என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்9 May 2019 4:02 AM GMT (Updated: 9 May 2019 4:02 AM GMT)
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X