search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adaikala madha"

    • இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • இன்று திருவிழா திருப்பலியும், கொடி இறக்கமும் நடைபெறும்.

    காளையார் கோவில் வட்டம் புலியடிதம்மம் புனித அடைக்கல அன்னை ஆலயத் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு புனித அன்னை மரியாள் புனிதர்கள் வாழ்வில் செய்த அற்புதம் என்ற தலைப்பில் நவநாள் சிந்தனையும் திருப்பலியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 5 மணி அளவில் அருள்தந்தை லெவே அடிகளாரின் உருவப்படம் முக்கிய வீதி வழியாக வலம் வந்தது.

    அருள்தந்தை லெவே அடிகளார் இந்தியாவில் மத போதகராக பணியாற்றினார். அவர் சருகணியில் தங்கி புலியடிதம்மம், பள்ளித்தம்மம், ஆண்டவூரணி, திருவேகம்புத்தூர் போன்ற பகுதியில் பணிபுரிந்து பக்தியையும், ஒற்றுமையையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் தனது துறவற வாழ்வு வழியாக மக்களிடம் கொண்டு வந்தார். அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது அவரது உருவப்படம் திருவிழா அன்று முக்கிய வீதி வழியாக வலம் வரும்.

    திருவிழாவையொட்டி மாலை 6 மணி அளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை சூசை மற்றும் அருள் பணியாளர்கள் நிறைவேற்றினர். இத்திருப்பலியில் அருள் சகோதரர்கள், அருள் சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் புனித அடைக்கல அன்னை உருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இந்த ஆலயத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அருட்தந்தை பிளஞ்சார்டு என்ற சேசு சபை பாதிரியார் 1937-ம் ஆண்டு கட்டினார். 2015-ம் ஆண்டு அருட்தந்தை சேவியர் வேதம் தலைமையில் புனித அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்புப் பணி நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (புதன் கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியும், பின் கொடி இறக்கமும் நடைபெறும். திருவிழா நிகழ்வுகளை கிராம பொதுமக்களும் மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் செய்திருந்தனர்.

    மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடந்தது.
    மணிகண்டம் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை ஆலயத்தின் அருகே உள்ள கொடிமரத்தில், திருச்சி சலேசிய மாநில தலைவர் அருட்தந்தை அந்தோணி ஜோசப், அன்னையின் திருக்கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் ஆலயத்தில் பல்வேறு அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலி நடத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏசுவின் திருப்பாடுகளின் நிகழ்ச்சியான பாஸ்கா நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது.

    இதில் முதல் தேரில் செபஸ்தியாரும், 2-வது தேரில் ஆரோக்கிய அன்னையும், 3-வது தேரில் அடைக்கல அன்னையும், 4-வது தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும் எழுந்தருளினர். தொடர்ந்து 4 தேர்களும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. இதைதொடர்ந்து நேற்று காலை தேரடி திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    இதில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், கருமண்டபம், அம்மாபேட்டை, மணப்பாறை, திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர்கள் தேவராஜ், சகாயராஜ் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், கொத்து மணியக்காரர்கள், இளையோர் இயக்கம் மற்றும் அம்சம்பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். 
    லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.
    லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேரில் தூய அடைக்கல அன்னை மலர் அலங்காரத்தில் பவனி வந்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியவர்சீலி பங்குத்தந்தை சிரில் ராபர்ட், பாதிரியார் அருள்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    இதுபோல் மணிகண்டம் அருகே பாத்திமாநகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கூட்டு திருப்பலி நடைபெற்றன. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை திருச்சி மறைமாவட்ட ஆயர் இல்ல தொடர்பாளர் அருட்தந்தை யூஜின் தலைமையில் திருவிழா மற்றும் புதுநன்மை விழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை கபிரியேல் தலைமையில் பங்குமக்கள் செய்திருந்தனர். 
    ×