என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் நடந்த சிறப்பு தொழுகை
Byமாலை மலர்14 May 2021 3:05 AM GMT (Updated: 14 May 2021 3:05 AM GMT)
கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஷவ்வால் மாத பிறை நேற்று முன்தினம் தமிழகத்தில் தென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X