என் மலர்
இஸ்லாம்
உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது- ஒட்டி வாழுகின்ற உறவுகளை காரணங்கள் இன்றி வெட்டி வாழ்கின்ற நிலைதான்.
உறவுகளின் மேம்பாடுகள் சரியாக புரியப்படாமல் போனதால் தான் கூட்டுக் குடும்ப தத்துவங்கள் சிதைந்து போயின. முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்து விட்டன. உறவின் உன்னதங்கள் புரியப்படாமல் மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கின்றது.
மாற்று மதத்தவர்களிடம் மாமன் மச்சான் உறவு கொண்டாடிய கிராமிய பண்புகள் முகங்கள் திருப்பி மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த மன மாச்சரியங்கள் மனிதகுலம் முன்னேறுவதற்கு தடைக்கற்களாக மட்டுமல்லாமல், பகை உணர்ச்சிகளை கொழுந்து விட்டு எரியச் செய்யும் கிரியா ஊக்கிகளாய் கூட செயல்படுகின்றன.
அல்லாஹ் தன் அருள்மறையில் “அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையோரென்றால், அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்” (திருக்குர்ஆன் 13:21) என்று நல்லடியார்களின் குணாதிசயங்களை படம்பிடித்துக் காட்டுகின்றான்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி உறவுகளில், திருமண பந்தங்களால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட உறவுகளில், நட்பால் மலர்ந்த உறவுகளில், நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் ஆணித்தரமாக விளக்கி கூறியுள்ளது.
‘யார் உறவை வெட்டி வாழ்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருடன் பேசாமல் இருப்பதே மகா பெரிய பாவம்’ என்று மிக கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
பிரச்சினையற்ற வாழ்க்கை எந்த மனிதனுக்கும் அமைவதில்லை என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்சினைகளில் பெரும்பகுதி உறவுகளால் ஏற்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தால் அதன் காரணம் மிக அற்பமாக இருக்கும். புரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இந்த இரண்டு நிலைகளின் இடையே விளைவது தான் உறவுகளில் விரிசல்கள்.
பெற்றோர்களே, பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களை மதித்துப் பாருங்கள். உறவுகளின் உன்னதங்களை நினைத்துப் பாருங்கள், வேற்றுமை விலகி மனம் லேசாவதை உணர்வீர்கள். உடைந்த பாத்திரம் வேண்டுமென்றால் ஒட்டாமல் போகலாம், ஆனால் எந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் உறவுகள் மட்டும் ஒட்டிக்கொள்ளும்.
அல்லாஹ் கூறுகிறான், ‘உறவுகளை எந்த நிலையிலும் சேர்ந்து வாழ்கின்றவரே என்னுடைய நல்லடியார்’. அண்ணல் எம்பெருமானார் அவர்களும் தன் வாழ்வில் பல கட்டங்களில் இதை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள்.
“இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 42:23) என்று கூறி அல்லாஹ் நபிகள் மூலம் நமக்கு உறவுகளின் நேசத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றான்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பது மனித உறவில் இயல்பு. இதை ஏற்றுக்கொண்டு அவர்களையும் அரவணைத்து, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை, கவுரவங்களை, கண்ணியங்களை கொடுக்கும் போது அவர்களை நாம் மதிக்கிறோம் என்ற மனப்பாங்கில் அவர்கள் மனமும் குளிர்ந்து விடும், வேற்றுமையும் மறந்து விடும்.
அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் போதுதான் உறவுகளின் உன்னதத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம் மனதிலும் அன்பும், பண்பும், பணிவும், பாசமும், நேசமும் வந்து குடியேறும்.
உறவுகளை உன்னதமாய் மதிக்கின்ற சிறந்த வாழ்வை நாமும் வாழ முடியும் என்று உறுதியோடு முயற்சிப்போம். உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
உறவுகளின் மேம்பாடுகள் சரியாக புரியப்படாமல் போனதால் தான் கூட்டுக் குடும்ப தத்துவங்கள் சிதைந்து போயின. முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்து விட்டன. உறவின் உன்னதங்கள் புரியப்படாமல் மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கின்றது.
மாற்று மதத்தவர்களிடம் மாமன் மச்சான் உறவு கொண்டாடிய கிராமிய பண்புகள் முகங்கள் திருப்பி மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த மன மாச்சரியங்கள் மனிதகுலம் முன்னேறுவதற்கு தடைக்கற்களாக மட்டுமல்லாமல், பகை உணர்ச்சிகளை கொழுந்து விட்டு எரியச் செய்யும் கிரியா ஊக்கிகளாய் கூட செயல்படுகின்றன.
அல்லாஹ் தன் அருள்மறையில் “அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையோரென்றால், அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்” (திருக்குர்ஆன் 13:21) என்று நல்லடியார்களின் குணாதிசயங்களை படம்பிடித்துக் காட்டுகின்றான்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி உறவுகளில், திருமண பந்தங்களால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட உறவுகளில், நட்பால் மலர்ந்த உறவுகளில், நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் ஆணித்தரமாக விளக்கி கூறியுள்ளது.
‘யார் உறவை வெட்டி வாழ்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருடன் பேசாமல் இருப்பதே மகா பெரிய பாவம்’ என்று மிக கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
பிரச்சினையற்ற வாழ்க்கை எந்த மனிதனுக்கும் அமைவதில்லை என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்சினைகளில் பெரும்பகுதி உறவுகளால் ஏற்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தால் அதன் காரணம் மிக அற்பமாக இருக்கும். புரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இந்த இரண்டு நிலைகளின் இடையே விளைவது தான் உறவுகளில் விரிசல்கள்.
பெற்றோர்களே, பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களை மதித்துப் பாருங்கள். உறவுகளின் உன்னதங்களை நினைத்துப் பாருங்கள், வேற்றுமை விலகி மனம் லேசாவதை உணர்வீர்கள். உடைந்த பாத்திரம் வேண்டுமென்றால் ஒட்டாமல் போகலாம், ஆனால் எந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் உறவுகள் மட்டும் ஒட்டிக்கொள்ளும்.
அல்லாஹ் கூறுகிறான், ‘உறவுகளை எந்த நிலையிலும் சேர்ந்து வாழ்கின்றவரே என்னுடைய நல்லடியார்’. அண்ணல் எம்பெருமானார் அவர்களும் தன் வாழ்வில் பல கட்டங்களில் இதை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள்.
“இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 42:23) என்று கூறி அல்லாஹ் நபிகள் மூலம் நமக்கு உறவுகளின் நேசத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றான்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பது மனித உறவில் இயல்பு. இதை ஏற்றுக்கொண்டு அவர்களையும் அரவணைத்து, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை, கவுரவங்களை, கண்ணியங்களை கொடுக்கும் போது அவர்களை நாம் மதிக்கிறோம் என்ற மனப்பாங்கில் அவர்கள் மனமும் குளிர்ந்து விடும், வேற்றுமையும் மறந்து விடும்.
அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் போதுதான் உறவுகளின் உன்னதத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம் மனதிலும் அன்பும், பண்பும், பணிவும், பாசமும், நேசமும் வந்து குடியேறும்.
உறவுகளை உன்னதமாய் மதிக்கின்ற சிறந்த வாழ்வை நாமும் வாழ முடியும் என்று உறுதியோடு முயற்சிப்போம். உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
நபியவர்களின் முன்மாதிரியின் நிழல்கள் பல துறைகளிலும் சூழ்ந்துள்ளதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வை உற்றுக் கவனித்தால் புலப்படும்.
அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. மானுட நீதிக்கான இலக்கணங்கள் திருத்தப்பட்டு போயின. சுயக் கட்டுப்பாடுகளை இழந்து அதர்மத்தின் வலைக்குள் சிக்கி மக்கள் தவித்த நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு புதல்வராய் பிறந்தார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப், ‘முஹம்மது’ (புகழுக்குரியவர்) என்று அவருக்கு பெயர் சூட்டினார். பிறக்கும் போதே தந்தையை இழந்து, பிறந்தபின் தாயை இழந்து, அனாதையாக வாழ்ந்தார்கள்.
இருண்ட உலகில் வாழ்ந்த மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இறைவனால் அனுப்பப்பட்ட நபிகளில் இறுதி நபியாக, அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அமைதி, பரிவு, பாசம், கோபம் கொள்ளாமை, மக்களை நெறிப்படுத்துதல் போன்ற நற்குணங்களால் நபிகளாரின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது. சிறந்த குணங்களின் பிறப்பிடமாக நபியின் அறிமுகத்தைத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான் அல்லாஹ்.
‘(நபியே) நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்’. (திருக்குர்ஆன் 68:4)
ஏகத்துவமென்ற ஓரிறையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து உணர்வுப்பூர்வமான ஆதாரங்களை சுட்டிக்காட்டி நபியின் பிரச்சாரம் இருந்தது. மக்காவில் பெரிய குலத்தித்தின் வாரிசு, இறைத்தூதரென்று சுய தம்பட்டம் பேசியதில்லை. தன் வீட்டில் மூன்று வேளை அடுப்பில் தீயில்லாவிட்டாலும், மக்களின் வீட்டின் தீ அணைந்து விடக் கூடாதென்பதற்காக மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் குணமே மக்கா நகர மக்களை இழுக்கும் காந்தமானது.
‘(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (திருக்குர்ஆன் 3:159)
ஆட்சி, அதிகாரங்கள் தன் எதிரியை பழிவாங்குவதற்கு அல்ல. மாறாக மக்களுக்கு தொண்டு செய்யவே என்பதை தன் செயல் பாடுகள் மூலம் நிரூபித்து, பழிவாங்கும் எண்ணத்தை எரித்து அன்பை விதைத்த ஆட்சியாளர் நபி (ஸல்).
அறியாமை காலத்தில் கஅபா ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. அதன் சாவியும் அவர் வசமே இருந்தது. ஆரம்பத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை கஅபாவின் உள்ளே அனுமதிக்குமாறு எவ்வளவோ வேண்டியும் அவர் அனுமதிக்கவில்லை.
உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உஸ்மானே, ஒரு நாள் அதன் சாவி எனது கையில் வரும். அதை நான் உமக்குத் தருவேன்’ என்று வாக்களித்தார்கள்.
ஹிஜ்ரி 8-ம் ஆண்டு புனித கஅபா வெற்றி கொள்ளப்பட்டது. உஸ்மான்பின் தல்ஹா (ரலி) வசம் இருந்த சாவியைக் கொண்டுவரச் சொன்ன நபிகளார் கஅபாவைத் திறந்து, உள்ளே சென்று தொழுதுவிட்டு வந்தார்கள்.
அப்போது அலி (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகியோர் கஅபாவின் திறவுகோலுடன் நபியைச் சந்தித்து ‘இறைத்தூதரே, ஹாஜிகளுக்கு (ஹஜ்ஜுக்காக பயணம் வருபவர்களுக்கு) நீர் புகட்டும் பணியுரிமை, கதவு திறக்கும் உரிமை ஆகியவற்றை எங்களுக்குத் தாருங்கள்’ என வேண்டினர்.
‘உஸ்மான் பின் தல்ஹா எங்கே?’ என்று வினவிய நபியவர்கள், அவர் வந்த பின் அவரிடமே கஅபாவின் திறவுகோலை ஒப்படைத்து, ‘இது என்றைக்கும் உங்கள் குடும்பத்தார் வசமே இருக்கும். அக்கிரமக்காரனைத் தவிர வேறு எவனும் அதைப் பறிக்க மாட்டான். இந்த ஆலயத்திற்கு இறைவன் உங்களைக் காப்பாளராக ஆக்கியுள்ளான்’ என்றார்கள்.
உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு கொடுத்த வாக்கை நபியவர்கள் காப்பாற்றினார்கள். நபியின் வாக்குறுதி அடிப்படையில் இதுநாள் வரை, உலகம் அழியும் வரை அவரின் குடும்பத்தார் வசமே கஅபாவின் திறவுகோல் இருக்கிறது.
அன்று போட்ட ஏகத்துவ விதை கடல் கடந்து வியாபித்ததற்கு நபியின் நற்குணத்தின் புரட்சியே முக்கிய காரணமாகும். இறைவனால் தனக்கு அருளப்பட்ட குர்ஆனைக் கொண்டு இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சொல்லுக்கும், செயலுக்கும் எந்த மாறுபாடும் இன்றி அவர்களது வாழ்க்கை அமைந்திருந்தது.
ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது?’ எனக்கேட்டபோது, ‘நபி (ஸல்) அவர்களின் குணம், குர்ஆனாக இருந்தது’ எனக்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
படிப்பறிவும், எழுத்தறிவும் ஏதும் இல்லாமல் பகுத்தறிவுக்கு பாதையிட்டார்கள். நபியவர்களின் முன்மாதிரியின் நிழல்கள் பல துறைகளிலும் சூழ்ந்துள்ளதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வை உற்றுக் கவனித்தால் புலப்படும். இதை மேற்கோள் காட்டி உங்களுக்கு அழகிய முன்மாதிரி நபியிடம் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் நமக்குச் செய்தி தருகிறான்.
மகனாக, தந்தையாக, கணவனாக, தலைவனாக, தளபதியாக, வியாபாரியாக, தோழனாக, ஆசிரியராக, மாணவராக, நபியாக வாழ்ந்து எதிரிகளும் வாழ்த்துரை வழங்கும் மனிதராக அனைத்து தரப்பினர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்கள். நற்குணங்களின் நாயகர் முஹம்மது நபியை வாழ்க்கை முழுவதும் நாம் பின்பற்றுவோம்.
எ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப், ‘முஹம்மது’ (புகழுக்குரியவர்) என்று அவருக்கு பெயர் சூட்டினார். பிறக்கும் போதே தந்தையை இழந்து, பிறந்தபின் தாயை இழந்து, அனாதையாக வாழ்ந்தார்கள்.
இருண்ட உலகில் வாழ்ந்த மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இறைவனால் அனுப்பப்பட்ட நபிகளில் இறுதி நபியாக, அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அமைதி, பரிவு, பாசம், கோபம் கொள்ளாமை, மக்களை நெறிப்படுத்துதல் போன்ற நற்குணங்களால் நபிகளாரின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது. சிறந்த குணங்களின் பிறப்பிடமாக நபியின் அறிமுகத்தைத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான் அல்லாஹ்.
‘(நபியே) நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்’. (திருக்குர்ஆன் 68:4)
ஏகத்துவமென்ற ஓரிறையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து உணர்வுப்பூர்வமான ஆதாரங்களை சுட்டிக்காட்டி நபியின் பிரச்சாரம் இருந்தது. மக்காவில் பெரிய குலத்தித்தின் வாரிசு, இறைத்தூதரென்று சுய தம்பட்டம் பேசியதில்லை. தன் வீட்டில் மூன்று வேளை அடுப்பில் தீயில்லாவிட்டாலும், மக்களின் வீட்டின் தீ அணைந்து விடக் கூடாதென்பதற்காக மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் குணமே மக்கா நகர மக்களை இழுக்கும் காந்தமானது.
‘(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (திருக்குர்ஆன் 3:159)
ஆட்சி, அதிகாரங்கள் தன் எதிரியை பழிவாங்குவதற்கு அல்ல. மாறாக மக்களுக்கு தொண்டு செய்யவே என்பதை தன் செயல் பாடுகள் மூலம் நிரூபித்து, பழிவாங்கும் எண்ணத்தை எரித்து அன்பை விதைத்த ஆட்சியாளர் நபி (ஸல்).
அறியாமை காலத்தில் கஅபா ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. அதன் சாவியும் அவர் வசமே இருந்தது. ஆரம்பத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை கஅபாவின் உள்ளே அனுமதிக்குமாறு எவ்வளவோ வேண்டியும் அவர் அனுமதிக்கவில்லை.
உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உஸ்மானே, ஒரு நாள் அதன் சாவி எனது கையில் வரும். அதை நான் உமக்குத் தருவேன்’ என்று வாக்களித்தார்கள்.
ஹிஜ்ரி 8-ம் ஆண்டு புனித கஅபா வெற்றி கொள்ளப்பட்டது. உஸ்மான்பின் தல்ஹா (ரலி) வசம் இருந்த சாவியைக் கொண்டுவரச் சொன்ன நபிகளார் கஅபாவைத் திறந்து, உள்ளே சென்று தொழுதுவிட்டு வந்தார்கள்.
அப்போது அலி (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகியோர் கஅபாவின் திறவுகோலுடன் நபியைச் சந்தித்து ‘இறைத்தூதரே, ஹாஜிகளுக்கு (ஹஜ்ஜுக்காக பயணம் வருபவர்களுக்கு) நீர் புகட்டும் பணியுரிமை, கதவு திறக்கும் உரிமை ஆகியவற்றை எங்களுக்குத் தாருங்கள்’ என வேண்டினர்.
‘உஸ்மான் பின் தல்ஹா எங்கே?’ என்று வினவிய நபியவர்கள், அவர் வந்த பின் அவரிடமே கஅபாவின் திறவுகோலை ஒப்படைத்து, ‘இது என்றைக்கும் உங்கள் குடும்பத்தார் வசமே இருக்கும். அக்கிரமக்காரனைத் தவிர வேறு எவனும் அதைப் பறிக்க மாட்டான். இந்த ஆலயத்திற்கு இறைவன் உங்களைக் காப்பாளராக ஆக்கியுள்ளான்’ என்றார்கள்.
உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு கொடுத்த வாக்கை நபியவர்கள் காப்பாற்றினார்கள். நபியின் வாக்குறுதி அடிப்படையில் இதுநாள் வரை, உலகம் அழியும் வரை அவரின் குடும்பத்தார் வசமே கஅபாவின் திறவுகோல் இருக்கிறது.
அன்று போட்ட ஏகத்துவ விதை கடல் கடந்து வியாபித்ததற்கு நபியின் நற்குணத்தின் புரட்சியே முக்கிய காரணமாகும். இறைவனால் தனக்கு அருளப்பட்ட குர்ஆனைக் கொண்டு இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சொல்லுக்கும், செயலுக்கும் எந்த மாறுபாடும் இன்றி அவர்களது வாழ்க்கை அமைந்திருந்தது.
ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது?’ எனக்கேட்டபோது, ‘நபி (ஸல்) அவர்களின் குணம், குர்ஆனாக இருந்தது’ எனக்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
படிப்பறிவும், எழுத்தறிவும் ஏதும் இல்லாமல் பகுத்தறிவுக்கு பாதையிட்டார்கள். நபியவர்களின் முன்மாதிரியின் நிழல்கள் பல துறைகளிலும் சூழ்ந்துள்ளதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வை உற்றுக் கவனித்தால் புலப்படும். இதை மேற்கோள் காட்டி உங்களுக்கு அழகிய முன்மாதிரி நபியிடம் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் நமக்குச் செய்தி தருகிறான்.
மகனாக, தந்தையாக, கணவனாக, தலைவனாக, தளபதியாக, வியாபாரியாக, தோழனாக, ஆசிரியராக, மாணவராக, நபியாக வாழ்ந்து எதிரிகளும் வாழ்த்துரை வழங்கும் மனிதராக அனைத்து தரப்பினர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்கள். நற்குணங்களின் நாயகர் முஹம்மது நபியை வாழ்க்கை முழுவதும் நாம் பின்பற்றுவோம்.
எ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:
கல் மனதையும் கரைந்து போகச் செய்து, அதனை இரக்கமுடையதாக மாற்றிடும் தன்மை என்பது, பசியினை உணர்வது கொண்டு நிகழ்வதாகும். அந்த பசியினை அனைவரும் உணர்ந்து தன்னை அறிய வேண்டும் என்பதே அருள்வளம் நிறைந்த ரமலானின் புண்ணிய நோக்கமாகும்.
இறை உணர்வில் ‘தனித்து இரு’, இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனது அருளைப் பெற விழிப்புடன் ‘விழித்து இரு’, இறைவனை பற்றியும் அவனது வல்லமைகள் குறித்தும் அறிந்து கொள்வதில் ‘பசித்திரு’. (அதில் ஆவல் கொண்டவனாக இரு).
“தனித்திரு-விழித்திரு-பசித்திரு” என்ற மூன்று நிலை பயிற்சிகளையும் செயல்படுத்தி காட்டிட கடமையாக்கப்பட்டது தான் ரமலான் நோன்பாகும். மனிதனின் பாவங்களை எரித்து அழித்து, நன்மைகளை அதிகமாக பெறும் வகையில் ரமலான் நோன்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மனித வாழ்வியலானது சிறந்தோங்க இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமையாக, நடுநாயகமாக நின்று முந்தைய இரண்டு கடமைகளான கலிமா (ஏகத்துவ உறுதி மொழி), தொழுகை என்ற ஞானப் பயிற்சி இவை இரண்டையும் ஓர்மையுடன் ஒழுங்காக நிறைவேற்றிட ரமலான் நோன்பு துணைபுரிகிறது.
அதுபோன்று இஸ்லாத்தின் பிந்தைய கடமைகளான ஏழைகளுக்கு ஜக்காத் கொடுப்பதற்கும், சகோதர எண்ணத்தை மனதில் வளரச்செய்து ஹஜ் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்து எதிர்கொள்ள அடித்தளமிடுவது தான் ரமலான் நோன்பாகும்.
11 மாதங்கள் விரும்பியதை சாப்பிட்டு மகிழ்ந்த மனித மனதை, வருடத்தில் ஒரு மாதம் உடலாலும் மனதாலும் செயலாலும் பசித்திருக்கச் செய்து மனிதனை ஞானப்பக்குவ நிலைக்கு உயர்த்துவது தான் ரமலான் நோன்பாகும்.
சுகபோகங்கள் எல்லாம் தன்னைச் சூழ இருந்த போதிலும் அதனை பகல் பொழுதில் தீண்டாமல் இருந்து, ஐம்புலன்களையும் அடக்கி, அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற பயிற்சியினை தருவதும் ரமாலான் நோன்பாகும்.
இது மனித மனங்களில் ஏற்படும் பாவமான எண்ணங்களை எல்லாம் போக்கி, அதனைப் பரிசுத்தப்படுத்திட உதவுகிறது. பிறரின் இன்னல்களை, கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவுவதற்கும் இந்த ரமலான் நோன்பு துணை செய்கிறது.
பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:
“சொர்கத்தில் ‘ரய்யான்’ என்ற நுழையும் வாசல் உள்ளது, மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். நோன்பாளிகளை தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்”. (நூல்: புகாரி)
ரமலானின் சிறப்பை நாம் உணர்ந்திட வேண்டும் என்பதற்காக நபிகளார் ரமலான் மாதம் தொடங்க இரண்டு மாதங்கள் முன்பிருந்தே இவ்வாறு பிரார்த்தனை புரிய தொடங்கி விடுவார்கள், “யா அல்லாஹ், எங்களுக்கு நீ ரஜப், ஷஅபான் மாதங்களில் ‘பரகத்’ என்ற நல்வளர்ச்சியினை தந்து, ரமலான் மாதத்தை அடைந்திடும் நற்பேற்றினையும் எங்களுக்கு அருள்வாயாக, என்பார்கள்”, (நூல்: புகாரி).
அன்பு, இரக்கம், பிரியம் ஆதரவு, தர்மம், ஒழுக்கம், பண்பாடு, பணிவு இணக்கம், வணக்கம் போன்ற நற்செயல்களை வளர்த்து காமம், பேராசை, போட்டி, பொறாமை, விரோதம், குரோதம், கர்வம் போன்ற கீழான செயல்களை தடுப்பதும் ரமலானின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
பாவங்களை எரித்து, அதனை கரித்திடும் ரம்மியம் மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடித்து இறைவனின் பேரன்பை அனைவரும் பெற்றிடுவோம்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
இறை உணர்வில் ‘தனித்து இரு’, இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனது அருளைப் பெற விழிப்புடன் ‘விழித்து இரு’, இறைவனை பற்றியும் அவனது வல்லமைகள் குறித்தும் அறிந்து கொள்வதில் ‘பசித்திரு’. (அதில் ஆவல் கொண்டவனாக இரு).
“தனித்திரு-விழித்திரு-பசித்திரு” என்ற மூன்று நிலை பயிற்சிகளையும் செயல்படுத்தி காட்டிட கடமையாக்கப்பட்டது தான் ரமலான் நோன்பாகும். மனிதனின் பாவங்களை எரித்து அழித்து, நன்மைகளை அதிகமாக பெறும் வகையில் ரமலான் நோன்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மனித வாழ்வியலானது சிறந்தோங்க இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமையாக, நடுநாயகமாக நின்று முந்தைய இரண்டு கடமைகளான கலிமா (ஏகத்துவ உறுதி மொழி), தொழுகை என்ற ஞானப் பயிற்சி இவை இரண்டையும் ஓர்மையுடன் ஒழுங்காக நிறைவேற்றிட ரமலான் நோன்பு துணைபுரிகிறது.
அதுபோன்று இஸ்லாத்தின் பிந்தைய கடமைகளான ஏழைகளுக்கு ஜக்காத் கொடுப்பதற்கும், சகோதர எண்ணத்தை மனதில் வளரச்செய்து ஹஜ் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்து எதிர்கொள்ள அடித்தளமிடுவது தான் ரமலான் நோன்பாகும்.
11 மாதங்கள் விரும்பியதை சாப்பிட்டு மகிழ்ந்த மனித மனதை, வருடத்தில் ஒரு மாதம் உடலாலும் மனதாலும் செயலாலும் பசித்திருக்கச் செய்து மனிதனை ஞானப்பக்குவ நிலைக்கு உயர்த்துவது தான் ரமலான் நோன்பாகும்.
சுகபோகங்கள் எல்லாம் தன்னைச் சூழ இருந்த போதிலும் அதனை பகல் பொழுதில் தீண்டாமல் இருந்து, ஐம்புலன்களையும் அடக்கி, அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற பயிற்சியினை தருவதும் ரமாலான் நோன்பாகும்.
இது மனித மனங்களில் ஏற்படும் பாவமான எண்ணங்களை எல்லாம் போக்கி, அதனைப் பரிசுத்தப்படுத்திட உதவுகிறது. பிறரின் இன்னல்களை, கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவுவதற்கும் இந்த ரமலான் நோன்பு துணை செய்கிறது.
பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:
“சொர்கத்தில் ‘ரய்யான்’ என்ற நுழையும் வாசல் உள்ளது, மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். நோன்பாளிகளை தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்”. (நூல்: புகாரி)
ரமலானின் சிறப்பை நாம் உணர்ந்திட வேண்டும் என்பதற்காக நபிகளார் ரமலான் மாதம் தொடங்க இரண்டு மாதங்கள் முன்பிருந்தே இவ்வாறு பிரார்த்தனை புரிய தொடங்கி விடுவார்கள், “யா அல்லாஹ், எங்களுக்கு நீ ரஜப், ஷஅபான் மாதங்களில் ‘பரகத்’ என்ற நல்வளர்ச்சியினை தந்து, ரமலான் மாதத்தை அடைந்திடும் நற்பேற்றினையும் எங்களுக்கு அருள்வாயாக, என்பார்கள்”, (நூல்: புகாரி).
அன்பு, இரக்கம், பிரியம் ஆதரவு, தர்மம், ஒழுக்கம், பண்பாடு, பணிவு இணக்கம், வணக்கம் போன்ற நற்செயல்களை வளர்த்து காமம், பேராசை, போட்டி, பொறாமை, விரோதம், குரோதம், கர்வம் போன்ற கீழான செயல்களை தடுப்பதும் ரமலானின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
பாவங்களை எரித்து, அதனை கரித்திடும் ரம்மியம் மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடித்து இறைவனின் பேரன்பை அனைவரும் பெற்றிடுவோம்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
உலகில் இன்றைய நிலவரப்படி 14.4 கோடி ஆதரவற்றவர்கள் உள்ளனர். ஒவ்வொரு 14 நொடியிலும் ஒரு ஆதரவற்ற குழந்தை உருவாகுவதையும், 2 நிமிடத்திற்கு ஒரு ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு, போதிய ஊட்டச்சத்து இன்றி இருப்பதாகவும் ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாய்-தந்தை இல்லாத குழந்தைகள், பெற்ற பிள்ளைகளின் துணையின்றி தவிக்கும் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்கள் ஆகியோரே சமூகத்தால் ஆதரவற்றவர்கள், அநாதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் மகன்-மகள்கள், அதேபோல் பெற்ற குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுச் செல்லும் தாய்மார்களும் உள்ளனர்.
ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ‘அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மிகச்சிறந்தது ஆதரவற்றவர்களை அரவணைப்பதாகும்' என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வலியுறுத்தலாகும்.
ஆதரவற்றவர்களிடம் மிகச்சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் வலியுறுத்தல்கள் நீண்டுசெல்கின்றன. இந்த செயல்கள் அனைத்தும் இறைவணக்கமாக கருதப்படும் என்பது இஸ்லாத்தின் சிறப்பான பார்வையாகும். ஆதரவற்றவர்கள், அநாதைகள் ஆகியோருக்கு உதவுபவர்கள் சொர்க்கத்தில் கற்பூரம் கலந்த ஊற்று நீரை பருகுவார்கள் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
ஆதரவற்றவர்களை மனித சமூகம் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது. சாதாரணமாக யாசகம் கேட்டு வருபவர்களிடம்கூட முகத்தை திருப்பிக்கொள்வதும், ‘ஒன்றும் இல்லை போ’ என்று விரட்டுபவர்களும் தாம் மனிதர்களில் அதிகம். அதேநேரம் ஆதரவற்றவர்களை அரவணைக்க ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
நமது குடும்பத்தில், உற்றார்-உறவினர்களில் ஆதரவற்றவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நமது தாய்-தந்தையாக, சகோதர-சகோதரியாக, பெற்ற பிள்ளையாக கருதி அவர்களை பராமரித்து வர வேண்டும். அந்த வீட்டைத்தான் இறைவனும் விரும்புகிறான். நபிகள் நாயகம் சொல்கிறார்கள் ‘ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீய முறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு’ என்று.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நானும் அநாதைகளின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்: புகாரி).
நபிகளாரை உயிருக்குமேலாக நேசிப்பவர்கள் அவர் அருகில் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் ஆதரவற்றவர்களை அரவணைத்து செல்வது அவசியமாகும்.
சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் ஆதரவற்றவர்களையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துவதோ கூடாது. அப்படி நடந்துகொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என இறைவன் திருக்குர்ஆனில் கண்டிக்கிறான். மறுமையை நம்பாதவர் இறைவனை நம்பாதவர் போலாவார். ஆதரவற்றவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் இறை மறுப்புக்கு உண்டான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே இறைவனின் செய்தி.
‘நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையாக்க விரும்பினால் ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் தலையை கருணையோடு நீவி விடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம். ஆம், இவ்வாறு அனைவரும் நடந்துகொண்டால் இதயம் மென்மையாவது மட்டுமல்ல இறைவனின் அருளும் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- வி. களத்தூர் பாரூக்
தாய்-தந்தை இல்லாத குழந்தைகள், பெற்ற பிள்ளைகளின் துணையின்றி தவிக்கும் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்கள் ஆகியோரே சமூகத்தால் ஆதரவற்றவர்கள், அநாதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் மகன்-மகள்கள், அதேபோல் பெற்ற குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுச் செல்லும் தாய்மார்களும் உள்ளனர்.
ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ‘அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மிகச்சிறந்தது ஆதரவற்றவர்களை அரவணைப்பதாகும்' என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வலியுறுத்தலாகும்.
ஆதரவற்றவர்களிடம் மிகச்சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் வலியுறுத்தல்கள் நீண்டுசெல்கின்றன. இந்த செயல்கள் அனைத்தும் இறைவணக்கமாக கருதப்படும் என்பது இஸ்லாத்தின் சிறப்பான பார்வையாகும். ஆதரவற்றவர்கள், அநாதைகள் ஆகியோருக்கு உதவுபவர்கள் சொர்க்கத்தில் கற்பூரம் கலந்த ஊற்று நீரை பருகுவார்கள் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
ஆதரவற்றவர்களை மனித சமூகம் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது. சாதாரணமாக யாசகம் கேட்டு வருபவர்களிடம்கூட முகத்தை திருப்பிக்கொள்வதும், ‘ஒன்றும் இல்லை போ’ என்று விரட்டுபவர்களும் தாம் மனிதர்களில் அதிகம். அதேநேரம் ஆதரவற்றவர்களை அரவணைக்க ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
நமது குடும்பத்தில், உற்றார்-உறவினர்களில் ஆதரவற்றவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நமது தாய்-தந்தையாக, சகோதர-சகோதரியாக, பெற்ற பிள்ளையாக கருதி அவர்களை பராமரித்து வர வேண்டும். அந்த வீட்டைத்தான் இறைவனும் விரும்புகிறான். நபிகள் நாயகம் சொல்கிறார்கள் ‘ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீய முறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு’ என்று.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நானும் அநாதைகளின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்: புகாரி).
நபிகளாரை உயிருக்குமேலாக நேசிப்பவர்கள் அவர் அருகில் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் ஆதரவற்றவர்களை அரவணைத்து செல்வது அவசியமாகும்.
சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் ஆதரவற்றவர்களையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துவதோ கூடாது. அப்படி நடந்துகொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என இறைவன் திருக்குர்ஆனில் கண்டிக்கிறான். மறுமையை நம்பாதவர் இறைவனை நம்பாதவர் போலாவார். ஆதரவற்றவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் இறை மறுப்புக்கு உண்டான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே இறைவனின் செய்தி.
‘நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையாக்க விரும்பினால் ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் தலையை கருணையோடு நீவி விடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம். ஆம், இவ்வாறு அனைவரும் நடந்துகொண்டால் இதயம் மென்மையாவது மட்டுமல்ல இறைவனின் அருளும் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- வி. களத்தூர் பாரூக்
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).
ரமலான் மாதம் புனிதமானது என்று அழைக்கப்படுவதற்கு காரணம்- அந்த நாட்களில் பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு வைத்து நற்செயல்களை செய்வதால் மட்டுமல்ல. அந்த மாதத்தில் தான் புனிதமிகு அருள்மறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.
“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (திருக்குர்ஆன் 2:185).
மனித குலம் பெற்ற மாபெரும் பாக்கியம் திருக்குர்ஆன் என்பதை பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
“அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அலைஹிவஸல்லாம் மூலமாக நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய இதுதான் வேத நூல், இதில் சந்தேகமே இல்லை. இறையச்சம் உடையவர்களுக்கு இது நேரான வழியை காட்டும்”. (திருக்குர்ஆன் 2:1-2)
“(நபியே) அல்லாஹ்வே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் (திருக்குர்ஆனையும்) இறக்கியுள்ளான். (திருக்குர்ஆன் 3:3,4)
“இது (திருக்குர்ஆன்) உலக மாந்தர் அனைவருக்கும் நல் உபதேசமே ஆகும்”. (திருக்குர்ஆன் 6:90)
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).
திருக்குர்ஆன் அருளப்பட்டது ஒரு நாட்டினருக்காகவோ, ஒரு மதத்தினருக்காகவோ, ஒரு சாராருக்காகவோ அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத்தான் அருளப்பட்டது. இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அத்தனை உயிர்களும் உலகில் மேம்பட்டு வாழ சொல்லப்பட்ட நன்னெறி வாழ்வியல் தத்துவங்கள் தான்.
‘இறைவன் ஒருவனே’ என்பது இதன் அடிப்படை. ஆனால் அதையும் தாண்டி சொல்லப்பட்ட மற்றவை எல்லாமே மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளின் தீர்வாக தான் அமைந்திருக்கின்றது.
மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், சகோதரர்கள் என்று சமத்துவத்தையும், பெண்ணினத்தின் உயர்வையும், அதன் விடுதலையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் வலியுறுத்தியது. பக்கத்து வீட்டாரின் உரிமைகள், உறவுகளோடு மனிதர்களின் ஈடுபாடு, வணிகங்களில், தொழில்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியாயம், அனாதை-ஏழைகளை அரவணைக்க கூடிய அன்பு... என்று எல்லா விஷயங்களிலும் உள்ள நடைமுறைகள், நெறிமுறைகளை திருக்குர்ஆன் விளக்குகிறது.
இறைவணக்க வழிபாடுகளில் எந்தவித வேறுபாடுகள் இன்றி தோளோடு தோள் சேர்ந்து அனைவரும் சமம் என்ற தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது திருக்குர்ஆன். அதுபோல ஆணுக்குரிய எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்று அரபு உலகில் புரட்சியைக்கொண்டு வந்தது திருக்குர்ஆன். விதவைகள் மறுமணம் புரிய வழி செய்யப்பட்டது, சொத்துரிமையில் மூன்றில் இரண்டு பங்கு, மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட பல்வேறு பெண்ணிய உரிமைகள் குறித்து திருக்குர்ஆன் விளக்குகிறது.
பக்கத்து வீட்டார், எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் உரிமைகள் பேணப்பட வேண்டும். அவர் பசித்திருக்க நீ வயிறார உண்பதற்கு உரிமை கிடையாது. நல்ல உணவு நீ சமைக்கும்போது அவருக்கான பங்கையும் அதில் சேர்த்து விடு. அவர் சுக துக்கங்களில் பங்கு எடுப்பது உனது கடமை என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
அதுபோல, ‘உறவுகளை பகைத்து வாழ்பவன் சொர்க்கத்தின் நறுமணத்தை கூட நுகர முடியாது’ என்று எச்சரிக்கையை விடுத்து உறவுகளோடு இணைந்து வாழ வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.
“நிறுவைகளை அளவுகளை நீதமாய் அளந்து கொடுங்கள்” என்கின்றது திருக்குர்ஆன். பொருள்களின் உண்மை தன்மையைச் சொல்லி வியாபாரம் செய்யுங்கள், பதுக்கல், கலப்படம் செய்யாதீர்கள், அதிக விலைக்கு விற்காதீர்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறது.
இப்படிப்பட்ட நன்னெறிகளை சொல்வதால் திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எந்த மதத்தவர் ஆனாலும் இதனை படிக்கலாம், அதன்படி நடக்கலாம். அதன் தத்துவங்களை நடைமுறைப்படுத்தலாம், எந்தத் தடையும் இல்லை.
எனவே மனிதம் வாழ நன்னெறிகளின் தத்துவமாய் கிடைத்த புனிதநூல் திருக்குர்ஆன், நாம் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இதுகிடைத்திருப்பது மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம் என்றால் அது மிகையல்ல.
மு. முகமது யூசுப், உடன்குடி.
“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (திருக்குர்ஆன் 2:185).
மனித குலம் பெற்ற மாபெரும் பாக்கியம் திருக்குர்ஆன் என்பதை பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
“அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அலைஹிவஸல்லாம் மூலமாக நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய இதுதான் வேத நூல், இதில் சந்தேகமே இல்லை. இறையச்சம் உடையவர்களுக்கு இது நேரான வழியை காட்டும்”. (திருக்குர்ஆன் 2:1-2)
“(நபியே) அல்லாஹ்வே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் (திருக்குர்ஆனையும்) இறக்கியுள்ளான். (திருக்குர்ஆன் 3:3,4)
“இது (திருக்குர்ஆன்) உலக மாந்தர் அனைவருக்கும் நல் உபதேசமே ஆகும்”. (திருக்குர்ஆன் 6:90)
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).
திருக்குர்ஆன் அருளப்பட்டது ஒரு நாட்டினருக்காகவோ, ஒரு மதத்தினருக்காகவோ, ஒரு சாராருக்காகவோ அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத்தான் அருளப்பட்டது. இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அத்தனை உயிர்களும் உலகில் மேம்பட்டு வாழ சொல்லப்பட்ட நன்னெறி வாழ்வியல் தத்துவங்கள் தான்.
‘இறைவன் ஒருவனே’ என்பது இதன் அடிப்படை. ஆனால் அதையும் தாண்டி சொல்லப்பட்ட மற்றவை எல்லாமே மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளின் தீர்வாக தான் அமைந்திருக்கின்றது.
மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், சகோதரர்கள் என்று சமத்துவத்தையும், பெண்ணினத்தின் உயர்வையும், அதன் விடுதலையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் வலியுறுத்தியது. பக்கத்து வீட்டாரின் உரிமைகள், உறவுகளோடு மனிதர்களின் ஈடுபாடு, வணிகங்களில், தொழில்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியாயம், அனாதை-ஏழைகளை அரவணைக்க கூடிய அன்பு... என்று எல்லா விஷயங்களிலும் உள்ள நடைமுறைகள், நெறிமுறைகளை திருக்குர்ஆன் விளக்குகிறது.
இறைவணக்க வழிபாடுகளில் எந்தவித வேறுபாடுகள் இன்றி தோளோடு தோள் சேர்ந்து அனைவரும் சமம் என்ற தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது திருக்குர்ஆன். அதுபோல ஆணுக்குரிய எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்று அரபு உலகில் புரட்சியைக்கொண்டு வந்தது திருக்குர்ஆன். விதவைகள் மறுமணம் புரிய வழி செய்யப்பட்டது, சொத்துரிமையில் மூன்றில் இரண்டு பங்கு, மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட பல்வேறு பெண்ணிய உரிமைகள் குறித்து திருக்குர்ஆன் விளக்குகிறது.
பக்கத்து வீட்டார், எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் உரிமைகள் பேணப்பட வேண்டும். அவர் பசித்திருக்க நீ வயிறார உண்பதற்கு உரிமை கிடையாது. நல்ல உணவு நீ சமைக்கும்போது அவருக்கான பங்கையும் அதில் சேர்த்து விடு. அவர் சுக துக்கங்களில் பங்கு எடுப்பது உனது கடமை என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
அதுபோல, ‘உறவுகளை பகைத்து வாழ்பவன் சொர்க்கத்தின் நறுமணத்தை கூட நுகர முடியாது’ என்று எச்சரிக்கையை விடுத்து உறவுகளோடு இணைந்து வாழ வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.
“நிறுவைகளை அளவுகளை நீதமாய் அளந்து கொடுங்கள்” என்கின்றது திருக்குர்ஆன். பொருள்களின் உண்மை தன்மையைச் சொல்லி வியாபாரம் செய்யுங்கள், பதுக்கல், கலப்படம் செய்யாதீர்கள், அதிக விலைக்கு விற்காதீர்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறது.
இப்படிப்பட்ட நன்னெறிகளை சொல்வதால் திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எந்த மதத்தவர் ஆனாலும் இதனை படிக்கலாம், அதன்படி நடக்கலாம். அதன் தத்துவங்களை நடைமுறைப்படுத்தலாம், எந்தத் தடையும் இல்லை.
எனவே மனிதம் வாழ நன்னெறிகளின் தத்துவமாய் கிடைத்த புனிதநூல் திருக்குர்ஆன், நாம் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இதுகிடைத்திருப்பது மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம் என்றால் அது மிகையல்ல.
மு. முகமது யூசுப், உடன்குடி.
இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது.
மனித இனம் ஒருவர் மற்றொருவருடன் சார்ந்து இருக்கிறது. முதல் மனிதனுக்கே ஒரு துணை உடன் படைக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைக்கு பெற்றோர்கள் உதவி இல்லையேல் வாழ, வளர முடியாது.
இவ்வாறே குடும்பங்கள் இணைந்து சமூகம் உருவாகிறது. இத்தகைய நிலையில் குடும்ப, சமூகத்தின் பல தேவைகளும் ஏற்படுகின்றன. அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. நட்பு, அன்பு, தோழமை, மரியாதை, கண்ணியம், பாராட்டு என்று பல்வேறு வகையில் தேவைகள் உருவெடுக்கின்றது.
இத்தகைய தேவைகளில் ஒன்றுதான் பொருளாதார ஒத்துழைப்பு. சமுதாயத்தில் எல்லோரும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பணக்காரர்கள், ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், இயலாதவர்கள், முதியோர், அனாதைகள் என பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். சமுதாயத்தின் பரந்து விரிந்த இந்த தேவைகளை புறக்கணித்து உலகில் அமைதியாக வாழவும் முடியாது என்பது நிதர்சன உண்மை.
இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது. எனவே வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு செல்வந்தர்களின் செல்வத்திலிருந்து 2.5 சதவீதம் ஜகாத் - ஏழைகளின் பங்காக - வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது. இது உதவி அல்ல, மாறாக ‘ஏழைகளின் பங்கு’ என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்து ஏழைகளை கண்ணியப்படுத்துகிறது.
“அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்”. (திருக்குர்ஆன் 70:24)
‘ஜகாத்’ என்றால் ‘தூய்மை’, ‘வளர்ச்சி’ என்று பொருள். மனமும் தூய்மை அடைகிறது, பொருளும் வளர்ச்சி அடைகிறது.
ஜகாத்தின் உண்மையான நோக்கம் வறுமை நீக்கம் ஆகும். செல்வம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கிடையே சுழல்வதற்கு பதிலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இது வட்டிக்கு நேர் எதிரான முறைமை ஆகும். வட்டி ஏழைகளிலிருந்து செல்வந்தர்களுக்கு செல்கிறது. ஆனால் ஜகாத், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றடைகிறது.
திருக்குர்ஆன் இதை இவ்வாறு பதிவுசெய்துள்ளது:
‘நம்பிக்கையாளனே! உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் அவர்களின் உரிமையையும் தந்துவிடு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்’.
‘மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்’. (திருக்குர்ஆன் 30:38-39)
ஜகாத் ஒரு பொருள் வழி வணக்கம். இஸ்லாத்தின் தூண். இறை கட்டளை. மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை போன்று முக்கியம்.
ஜகாத்தின் பிரதான நோக்கம் வறுமை ஒழிப்பு ஆகும். ஒரு நபருக்கு இந்த வருடம் கொடுத்தால் அடுத்த வருடம் அவர் ஜகாத் வாங்க தகுதியில்லாத அளவுக்கு அவரை உயர்த்த வேண்டும். சில்லரை காசு கொடுப்பது ஜகாத்தின் நோக்கம் அல்ல. ஆகவே கூட்டு முறையில் ஜகாத் வசூலித்து, உரியவர்களை தேர்வு செய்து ஜகாத் கொடுத்து உயர்த்த வேண்டும். இதற்காக ஜகாத் வசூலிக்கும் நிறுவனங்களும், பணியாளர்களும், சமூக மக்களின் பொருளாதார நிலைபுள்ளி விவரங்களும் அவசியம் தேவைப்படுகிறது.
இந்த தான தர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:60)
நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்கள்: ‘ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத் பிரித்தெடுக்காவிட்டால் அது அசல் பொருளையே அழித்து விடும்’.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
இவ்வாறே குடும்பங்கள் இணைந்து சமூகம் உருவாகிறது. இத்தகைய நிலையில் குடும்ப, சமூகத்தின் பல தேவைகளும் ஏற்படுகின்றன. அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. நட்பு, அன்பு, தோழமை, மரியாதை, கண்ணியம், பாராட்டு என்று பல்வேறு வகையில் தேவைகள் உருவெடுக்கின்றது.
இத்தகைய தேவைகளில் ஒன்றுதான் பொருளாதார ஒத்துழைப்பு. சமுதாயத்தில் எல்லோரும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பணக்காரர்கள், ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், இயலாதவர்கள், முதியோர், அனாதைகள் என பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். சமுதாயத்தின் பரந்து விரிந்த இந்த தேவைகளை புறக்கணித்து உலகில் அமைதியாக வாழவும் முடியாது என்பது நிதர்சன உண்மை.
இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது. எனவே வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு செல்வந்தர்களின் செல்வத்திலிருந்து 2.5 சதவீதம் ஜகாத் - ஏழைகளின் பங்காக - வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது. இது உதவி அல்ல, மாறாக ‘ஏழைகளின் பங்கு’ என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்து ஏழைகளை கண்ணியப்படுத்துகிறது.
“அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்”. (திருக்குர்ஆன் 70:24)
‘ஜகாத்’ என்றால் ‘தூய்மை’, ‘வளர்ச்சி’ என்று பொருள். மனமும் தூய்மை அடைகிறது, பொருளும் வளர்ச்சி அடைகிறது.
ஜகாத்தின் உண்மையான நோக்கம் வறுமை நீக்கம் ஆகும். செல்வம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கிடையே சுழல்வதற்கு பதிலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இது வட்டிக்கு நேர் எதிரான முறைமை ஆகும். வட்டி ஏழைகளிலிருந்து செல்வந்தர்களுக்கு செல்கிறது. ஆனால் ஜகாத், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றடைகிறது.
திருக்குர்ஆன் இதை இவ்வாறு பதிவுசெய்துள்ளது:
‘நம்பிக்கையாளனே! உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் அவர்களின் உரிமையையும் தந்துவிடு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்’.
‘மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்’. (திருக்குர்ஆன் 30:38-39)
ஜகாத் ஒரு பொருள் வழி வணக்கம். இஸ்லாத்தின் தூண். இறை கட்டளை. மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை போன்று முக்கியம்.
ஜகாத்தின் பிரதான நோக்கம் வறுமை ஒழிப்பு ஆகும். ஒரு நபருக்கு இந்த வருடம் கொடுத்தால் அடுத்த வருடம் அவர் ஜகாத் வாங்க தகுதியில்லாத அளவுக்கு அவரை உயர்த்த வேண்டும். சில்லரை காசு கொடுப்பது ஜகாத்தின் நோக்கம் அல்ல. ஆகவே கூட்டு முறையில் ஜகாத் வசூலித்து, உரியவர்களை தேர்வு செய்து ஜகாத் கொடுத்து உயர்த்த வேண்டும். இதற்காக ஜகாத் வசூலிக்கும் நிறுவனங்களும், பணியாளர்களும், சமூக மக்களின் பொருளாதார நிலைபுள்ளி விவரங்களும் அவசியம் தேவைப்படுகிறது.
இந்த தான தர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:60)
நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்கள்: ‘ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத் பிரித்தெடுக்காவிட்டால் அது அசல் பொருளையே அழித்து விடும்’.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல்லாஹ்’ - ‘இறைவனுடைய மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
இறைவனுடன் இணைத்து கூறப்படும் ஒவ்வொரு பெயருக்கும், பொருளுக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு. சாதாரண ஒரு பொருள் இறைவனுடன் இணையும்போது, அதன் அந்தஸ்து உயர்ந்த இடத்தை அடைந்து விடுகிறது.
உதாரணமாக ‘ரசூல்’ என்றால் ‘தூதர்’ என்று பொருள். இதுவே ‘ரசூலுல்லாஹ்’ - ‘இறைவனின் தூதர்’ என்று வரும்போது மற்ற தூதர்களை விடவும் இறைத்தூதருக்கு தனிச்சிறப்பு உண்டு.
ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் இறைவனின் தன்மைகளான உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, விழித்திருப்பது, தனித்திருப்பது போன்ற உயர் இறைப்பண்புகள் இந்த மாதத்தில் பிரதிபலிக்கிறது.
‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்கே இருக்கிறது, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்; நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் குறிப்பிட்டதை நபி (ஸல்) கூறினார்கள்’ என்று நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அறிவித்துள்ளார்.
ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் மற்ற மாதங்களை விட ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்படுகிறது; மற்ற மாதங்களை விடவும் வணக்க வழிபாடுகளில் சிறந்ததாக அமைந்துள்ளது; இதன் நாட்களும், இரவுகளும், பகல்களும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நொடியும் மற்ற மாதங்களை விட உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கிறது.
ரமலானில் நோன்பாளிகளின் ஒவ்வொரு மூச்சும் இறைவனின் தஸ்பீஹ் (துதி பாடுவது) ஆகும். அவர்களின் அழகிய செயல்கள் நன்மைகளாகும். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி கொடுக்கப்படும்.
இறைவன் ரமலானின் காலங்களையும், நேரங்களையும் அதன் மகத்துவம் கருதி மேன்மையாக வைத்துள்ளான். இந்த கால நேரங்களிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் பயனடைந்து கொள்ள வேண்டும்.
இந்த காலத்தை பாக்கியமாக நினைத்து, தமது ஆயுளை பாக்கியம் நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்ள வேண்டும். சொல்லையும், செயலையும் இறைதிருப்தியுடன் செயல்படுத்த வேண்டும்.
‘காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர’ என்று திருக்குர்ஆன் (103:1-3) குறிப்பிடுகிறது.
‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.
எனவே, இந்த ரமலானில் இறையச்சத்தையும், பேணுதலையும் வளர்த்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இறைவனுடன் இணைத்து கூறப்படும் ஒவ்வொரு பெயருக்கும், பொருளுக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு. சாதாரண ஒரு பொருள் இறைவனுடன் இணையும்போது, அதன் அந்தஸ்து உயர்ந்த இடத்தை அடைந்து விடுகிறது.
உதாரணமாக ‘ரசூல்’ என்றால் ‘தூதர்’ என்று பொருள். இதுவே ‘ரசூலுல்லாஹ்’ - ‘இறைவனின் தூதர்’ என்று வரும்போது மற்ற தூதர்களை விடவும் இறைத்தூதருக்கு தனிச்சிறப்பு உண்டு.
ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் இறைவனின் தன்மைகளான உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, விழித்திருப்பது, தனித்திருப்பது போன்ற உயர் இறைப்பண்புகள் இந்த மாதத்தில் பிரதிபலிக்கிறது.
‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்கே இருக்கிறது, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்; நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் குறிப்பிட்டதை நபி (ஸல்) கூறினார்கள்’ என்று நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அறிவித்துள்ளார்.
ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் மற்ற மாதங்களை விட ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்படுகிறது; மற்ற மாதங்களை விடவும் வணக்க வழிபாடுகளில் சிறந்ததாக அமைந்துள்ளது; இதன் நாட்களும், இரவுகளும், பகல்களும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நொடியும் மற்ற மாதங்களை விட உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கிறது.
ரமலானில் நோன்பாளிகளின் ஒவ்வொரு மூச்சும் இறைவனின் தஸ்பீஹ் (துதி பாடுவது) ஆகும். அவர்களின் அழகிய செயல்கள் நன்மைகளாகும். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி கொடுக்கப்படும்.
இறைவன் ரமலானின் காலங்களையும், நேரங்களையும் அதன் மகத்துவம் கருதி மேன்மையாக வைத்துள்ளான். இந்த கால நேரங்களிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் பயனடைந்து கொள்ள வேண்டும்.
இந்த காலத்தை பாக்கியமாக நினைத்து, தமது ஆயுளை பாக்கியம் நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்ள வேண்டும். சொல்லையும், செயலையும் இறைதிருப்தியுடன் செயல்படுத்த வேண்டும்.
‘காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர’ என்று திருக்குர்ஆன் (103:1-3) குறிப்பிடுகிறது.
‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.
எனவே, இந்த ரமலானில் இறையச்சத்தையும், பேணுதலையும் வளர்த்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள்.
முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய பெரு மக்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா நேற்று வெறிச்சோடியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாகூர்
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த ஆண்டு(2020) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவால் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்துவார்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நாகூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர சிலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கவுரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதேபோல் நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த ஆண்டு(2020) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவால் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்துவார்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நாகூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர சிலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கவுரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதேபோல் நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
நோன்பு பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும்.
இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் பெருநாள் என்பது பொருளாகும்.
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
மனிதனின் வழிகாட்டி
இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குரான் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.
குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்பு கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மிக பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறை அச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
பெருநாள்
ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.
இறைவனின் உதவி கிடைக்கும் காலம்
பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என நபிகள் நாயகம் கூறி உள்ளார். ‘இறைதூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபி தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று நபி கூறினார்.
‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபிகள் நாயகம் கூறி உள்ளார்.
இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் பெருநாள் என்பது பொருளாகும்.
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
மனிதனின் வழிகாட்டி
இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குரான் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.
குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்பு கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மிக பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறை அச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
பெருநாள்
ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.
இறைவனின் உதவி கிடைக்கும் காலம்
பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என நபிகள் நாயகம் கூறி உள்ளார். ‘இறைதூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபி தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று நபி கூறினார்.
‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபிகள் நாயகம் கூறி உள்ளார்.
இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 24-ந்தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
சிறுபான்மையின மக்கள் மீது தி.மு.க.விற்கு மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 24-ந்தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
சிறுபான்மையின மக்கள் மீது தி.மு.க.விற்கு மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புனிதம் நிறைந்த ரமலான் மாதம் விடைபெற்றது. இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
புனிதம் நிறைந்த ரமலான் மாதம் விடைபெற்றது. இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர். தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், மனக்கட்டுப்பாடு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற எண்ணற்ற நற்காரியங்களை இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்து வந்தோம். ரமலான் மாதத்தோடு இந்த நற்செயல்கள் முடிந்துவிடக்கூடாது. இதன்பிறகும் இவை தொடர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் விதித்துள்ள கட்டளை என்ன என்பதை பின்வரும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (திருக்குர்ஆன் 98:5).
மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் என்ன?
இறைவன் காட்டிய வழியில் இறையச்சத்துடன் வாழ வேண்டும். நற்செயல்கள் புரிந்து நன்மைகளை தேடிக்கொள்ள வேண்டும். இறைக்கட்டளைகளை ஏற்று நடந்து இனிய வாழ்க்கை வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும். இதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் மெய்ப்பிக்கின்றது:
‘எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்கள் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள்’ (திருக்குர்ஆன் 18:107).
“வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்பது நபிமொழியாகும். (நூல்: முஸ்லிம்)
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
மனிதன் இந்த உலக வாழ்க்கையின் மீது அதிக ஆசை கொள்கின்றான். உலகத்தில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கின்றான். ஆசைகளை வளர்த்துக்கொண்டு, மனக்கோட்டைகளை கட்டிக்கொண்டு செல்வத்தையும், செல்வாக்கையும் தேடி ஓடி அலைகின்றான். படைத்தவனையும், அவன் காட்டிய நல்ல வழிகளையும் விட்டுவிட்டு வழிகேட்டில் ஈடுபடுகின்றான்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப நிச்சயம் கூலி உண்டு. நற்செயல்கள் செய்தால் மறுமையில் அதற்கு பரிசாக சொர்க்கம் பெறலாம். தீய பாவங்களை செய்தால் அதற்கு தண்டனையாக மறுமையில் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும், ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்” (திருக்குர்ஆன் 6:120).
பாவங்களில் இருந்து விடுபட நமக்கு வழிகாட்டுவது தான் ரமலான் நோன்பும், அந்த நோன்புகாலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளும், தான தர்மங்களும். நோன்பாளிகள் செல்வதற்கு என்று ‘ரய்யான்’ எனப்பெயரிடப்பட்டுள்ள சொர்க்கம் உள்ளதாக இறைவன் கூறுகின்றான்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு ரமலான் மாதம் முடிந்த பின்னரும் நமது வணக்க வழிபாடுகள், நற்செயல்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும், இறையச்சம் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்காது என்று திருக்குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகிறது:
‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்’ (திருக்குர்ஆன் 2:45).
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்’. ‘அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக்குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்’. (திருக்குர்ஆன் 98:7,8)
எனவே இந்த புனித ரமலானில் நாம் பின்பற்றிய நற்செயல்களை தொடர்ந்து செய்து, இறையச்சத்துடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, சொர்க்கத்தை பரிசாக பெறுவோம், ஆமீன்.
பேராசிரியர், முனைவர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் விதித்துள்ள கட்டளை என்ன என்பதை பின்வரும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (திருக்குர்ஆன் 98:5).
மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் என்ன?
இறைவன் காட்டிய வழியில் இறையச்சத்துடன் வாழ வேண்டும். நற்செயல்கள் புரிந்து நன்மைகளை தேடிக்கொள்ள வேண்டும். இறைக்கட்டளைகளை ஏற்று நடந்து இனிய வாழ்க்கை வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும். இதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் மெய்ப்பிக்கின்றது:
‘எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்கள் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள்’ (திருக்குர்ஆன் 18:107).
“வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்பது நபிமொழியாகும். (நூல்: முஸ்லிம்)
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
மனிதன் இந்த உலக வாழ்க்கையின் மீது அதிக ஆசை கொள்கின்றான். உலகத்தில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கின்றான். ஆசைகளை வளர்த்துக்கொண்டு, மனக்கோட்டைகளை கட்டிக்கொண்டு செல்வத்தையும், செல்வாக்கையும் தேடி ஓடி அலைகின்றான். படைத்தவனையும், அவன் காட்டிய நல்ல வழிகளையும் விட்டுவிட்டு வழிகேட்டில் ஈடுபடுகின்றான்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப நிச்சயம் கூலி உண்டு. நற்செயல்கள் செய்தால் மறுமையில் அதற்கு பரிசாக சொர்க்கம் பெறலாம். தீய பாவங்களை செய்தால் அதற்கு தண்டனையாக மறுமையில் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும், ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்” (திருக்குர்ஆன் 6:120).
பாவங்களில் இருந்து விடுபட நமக்கு வழிகாட்டுவது தான் ரமலான் நோன்பும், அந்த நோன்புகாலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளும், தான தர்மங்களும். நோன்பாளிகள் செல்வதற்கு என்று ‘ரய்யான்’ எனப்பெயரிடப்பட்டுள்ள சொர்க்கம் உள்ளதாக இறைவன் கூறுகின்றான்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு ரமலான் மாதம் முடிந்த பின்னரும் நமது வணக்க வழிபாடுகள், நற்செயல்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும், இறையச்சம் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்காது என்று திருக்குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகிறது:
‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்’ (திருக்குர்ஆன் 2:45).
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்’. ‘அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக்குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்’. (திருக்குர்ஆன் 98:7,8)
எனவே இந்த புனித ரமலானில் நாம் பின்பற்றிய நற்செயல்களை தொடர்ந்து செய்து, இறையச்சத்துடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, சொர்க்கத்தை பரிசாக பெறுவோம், ஆமீன்.
பேராசிரியர், முனைவர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.






