என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சின்னமலை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா
Byமாலை மலர்10 May 2019 4:45 AM GMT (Updated: 10 May 2019 4:45 AM GMT)
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X