என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ரம்ஜான் பண்டிகை: வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
Byமாலை மலர்15 May 2021 5:46 AM GMT (Updated: 15 May 2021 5:46 AM GMT)
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள்.
முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய பெரு மக்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X