‘ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது’. (நூல்: அஹ்மது)
‘நோன்பு நரகத்தை விட்டு பாதுகாக்கும் ஒரு கேடயம்’. (நபிமொழி)
‘மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது, சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘ரமலானின் கடைசிப் (பத்து) பகுதி நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்’. (நபிமொழி)
எனவே, அந்த கடைசிப் பத்து நாட்களில் பின்வரும் பிரார்த்தனையை செய்வோம். ‘அல்லாஹூம்ம அஃதிக்னா மினன்னாரி, வஅத்கில்னல் ஜன்னத யாரப்பல் ஆலமீன்’. இதன் பொருள்: ‘அகில உலக ரட்சகனே, நரகத்தில் இருந்து எங்களை காப்பாற்றி, சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக’.
ரமலான் நோன்பு நோற்று, இந்த பிரார்த்தனையும் புரிந்து நரகத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவோமாக, ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி
மனிதன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவன். கஷ்டமான வாழ்க்கையை அவன் கடுகளவு கூட விரும்பமாட்டான். எனவே தான் உலகில் வேதனையும், சோதனையும் வரும்போதெல்லாம், ‘இது நரக வேதனையாக உள்ளது’ என்று அழுது புலம்புவான்.
குற்றவாளிகளுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை சிறைச்சாலை. அங்கு நிம்மதியாக உண்ண, உறங்க முடியாது. அங்கே கொசுக்கடி உண்டு; தர்மஅடியும் தாராளம் உண்டு. இதுபோன்று பாவிகளுக்கு மறுஉலகில் வழங்கப்படும் தண்டனை நரகம் ஆகும். நரகத்தில் அளிக்கப்படும் தண்டனை விபரம் வருமாறு:
நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
‘கொதிக்கும் ஊற்றிலிருந்து, நீர் புகட்டப்படும், அவர்களுக்கு விஷச்செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களை கொழுக்கவும் வைக்காது; பசியையும் தணிக்காது’. (திருக்குர்ஆன் 88:5,6,7)
‘உங்களுடைய (உலக) நெருப்பு, நரகத்தின் நெருப்பிலிருந்து எழுபது பங்கில் ஒரு பங்கு ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு கல் நரகத்தின் படுகுழியில் போடப்பட்டது; எழுபது வருடங்கள் ஆகியும் அது இன்னும் சேரவில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உத்பாபின் ஹிஸ்வான் (ரலி), நூல்: முஸ்லிம்)
இத்தகைய நரகிலிருந்து விடுதலை பெற வைக்கும் மகத்துவமிக்கது தான் ரமலான் மாத நோன்பு ஆகும்.
‘ரமலான் வந்துவிட்டால், நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன’. (நூல்: புகாரி)
‘ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது’. (நூல்: அஹ்மது)
‘நோன்பு நரகத்தை விட்டு பாதுகாக்கும் ஒரு கேடயம்’. (நபிமொழி)
‘மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது, சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘ரமலானின் கடைசிப் (பத்து) பகுதி நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்’. (நபிமொழி)
எனவே, அந்த கடைசிப் பத்து நாட்களில் பின்வரும் பிரார்த்தனையை செய்வோம். ‘அல்லாஹூம்ம அஃதிக்னா மினன்னாரி, வஅத்கில்னல் ஜன்னத யாரப்பல் ஆலமீன்’. இதன் பொருள்: ‘அகில உலக ரட்சகனே, நரகத்தில் இருந்து எங்களை காப்பாற்றி, சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக’.
ரமலான் நோன்பு நோற்று, இந்த பிரார்த்தனையும் புரிந்து நரகத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவோமாக, ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி






