search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st George"

    • விழா தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி தேர்பவனி நடைபெறுகிறது.

    தளவாய்புரத்தில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் நற்செய்தி பெருவிழா நடக்கிறது. இதில் ராமபுரம் பங்குத்தந்தை ஏ.அன்பரசன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்குகிறார்.

    நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் 6.30 மணிக்கு கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் எம்.பென்சிகர் தலைமை தாங்குகிறார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் வி.ஹிலாரியஸ் தலைமை தாங்குகிறார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.

    20-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் இல்ல அருட்பணியாளர் பி.யூஜின் தலைமை தாங்க, கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் ஏ.ஆன்டணி சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    21-ந்தேதி காலை 7 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் எஸ்.அருளப்பன் தலைமை தாங்க, அருட்பணியாளர் எம்.ஜார்ஜ் கிளாமன்ட் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நற்கருைண ஆசீர், கொடியிறக்கமும், 8 மணிக்கு பொதுக்கூட்டமும், பரிசு வழங்குதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், பங்கு நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.

    விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.

    19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார்.
    தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் மிக முக்கியமானது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலயம். இந்த ஆலயத்துக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். மேலும் இங்கு சிறப்பு நேர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் உள்ள தூய ஜார்ஜியாரின் சொரூபம் மற்ற சொரூபங்களை போல் அல்லாமல் பாரசீக சிற்பக்கலையில் பக்தி பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. பிற சொரூபங்களை போல் இல்லாமல் வேறுபட்டு இருப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார். இதில் அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ் ஆகியோர் தமிழில் திருப்பலி நடத்தினார்கள். அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி வரை நடைபெறும் விழாவின் போது தினமும் தமிழில் திருப்பலி நடக்கிறது. சிறப்பு திருப்பலியை அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ், சைமன், இளங்கோ, கிளாசின் ஆகியோர் நடத்துகின்றனர்.

    6-ந் தேதி நற்செய்தி பெருவிழாவில் அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நற்செய்தி வழங்குகிறார்.

    7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அருட்பணியாளர் இளங்கோ திருப்பலி நடத்துகிறார். காலை 6 மணிக்கு சங்கனாச்சேரி மறைமாவட்ட துணை பேராயர் மார் தோஸ்தறயில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். அதைத்தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு ஒரு முறை திருப்பலி நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜீடு பால்ராஜ் திருப்பலியை நடத்தி வைக்கிறார். மாலை 4 மணிக்கு திருப்பவனி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள மொழி பேசும் மக்களுக்காக 8 நாட்கள் விழா நடக்கிறது,

    பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, சிறப்பு பஸ்கள், ரெயில், படகு வசதிகளை திருத்தலத்தின் தமிழக குழு ஒருங்கிணைப்பாளர்களான அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் தோமஸ் பவத்து பரம்பில் ஆகியோர் செய்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் தலைமை பணியாளர் அருள்தந்தை மாத்யூ சூரவடி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பில்பி மாத்யூ, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பினோ மோன் தேவசியா, மீனு சோபி மற்றும் ஜார்ஜ் குட்டி தாமஸ், மத்தாயி ஜோஸப், லோனப்பன் தாமஸ் ஆகியோர் செய்துள்ளனர். 
    நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, செபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது.

    19-ந் தேதி காலை 7 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்ப்பவனி போன்றவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
    ×