என் மலர்
கிறித்தவம்
தேவனுடைய வசனங்களை படிக்கும் போது அதன் சுவையை அறிந்துள்ளோமா? என்பது நாம் ஒவ்வொருவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பிரியமானவர்களே, நம்மில் பலருக்கு பலவிதமான சுவை பிடிக்கும். ஆனாலும் நம்முடைய நாக்கு பல்வேறு சுவையை தேடும். அப்போது அதை சாப்பிடலாமா? இதை சாப்பிடலாமா? என்று விதவிதமான சாப்பாடு, பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பலகாரங்கள் என்று சுவைத்து பார்ப்பதும் உண்டு. அப்படி நாம் சுவைக்கும் போது நாக்கில் எது சுவையாக உள்ளதோ அதை தான் நாம் சாப்பிடுவது உண்டு. ஆனால் தேவனுடைய வசனங்களை படிக்கும் போது அதன் சுவையை அறிந்துள்ளோமா? என்பது நாம் ஒவ்வொருவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், தாவீது என்னும் அரசன் ‘உமது வார்த்தைகள் என் நாவிற்கு இன்பமும், என் வாய்க்கு தேனிலும் மதுரமானது‘ என்று சொல்லுகிறார்.
இப்படியாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வசனங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனால் அந்த வசனங்கள் எப்படி உள்ளது என்றால், யோவான் 6-ம் அதிகாரம் 63-ம் வசனத்தில், ‘நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது‘ என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆம், பிதாவின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது. பிதாவின் வார்த்தை மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிட்ட சுத்தமான வார்த்தை. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் மேலான வல்லமையான வார்த்தையாக உள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தத்திலும், அதிகாரத்திலும், வல்லமையிலும் உயர்ந்த வார்த்தைகளாகவே உள்ளது. ‘என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்‘ என்றார். உலக வேஷம் தரித்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனால் நமது ஜெபத்திற்கு பதிலும் இல்லை, உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே நாமும் இந்த நாட்களில் உலகத்தில் உள்ள பல்வேறு சுவைகளை தேடி அலைந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேனிலும் மதுரமான தேவனின் வசனங்களை சுவைத்து இன்பமான வாழ்க்கை வாழ்வோம்.
சகோ. ஜோசப், அய்யம்பாளையம்
இப்படியாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வசனங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனால் அந்த வசனங்கள் எப்படி உள்ளது என்றால், யோவான் 6-ம் அதிகாரம் 63-ம் வசனத்தில், ‘நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது‘ என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆம், பிதாவின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது. பிதாவின் வார்த்தை மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிட்ட சுத்தமான வார்த்தை. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் மேலான வல்லமையான வார்த்தையாக உள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தத்திலும், அதிகாரத்திலும், வல்லமையிலும் உயர்ந்த வார்த்தைகளாகவே உள்ளது. ‘என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்‘ என்றார். உலக வேஷம் தரித்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனால் நமது ஜெபத்திற்கு பதிலும் இல்லை, உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே நாமும் இந்த நாட்களில் உலகத்தில் உள்ள பல்வேறு சுவைகளை தேடி அலைந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேனிலும் மதுரமான தேவனின் வசனங்களை சுவைத்து இன்பமான வாழ்க்கை வாழ்வோம்.
சகோ. ஜோசப், அய்யம்பாளையம்
இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை எண்ணி, அவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ முற்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கர்த்தர் மோசேயை அழைத்து இஸ்ரவேல் ஜனங்கள் 3 நாட்கள் தங்களை பரிசுத்தப்படுத்தி 3-வது நாளின் விடியற்காலையில் 3 மணிக்கு இடி முழக்கங்களும், மின்னல்களும், எக்காள சத்தங்களும் கேட்கும்போது சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்து நிற்கவேண்டும். சீனாய் மலையை யார் தொட்டாலும் இறந்து போவார்கள் என்று எச்சரித்தார்.
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்தார்கள். விடியற்காலையில் கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்னியில் இறங்கினார். கர்த்தர் அங்கு வந்த போது மலை முழுவதும் மிகவும் அதிர்ந்து அசைந்தது. மலையிலிருந்து வானளவு அக்னி எரிந்துகொண்டிருந்தது. அக்னியின் நடுவிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தோடு கர்த்தர் பேசினார். அவர் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர் ரூபத்தை யாரும் பார்க்கவில்லை. அக்னியிலிருந்து அவர் பேசினார்.
அப்போது,
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
4. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
5. உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
இப்படி இந்த 10 கட்டளைகளையும் கைக்கொண்டு அதன்படி கீழ்படிய வேண்டும் என்று கட்டளையிட்டார். வேதத்தில் உபாகமம் 4-ம் அதிகாரம் 36-ம் வசனத்தில், ‘உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்னியை உனக்குக் காண்பித்தார். அக்னியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்‘ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே நாமும் இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை எண்ணி, அவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ முற்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்தார்கள். விடியற்காலையில் கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்னியில் இறங்கினார். கர்த்தர் அங்கு வந்த போது மலை முழுவதும் மிகவும் அதிர்ந்து அசைந்தது. மலையிலிருந்து வானளவு அக்னி எரிந்துகொண்டிருந்தது. அக்னியின் நடுவிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தோடு கர்த்தர் பேசினார். அவர் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர் ரூபத்தை யாரும் பார்க்கவில்லை. அக்னியிலிருந்து அவர் பேசினார்.
அப்போது,
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
4. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
5. உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
இப்படி இந்த 10 கட்டளைகளையும் கைக்கொண்டு அதன்படி கீழ்படிய வேண்டும் என்று கட்டளையிட்டார். வேதத்தில் உபாகமம் 4-ம் அதிகாரம் 36-ம் வசனத்தில், ‘உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்னியை உனக்குக் காண்பித்தார். அக்னியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்‘ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே நாமும் இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை எண்ணி, அவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ முற்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
உலகத்தில் இன்று அநேக பாதுகாப்பு மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரின் பாதுகாப்பு. மனிதர்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு. நமது நாட்டிற்கு ராணுவத்தால் பாதுகாப்பு இப்படி பாதுகாப்பு என்பது பல்வேறு வகையில் உள்ளது. ஆனால் சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
தேவன் பரலோகத்தில் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பார்க்கிற நட்சத்திரங்களின் உயரம் எவ்வளவு உயரமாயிருக்கிறது. அதைவிட உயரத்தில் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். உன்னதத்தில் இருந்துகொண்டு தமது அக்னி ஜுவாலை போன்ற கண்களால் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பார்க்கிறார். நாம் அவரை காண முடியாது, அவர் நம்மை காண்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசி தரிசனத்தை கண்டார். இதைத்தான் ஏசாயா 6-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘ஆண்டவர், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்” என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஏசாயா 33-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. நம்மை பாதுகாக்கிற சர்வலோக தேவன் பரலோக உன்னதத்தில் வாசமாயிருக்கிறார். அவர் உறங்குவதில்லை. உன்னதமானவர், நமக்கு அடைக்கலமானவர். ஆபத்துக் காலத்தில் நமக்கு பாதுகாவலராக இருக்கிறார். கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார்.
ஆம் தேவ பிள்ளைகளே, இந்த நேரத்தில் நாம் எந்தவிதமான கொள்ளை நோயை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை உன்னதத்தில் வாசமாய் இருக்கிற தேவன் நம்மை காக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எனவே இந்த தவக்காலத்தில் அவரை நோக்கி நம்மை பாதுகாத்து வழிநடத்த வேண்டிக்கொள்வோம்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
தேவன் பரலோகத்தில் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பார்க்கிற நட்சத்திரங்களின் உயரம் எவ்வளவு உயரமாயிருக்கிறது. அதைவிட உயரத்தில் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். உன்னதத்தில் இருந்துகொண்டு தமது அக்னி ஜுவாலை போன்ற கண்களால் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பார்க்கிறார். நாம் அவரை காண முடியாது, அவர் நம்மை காண்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசி தரிசனத்தை கண்டார். இதைத்தான் ஏசாயா 6-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘ஆண்டவர், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்” என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஏசாயா 33-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. நம்மை பாதுகாக்கிற சர்வலோக தேவன் பரலோக உன்னதத்தில் வாசமாயிருக்கிறார். அவர் உறங்குவதில்லை. உன்னதமானவர், நமக்கு அடைக்கலமானவர். ஆபத்துக் காலத்தில் நமக்கு பாதுகாவலராக இருக்கிறார். கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார்.
ஆம் தேவ பிள்ளைகளே, இந்த நேரத்தில் நாம் எந்தவிதமான கொள்ளை நோயை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை உன்னதத்தில் வாசமாய் இருக்கிற தேவன் நம்மை காக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எனவே இந்த தவக்காலத்தில் அவரை நோக்கி நம்மை பாதுகாத்து வழிநடத்த வேண்டிக்கொள்வோம்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும்.
உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும். உபவாச ஜெபம் என்பது எப்போதோ நடக்கின்ற ஒன்றாக அல்ல. எப்போதும் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த தவக்காலத்தில் உபவாசத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. விசேஷ நாட்களில் நாம் சிறப்பு உணவை உண்பது போலவும், சிறப்பான உடையை உடுத்துவது போலவும் இந்த நாட்களில் அதிகமாக உபவாசம் இருக்க வேண்டும். “தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்” என்ற பாடலுக்கேற்ப இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கர்த்தரிடம் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.
இந்த உபவாச நாட்களில் நாம் விட்டு விடுதல், பெற்றுக்கொள்ளுதல் என்ற இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மைப் பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் நிரந்தரமாக விட்டு விட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நற்குணங்களை நிலையாக பெற்றுக்கொள்வதும் மிகவும் அவசியமாகும். மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்புக்கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார்.
நம் தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை இம்மூன்று செயல்களும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெபத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. உபவாசம், ஜெபம், விசுவாசம் இம்மூன்றும் ஒன்று சேரும் போது அற்புதம் நிகழ்கிறது.
இதுவரை நடக்காத நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றால், நம் வாழ்வில் ஒரு நல்ல அற்புதம் நிகழ வேண்டும் என்றால் நாம் உபவாசம் இருந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். கொலோசேயர் 4-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலர் தூய பவுல் மூலம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு கீழ்படிந்து நாம் இந்த உபவாசக் காலங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக ஆமென்.
சகோதரி. கேத்ரின், திருப்பூர்
இந்த தவக்காலத்தில் உபவாசத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. விசேஷ நாட்களில் நாம் சிறப்பு உணவை உண்பது போலவும், சிறப்பான உடையை உடுத்துவது போலவும் இந்த நாட்களில் அதிகமாக உபவாசம் இருக்க வேண்டும். “தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்” என்ற பாடலுக்கேற்ப இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கர்த்தரிடம் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.
இந்த உபவாச நாட்களில் நாம் விட்டு விடுதல், பெற்றுக்கொள்ளுதல் என்ற இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மைப் பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் நிரந்தரமாக விட்டு விட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நற்குணங்களை நிலையாக பெற்றுக்கொள்வதும் மிகவும் அவசியமாகும். மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்புக்கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார்.
நம் தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை இம்மூன்று செயல்களும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெபத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. உபவாசம், ஜெபம், விசுவாசம் இம்மூன்றும் ஒன்று சேரும் போது அற்புதம் நிகழ்கிறது.
இதுவரை நடக்காத நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றால், நம் வாழ்வில் ஒரு நல்ல அற்புதம் நிகழ வேண்டும் என்றால் நாம் உபவாசம் இருந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். கொலோசேயர் 4-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலர் தூய பவுல் மூலம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு கீழ்படிந்து நாம் இந்த உபவாசக் காலங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக ஆமென்.
சகோதரி. கேத்ரின், திருப்பூர்
தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்வுகள் பல்வேறு தனியார் சேனல்களில் ஒளிபரப்பானது. அதனை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மூடப்பட்டாலும், ஆகம விதிகளின்படி பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்கள் வராவிட்டாலும், திருப்பலி நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மிகவும் விசேஷமானது ஆகும்.
தேவாலயங்களில் சென்று வழிபட முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளிலேயே நேற்று தொலைக்காட்சி வழியாக திருப்பலி நிகழ்வுகளை கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில தனியார் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த திருப்பலி நிகழ்வுகளை பார்த்து மனம் உருக கிறிஸ்தவர்கள் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
இதேபோல கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்வுகள் பல்வேறு தனியார் சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. அதனை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்கள் வராவிட்டாலும், திருப்பலி நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மிகவும் விசேஷமானது ஆகும்.
தேவாலயங்களில் சென்று வழிபட முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளிலேயே நேற்று தொலைக்காட்சி வழியாக திருப்பலி நிகழ்வுகளை கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில தனியார் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த திருப்பலி நிகழ்வுகளை பார்த்து மனம் உருக கிறிஸ்தவர்கள் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
இதேபோல கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்வுகள் பல்வேறு தனியார் சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. அதனை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நாம் பயப்படும்போது கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையை தைரியமாய் நம்பி நிற்போம். நம் இந்திய தேசத்திற்காகவும், நம் தமிழ் நாட்டிற்காகவும் இந்த லெந்து காலங்களில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஆமென்.
‘உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்! யோவான் 14:1
இந்த மேற்கண்ட வசனம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உரைக்கப்பட்டது. நம்முடைய இருதயம் அநேக காரியங்களை குறித்து கலங்குகிறது, குறிப்பாக இன்றைய உலக சுகாதார சூழ்நிலையக் கண்டு கலங்காதவரே இல்லை. ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால்தான் பயப்படாதே, திகையாதே, கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்ற வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிஎன்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே! நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.
கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே, என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயுதங்களில் ஒன்று, பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. ‘நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெபத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.
பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. ஜெப வீரர்களான நாமே பயத்தோடு புறமுதுகிட்டு ஓடினால் சாத்தனை வெற்றி கொள்வது, எப்படி? சாத்தானின் பொல்லாத திட்டங்களை முறியடிப்பது எப்படி?. தேவன் நமக்கு பயத்தின் ஆவியை கொடுக்கவில்லை. அப்போஸ்தலரில் ஒருவரும் பயந்ததில்லை அதனால்தான் அவர்கள் காலம் எழுப்புதலால் நிறைந்திருந்தது.
‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்’ என்று சங்கீதம் 56:3-ல் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும்போது கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையை தைரியமாய் நம்பி நிற்போம். நம் இந்திய தேசத்திற்காகவும், நம் தமிழ் நாட்டிற்காகவும் இந்த லெந்து காலங்களில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஆமென்.
சகோதரி. ரூத்பிமோராஜ்,
கே.ஜி. கார்டன், திருப்பூர்.
இந்த மேற்கண்ட வசனம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உரைக்கப்பட்டது. நம்முடைய இருதயம் அநேக காரியங்களை குறித்து கலங்குகிறது, குறிப்பாக இன்றைய உலக சுகாதார சூழ்நிலையக் கண்டு கலங்காதவரே இல்லை. ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால்தான் பயப்படாதே, திகையாதே, கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்ற வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிஎன்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே! நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.
கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே, என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயுதங்களில் ஒன்று, பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. ‘நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெபத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.
பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. ஜெப வீரர்களான நாமே பயத்தோடு புறமுதுகிட்டு ஓடினால் சாத்தனை வெற்றி கொள்வது, எப்படி? சாத்தானின் பொல்லாத திட்டங்களை முறியடிப்பது எப்படி?. தேவன் நமக்கு பயத்தின் ஆவியை கொடுக்கவில்லை. அப்போஸ்தலரில் ஒருவரும் பயந்ததில்லை அதனால்தான் அவர்கள் காலம் எழுப்புதலால் நிறைந்திருந்தது.
‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்’ என்று சங்கீதம் 56:3-ல் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும்போது கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையை தைரியமாய் நம்பி நிற்போம். நம் இந்திய தேசத்திற்காகவும், நம் தமிழ் நாட்டிற்காகவும் இந்த லெந்து காலங்களில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஆமென்.
சகோதரி. ரூத்பிமோராஜ்,
கே.ஜி. கார்டன், திருப்பூர்.
தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சி. இப்படி வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பல்வேறு வகையில் காணப்படும். விடுமுறை நாட்களில் உறவினர்களின் வீட்டிற்கு செல்வது ஒரு மகிழ்ச்சி, ஒரு சிலருக்கு நமக்கு பிடித்தமான பொருளை பிடித்தமானவர்கள் வாங்கி கொடுக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியில் பல வகைகள் உள்ளது. ஆனால் நிரந்தரமாக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால், தேவனுடைய அன்பிலும், அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் முக்கியத்துவம் கொடுக்கும் போது அவருடைய மகிழ்ச்சி நமக்குள்ளேயே வருகிறது.
யோவான் 15-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், ‘என்னுடைய மகிழ்ச்சி உங்களில் நிலைத்திருக்கும் படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்’ என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்று உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட மகிழ்ச்சியை பெறுவதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கலாம். இந்த உலகம் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானதல்ல, ஆனால் தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது.
எனவே தேவ பிள்ளைகளே இந்த உலகத்தில் உள்ள மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்காமல், தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.
ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
யோவான் 15-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், ‘என்னுடைய மகிழ்ச்சி உங்களில் நிலைத்திருக்கும் படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்’ என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்று உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட மகிழ்ச்சியை பெறுவதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கலாம். இந்த உலகம் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானதல்ல, ஆனால் தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது.
எனவே தேவ பிள்ளைகளே இந்த உலகத்தில் உள்ள மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்காமல், தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.
ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
இயேசுவை போல நம்முடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள இனிமையான வார்த்தையாக மாற்ற தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவரை பார்க்க போதகர் ஒருவர் வந்தார். உடலும், மனமும் சோர்வுற்று காணப்பட்ட நோயாளியை பார்த்த போதகர், அங்கிருந்தவர்களை பார்த்து, நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் எனக்கூறி ஜெபம் செய்தார். அங்கிருந்த அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டவருக்காக ஜெபம் செய்ய ஆரம்பித்தனர். பின்னர் போதகர் நோய்வாய்பட்டவரை பார்த்து, இத்தனை பேரும் உங்களுக்காக ஜெபித்துள்ளார்கள். இறைவனின் அருளால் நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்று கூறினார்.
அந்த இடத்தில் இருந்த ஒருவர் திடீரென போதகரை பார்த்து, வெறும் வார்த்தைகள் போய் அவரை குணப்படுத்துமா? எனக்கூறி சிரித்தார். அதற்கு போதகர், இந்த கூட்டத்திலேயே நீங்கள் தான் மிகப்பெரிய முட்டாள் என கூறினார். இதைக்கேட்டதும் அவர், நீங்கள் போதகராக இருந்து கொண்டு இப்படி என்னை பேசுகிறீர்கள், உடனே என்னிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது எனக்கூறி அடிக்க பாய்ந்தார்.
ஆனால் போதகரோ, பதற்றமே இல்லாமல், அங்கிருந்தவர்களிடம் நான் பேசிய இந்த கடுமையான வார்த்தை அவரது மனதை பாதித்து என்னை அடிக்கிற அளவுக்கு அவரை மாற்றி உள்ளது என்றால், நம்முடைய வாயில் இருந்து ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டிக்கொண்டால் கடவுள் நமக்கு நல்லது செய்யமாட்டாரா? என்று கேட்டார். எனவே நாம் ஜெபித்த ஜெபத்தை கடவுள் கேட்பார், அவரை கண்டிப்பாக குணப்படுத்துவார் என்று கூறினார். உடனே அந்த கோபப்பட்ட நபர் வெட்கி தலைகுனிந்தார்.
இதே போல தான் இயேசுவும் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் உதவிக்காக, உடல் நலம் பெறுவதற்காக தன்னை நாடி வந்தவர்களிடத்தில் இனிமையான வார்த்தைகளேயே எப்போதும் பயன்படுத்தினார். இது குறித்து வேதாகமத்தில் லூக்கா 8-ம் அதிகாரம் 48-ம் வசனத்தில், மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது, அமைதியுடன் போ, என்று கூறப்பட்டுள்ளது. மேலும் லூக்கா எழுதின சுவிஷேசத்தை முழுமையாக படித்தால் அதில் அனேக வசனங்கள் வார்த்தைகள் குறித்தும், நம்பிக்கை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆம், தேவ பிள்ளைகளே, தீய வார்த்தைகளை தவிர்ப்போம்.நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெற செய்ய இயலும். எனவே இயேசுவை போல நம்முடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள இனிமையான வார்த்தையாக மாற்ற தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
அந்த இடத்தில் இருந்த ஒருவர் திடீரென போதகரை பார்த்து, வெறும் வார்த்தைகள் போய் அவரை குணப்படுத்துமா? எனக்கூறி சிரித்தார். அதற்கு போதகர், இந்த கூட்டத்திலேயே நீங்கள் தான் மிகப்பெரிய முட்டாள் என கூறினார். இதைக்கேட்டதும் அவர், நீங்கள் போதகராக இருந்து கொண்டு இப்படி என்னை பேசுகிறீர்கள், உடனே என்னிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது எனக்கூறி அடிக்க பாய்ந்தார்.
ஆனால் போதகரோ, பதற்றமே இல்லாமல், அங்கிருந்தவர்களிடம் நான் பேசிய இந்த கடுமையான வார்த்தை அவரது மனதை பாதித்து என்னை அடிக்கிற அளவுக்கு அவரை மாற்றி உள்ளது என்றால், நம்முடைய வாயில் இருந்து ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டிக்கொண்டால் கடவுள் நமக்கு நல்லது செய்யமாட்டாரா? என்று கேட்டார். எனவே நாம் ஜெபித்த ஜெபத்தை கடவுள் கேட்பார், அவரை கண்டிப்பாக குணப்படுத்துவார் என்று கூறினார். உடனே அந்த கோபப்பட்ட நபர் வெட்கி தலைகுனிந்தார்.
இதே போல தான் இயேசுவும் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் உதவிக்காக, உடல் நலம் பெறுவதற்காக தன்னை நாடி வந்தவர்களிடத்தில் இனிமையான வார்த்தைகளேயே எப்போதும் பயன்படுத்தினார். இது குறித்து வேதாகமத்தில் லூக்கா 8-ம் அதிகாரம் 48-ம் வசனத்தில், மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது, அமைதியுடன் போ, என்று கூறப்பட்டுள்ளது. மேலும் லூக்கா எழுதின சுவிஷேசத்தை முழுமையாக படித்தால் அதில் அனேக வசனங்கள் வார்த்தைகள் குறித்தும், நம்பிக்கை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆம், தேவ பிள்ளைகளே, தீய வார்த்தைகளை தவிர்ப்போம்.நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெற செய்ய இயலும். எனவே இயேசுவை போல நம்முடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள இனிமையான வார்த்தையாக மாற்ற தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
இந்த தவக்காலத்திலே இயேசுவை பற்றி நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். ஆம் தேவ பிள்ளைகளே நாமும் தாழ்மை மனப்பான்மையோடு இருப்போம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தற்பெருமை என்ற மனப்பான்மை காணப்படும். இப்படி பெருமை உள்ள மனிதன் எப்போதுமே எனக்கு எல்லாம் தெரியும், ஒருவனும் எனக்கு போதிக்க வேண்டாம் என்று சொல்லி எதிர்த்து நிற்பான். மேலும் கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் அவனிடத்தில் தோன்றும். எனவே அவன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கொந்தளிக்கும் கடலைபோல் காணப்படும்.
இதேபோலதான் ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்திய போது பரிசுத்த அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். இதனால் தன் ஆயுதத்தால் மரித்துப்போனான். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தாழ்மையான குணம் கொண்ட ஒருவனிடம் போய் அவனை எவ்வளவு கேவலமாக பேசி அவமானப்படுத்தினாலும் அவனிடத்தில் இருந்து எந்த ஒரு கோபமோ, எரிச்சலோ காண முடியாது. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளையே பேசுவார்கள். தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.
அவர்களின் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். வேதாகமத்தில் 1 பேதுரு 5-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதே போல தான் இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். எனவே பிதாவானவர் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார். எனவே தான் இந்த தவக்காலத்திலே இயேசுவை பற்றி நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். ஆம் தேவ பிள்ளைகளே நாமும் தாழ்மை மனப்பான்மையோடு இருப்போம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம்.
அல்போன்ஸ், கோவில்வழி, திருப்பூர்.
இதேபோலதான் ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்திய போது பரிசுத்த அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். இதனால் தன் ஆயுதத்தால் மரித்துப்போனான். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தாழ்மையான குணம் கொண்ட ஒருவனிடம் போய் அவனை எவ்வளவு கேவலமாக பேசி அவமானப்படுத்தினாலும் அவனிடத்தில் இருந்து எந்த ஒரு கோபமோ, எரிச்சலோ காண முடியாது. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளையே பேசுவார்கள். தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.
அவர்களின் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். வேதாகமத்தில் 1 பேதுரு 5-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதே போல தான் இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். எனவே பிதாவானவர் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார். எனவே தான் இந்த தவக்காலத்திலே இயேசுவை பற்றி நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். ஆம் தேவ பிள்ளைகளே நாமும் தாழ்மை மனப்பான்மையோடு இருப்போம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம்.
அல்போன்ஸ், கோவில்வழி, திருப்பூர்.
தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம்.
இறைவன் தன் படைப்புகளில் வெப்பத்தை தணிக்க மழை, இருளை போக்க சூரியன் என்று ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவே படைத்துள்ளார். அதுபோலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்த வாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
இன்றைய வாலிபர்கள் தடுமாற்றத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய நாட்களிலே காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். நேரத்திற்கு கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்ல வேண்டி இருந்தது. மாலையில் வந்ததும் உறவுகளோடு விளையாடி விட்டு நிம்மதியாக தூங்க சென்றனர்.
ஆனால் இந்த காலத்தில் வாலிபர்களின் நிலை காலையில் எழுந்தவுடன் எது எப்படி இருந்தால் எனக்கு என்ன? என்னுடைய செல்போனுக்கு யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள். யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடிகிறது.
இயேசு தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது.
வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில், நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் சரீரத்தில் இருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.
ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
இன்றைய வாலிபர்கள் தடுமாற்றத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய நாட்களிலே காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். நேரத்திற்கு கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்ல வேண்டி இருந்தது. மாலையில் வந்ததும் உறவுகளோடு விளையாடி விட்டு நிம்மதியாக தூங்க சென்றனர்.
ஆனால் இந்த காலத்தில் வாலிபர்களின் நிலை காலையில் எழுந்தவுடன் எது எப்படி இருந்தால் எனக்கு என்ன? என்னுடைய செல்போனுக்கு யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள். யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடிகிறது.
இயேசு தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது.
வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில், நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் சரீரத்தில் இருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.
ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
தேவ பிள்ளைகளே நாமும் யோபுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம் ஆமென்.
தவக்கால சிந்தனை: தேவனுக்கு பயந்த யோபு
இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். ஆனால் வேதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று இந்த தவக்காலத்தில் சற்று தியானித்து பார்ப்போம்.
யோபு என்ற பெயர் கொண்ட மனிதன் இருந்தான். அவன் உத்தமனும், தேவனுக்கு பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். அவனுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். சொத்துக்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. மேலும் ஆடு, மாடு,ஒட்டகம், கழுதைகள் என கால்நடைகளும் ஆயிரம் ஆயிரமாய் இருந்தன. இதனால் வேலையாட்களும் அதிகமாய் வேலை செய்தனர். இப்படி இருந்ததினால் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தான். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவ்வளவு சொத்து, சுகம் இருந்தும் அவன் தேவனுக்கு மிகவும் பயபக்தியுடன் காணப்பட்டான். இதனால் இன்பமாக வாழ்ந்து வந்தான்.
இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்த்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோபுவுக்கோ உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான். இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோபுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை, எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவ பிள்ளைகளே நாமும் யோபுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம் ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். ஆனால் வேதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று இந்த தவக்காலத்தில் சற்று தியானித்து பார்ப்போம்.
யோபு என்ற பெயர் கொண்ட மனிதன் இருந்தான். அவன் உத்தமனும், தேவனுக்கு பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். அவனுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். சொத்துக்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. மேலும் ஆடு, மாடு,ஒட்டகம், கழுதைகள் என கால்நடைகளும் ஆயிரம் ஆயிரமாய் இருந்தன. இதனால் வேலையாட்களும் அதிகமாய் வேலை செய்தனர். இப்படி இருந்ததினால் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தான். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவ்வளவு சொத்து, சுகம் இருந்தும் அவன் தேவனுக்கு மிகவும் பயபக்தியுடன் காணப்பட்டான். இதனால் இன்பமாக வாழ்ந்து வந்தான்.
இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்த்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோபுவுக்கோ உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான். இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோபுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை, எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவ பிள்ளைகளே நாமும் யோபுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம் ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
தேவ பிள்ளைகளே தேவன் நம்மை காண்கிற தேவனாய் இருக்கிறார். நாம் அவருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
குமார் என்னும் ஓர் சிறுவன் இருந்தான். அவன் அம்மா அவனிடம் ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்யும் காரியங்களை எல்லாம் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே நாம் எந்த தவறும் செய்யக்கூடாது என்று சிறுவயது முதலே சொல்லி கொடுத்து தேவனுக்கு பயந்தவனாகவும், கீழ்படிதல் உள்ளவனாகவும் வளர்த்து வந்தார்.
இப்படி தேவனுக்கு கீழ்படிதல் உள்ள சிறுவனாக இருந்த குமாரும், அவனது நண்பன் நவீனும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் ஒரு மாம்பழ தோட்டம் இருப்பதை பார்த்தனர். உடனே நவீன், “டேய் குமார் உனக்கு மாம்பழம் என்றால் நன்றாக பிடிக்கும் அல்லவா! நான் போய் அந்த மாம்பழ தோட்டத்தில் போய் பழங்களை பறித்து வருகிறேன். யாரும் வருகிறார்களா? என்று நீ கவனித்துக்கொள். அப்படி யாராவது வந்தால் எனக்கு தகவல் சொல்” என்று நவீன் மாம்பழத்தை பறிக்க தோட்டத்திற்குள் சென்றான்.
நவீன் மாம்பழத்தின் மீது கை வைத்தவுடன், தோட்டத்திற்கு வெளியில் இருந்த குமார், ‘டேய் நவீன் யாரோ வருகிறார்கள்’ என்று சத்தமிட்டான், உடனே நவீன் தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான். ஆனால் அங்கு பார்த்தால் யாருமே இல்லை. உடனே நவீன், குமாரை பார்த்து,‘ டேய், யாருமே இல்லையே பின் ஏன் என்னை பழத்தை பறிக்க விடாமல் சத்தமிட்டு கூப்பிட்டாய்’ என்று கேட்டான். அதற்கு உடனே குமார், “டேய் நவீன் நாம் இந்த தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மாம்பழங்களை பறித்து சாப்பிடுவது சரியல்ல. தோட்டத்தின் உரிமையாளரிடம் கேட்டு பறித்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அது திருட்டு என்று ஆகி விடும்” என்று கூறினான். அதற்கு நவீன், “டேய் யாருமே இல்லை, பின் யாரிடம் கேட்பது, நான் பறித்து தருகிறேன், யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விடலாம்” என்று கூறினான்.
ஆனால் குமாரோ, ‘நவீனை பார்த்து யாருக்கும் தெரியாது’ என்று சொல்வது தவறு. இங்கு தோட்டத்தில் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் எப்போதுமே நம்மை பார்த்துக்கொண்டே இருப்பார் என்று எனது அம்மா சொல்லியிருக்கிறார்கள். மேலும் வேதாகமத்தில் ஆதியாகமம் 16-ம் அதிகாரம், 13-ம் வசனத்தில், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று நான் படித்துள்ளேன். எனவே யாருக்கும் தெரியாமல் அந்த மாம்பழத்தை பறிக்காமல், பின்னர் தோட்டத்து உரிமையாளரிடம் கேட்டு நாம் சாப்பிடலாம் என்று கூறி குமாரும் அவன் நண்பன் நவீனும் பள்ளிக்கு சென்றனர்.
எனவே தேவ பிள்ளைகளே தேவன் நம்மை காண்கிற தேவனாய் இருக்கிறார். நாம் அவருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
இப்படி தேவனுக்கு கீழ்படிதல் உள்ள சிறுவனாக இருந்த குமாரும், அவனது நண்பன் நவீனும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் ஒரு மாம்பழ தோட்டம் இருப்பதை பார்த்தனர். உடனே நவீன், “டேய் குமார் உனக்கு மாம்பழம் என்றால் நன்றாக பிடிக்கும் அல்லவா! நான் போய் அந்த மாம்பழ தோட்டத்தில் போய் பழங்களை பறித்து வருகிறேன். யாரும் வருகிறார்களா? என்று நீ கவனித்துக்கொள். அப்படி யாராவது வந்தால் எனக்கு தகவல் சொல்” என்று நவீன் மாம்பழத்தை பறிக்க தோட்டத்திற்குள் சென்றான்.
நவீன் மாம்பழத்தின் மீது கை வைத்தவுடன், தோட்டத்திற்கு வெளியில் இருந்த குமார், ‘டேய் நவீன் யாரோ வருகிறார்கள்’ என்று சத்தமிட்டான், உடனே நவீன் தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான். ஆனால் அங்கு பார்த்தால் யாருமே இல்லை. உடனே நவீன், குமாரை பார்த்து,‘ டேய், யாருமே இல்லையே பின் ஏன் என்னை பழத்தை பறிக்க விடாமல் சத்தமிட்டு கூப்பிட்டாய்’ என்று கேட்டான். அதற்கு உடனே குமார், “டேய் நவீன் நாம் இந்த தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மாம்பழங்களை பறித்து சாப்பிடுவது சரியல்ல. தோட்டத்தின் உரிமையாளரிடம் கேட்டு பறித்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அது திருட்டு என்று ஆகி விடும்” என்று கூறினான். அதற்கு நவீன், “டேய் யாருமே இல்லை, பின் யாரிடம் கேட்பது, நான் பறித்து தருகிறேன், யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விடலாம்” என்று கூறினான்.
ஆனால் குமாரோ, ‘நவீனை பார்த்து யாருக்கும் தெரியாது’ என்று சொல்வது தவறு. இங்கு தோட்டத்தில் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் எப்போதுமே நம்மை பார்த்துக்கொண்டே இருப்பார் என்று எனது அம்மா சொல்லியிருக்கிறார்கள். மேலும் வேதாகமத்தில் ஆதியாகமம் 16-ம் அதிகாரம், 13-ம் வசனத்தில், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று நான் படித்துள்ளேன். எனவே யாருக்கும் தெரியாமல் அந்த மாம்பழத்தை பறிக்காமல், பின்னர் தோட்டத்து உரிமையாளரிடம் கேட்டு நாம் சாப்பிடலாம் என்று கூறி குமாரும் அவன் நண்பன் நவீனும் பள்ளிக்கு சென்றனர்.
எனவே தேவ பிள்ளைகளே தேவன் நம்மை காண்கிற தேவனாய் இருக்கிறார். நாம் அவருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.






