என் மலர்
கிறித்தவம்
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சிறு சப்பரபவனி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் திருப்பலி நிறை வேற்றினர்.
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலய பங்குதந்தையர்களாக இருந்து மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறை வேற்றப்பட்டது. மாலையில் வழக்கம் போல் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருவிழா திருப்பலி கும்ப கோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது.
“மரியா சமூக அக்கறை கொண்ட புரட்சிப்பெண்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருப்பலியில் கும்பகோணம் பிஷப்புடன் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி்க்கு பின்னர் பூண்டி மாதாபேராலய முகப்பில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி பூண்டி மாதாவின் ஆண்டு திருவிழா தேர்பவனியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். தங்கள் கைகளில் இருந்த காசுகளையும், மலர்களை சமர்ப்பித்தும் வழிபட்டனர். தேர்பவனியின் போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (புதன்கிழமை) காலை மரியா-சிதறுண்ட இதயங்களை ஒருங்கிணைப்பவர் என்ற தலைப்பில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுகிறார். இதனை தொடர்ந்து மாலையில் கொடியிறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
தேர்பவனியையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் கொண்டு பேராலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலய பங்குதந்தையர்களாக இருந்து மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறை வேற்றப்பட்டது. மாலையில் வழக்கம் போல் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருவிழா திருப்பலி கும்ப கோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது.
“மரியா சமூக அக்கறை கொண்ட புரட்சிப்பெண்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருப்பலியில் கும்பகோணம் பிஷப்புடன் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி்க்கு பின்னர் பூண்டி மாதாபேராலய முகப்பில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி பூண்டி மாதாவின் ஆண்டு திருவிழா தேர்பவனியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். தங்கள் கைகளில் இருந்த காசுகளையும், மலர்களை சமர்ப்பித்தும் வழிபட்டனர். தேர்பவனியின் போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (புதன்கிழமை) காலை மரியா-சிதறுண்ட இதயங்களை ஒருங்கிணைப்பவர் என்ற தலைப்பில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுகிறார். இதனை தொடர்ந்து மாலையில் கொடியிறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
தேர்பவனியையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் கொண்டு பேராலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில்ர திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அருட்தந்தையர்கள் பெர்க் மான்ஸ், ஜான் போஸ்கோ, தேவதாஸ், ஜோசப் பால் ஆகியோர் கொடியேற்றினர். இதனை தொடர்ந்து தினமும் திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் அருட்தந்தையர்கள் ஏ.பிச்சைமுத்து, பாஸ்கல் ராஜ், எஸ்.பிச்சமுத்து, ராயப்பன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இரவு 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற் றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடிய படி தேரை இழுத்துச்சென்றனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, ஜங்ஷன் ரோடு வழியாக புதுக்குப்பம் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் அருட்தந்தையர்கள் ஏ.பிச்சைமுத்து, பாஸ்கல் ராஜ், எஸ்.பிச்சமுத்து, ராயப்பன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இரவு 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற் றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடிய படி தேரை இழுத்துச்சென்றனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, ஜங்ஷன் ரோடு வழியாக புதுக்குப்பம் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
பிரசித்தி பெற்ற எண்ணூர் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
எண்ணூரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
முன்னதாக தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சவேரியர், அந்தோணியார், ஆரோக்கியமாதா, சூசையப்பர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச்சிலைகள் (சொரூபங்கள்) தனித்தனி தேர்களில் வைத்து பவனியாக எடுத்து வரப்பட்டது.
பவனியானது கோவில் வளாகத்தில் தொடங்கி கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், அண்ணா நகர் வரை உள்ள பகுதிகளில் வலம் வந்தன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
முன்னதாக தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சவேரியர், அந்தோணியார், ஆரோக்கியமாதா, சூசையப்பர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச்சிலைகள் (சொரூபங்கள்) தனித்தனி தேர்களில் வைத்து பவனியாக எடுத்து வரப்பட்டது.
பவனியானது கோவில் வளாகத்தில் தொடங்கி கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், அண்ணா நகர் வரை உள்ள பகுதிகளில் வலம் வந்தன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடந்தது.
மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை ஆலயத்தின் அருகே உள்ள கொடிமரத்தில், திருச்சி சலேசிய மாநில தலைவர் அருட்தந்தை அந்தோணி ஜோசப், அன்னையின் திருக்கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் ஆலயத்தில் பல்வேறு அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலி நடத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏசுவின் திருப்பாடுகளின் நிகழ்ச்சியான பாஸ்கா நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது.
இதில் முதல் தேரில் செபஸ்தியாரும், 2-வது தேரில் ஆரோக்கிய அன்னையும், 3-வது தேரில் அடைக்கல அன்னையும், 4-வது தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும் எழுந்தருளினர். தொடர்ந்து 4 தேர்களும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. இதைதொடர்ந்து நேற்று காலை தேரடி திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இதில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், கருமண்டபம், அம்மாபேட்டை, மணப்பாறை, திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர்கள் தேவராஜ், சகாயராஜ் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், கொத்து மணியக்காரர்கள், இளையோர் இயக்கம் மற்றும் அம்சம்பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் ஆலயத்தில் பல்வேறு அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலி நடத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏசுவின் திருப்பாடுகளின் நிகழ்ச்சியான பாஸ்கா நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது.
இதில் முதல் தேரில் செபஸ்தியாரும், 2-வது தேரில் ஆரோக்கிய அன்னையும், 3-வது தேரில் அடைக்கல அன்னையும், 4-வது தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும் எழுந்தருளினர். தொடர்ந்து 4 தேர்களும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. இதைதொடர்ந்து நேற்று காலை தேரடி திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இதில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், கருமண்டபம், அம்மாபேட்டை, மணப்பாறை, திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர்கள் தேவராஜ், சகாயராஜ் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், கொத்து மணியக்காரர்கள், இளையோர் இயக்கம் மற்றும் அம்சம்பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.
லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேரில் தூய அடைக்கல அன்னை மலர் அலங்காரத்தில் பவனி வந்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியவர்சீலி பங்குத்தந்தை சிரில் ராபர்ட், பாதிரியார் அருள்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
இதுபோல் மணிகண்டம் அருகே பாத்திமாநகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கூட்டு திருப்பலி நடைபெற்றன. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை திருச்சி மறைமாவட்ட ஆயர் இல்ல தொடர்பாளர் அருட்தந்தை யூஜின் தலைமையில் திருவிழா மற்றும் புதுநன்மை விழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை கபிரியேல் தலைமையில் பங்குமக்கள் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேரில் தூய அடைக்கல அன்னை மலர் அலங்காரத்தில் பவனி வந்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியவர்சீலி பங்குத்தந்தை சிரில் ராபர்ட், பாதிரியார் அருள்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
இதுபோல் மணிகண்டம் அருகே பாத்திமாநகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கூட்டு திருப்பலி நடைபெற்றன. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை திருச்சி மறைமாவட்ட ஆயர் இல்ல தொடர்பாளர் அருட்தந்தை யூஜின் தலைமையில் திருவிழா மற்றும் புதுநன்மை விழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை கபிரியேல் தலைமையில் பங்குமக்கள் செய்திருந்தனர்.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது. கொடியேற்றத்துக்கு கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் ஜோசப் ரொமால்ட் தலைமை தாங்க, தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்றனி மறையுரையாற்றினார்.
இதில் ஆலய பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை மைக்கேல் நியூமேன் ஆகியோர் கலந்து கொண்டனர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழாவையொட்டி ஆலயம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
இதில் ஆலய பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை மைக்கேல் நியூமேன் ஆகியோர் கலந்து கொண்டனர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழாவையொட்டி ஆலயம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது.
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி நேதாஜி நகர், பாத்திமா நகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர்களில் வலம் வந்த புனிதர்கள் சொரூபங்களின் காலடியில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வைத்து எடுத்தனர். பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், உப்பு, மிளகு, பொரி, வாழைப்பழம், நுங்கு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர்.
மேலும் நாட்டில் விவசாயம் செழிக்கவும், பருவமழை தவறாமல் பெய்யவும், அமைதி, சமாதானம் நிலவவும் வழிபாடு நடத்தப்பட்டது. தேர் பவனியையொட்டி வாணவேடிக்கை, பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. இதில் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நாட்டில் விவசாயம் செழிக்கவும், பருவமழை தவறாமல் பெய்யவும், அமைதி, சமாதானம் நிலவவும் வழிபாடு நடத்தப்பட்டது. தேர் பவனியையொட்டி வாணவேடிக்கை, பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. இதில் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மாதாவை பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மாதாவை பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் புனித தோமையார் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கம் கிராமத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், நேற்று காலை 8 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கிராம மக்களின் சார்பில் புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தொன்போஸ்கோ மற்றும் இறைமக்கள், தோமையார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், நேற்று காலை 8 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கிராம மக்களின் சார்பில் புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தொன்போஸ்கோ மற்றும் இறைமக்கள், தோமையார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் ஆகியவை நடக்கிறது. 11-ந்தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. 18-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்குபேரவை, பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. 18-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்குபேரவை, பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.






