என் மலர்
கார்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட புது இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இ கிளாஸ் மாடல் துவக்க விலை ரூ. 63.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த ஆண்டு மெர்சிடிஸ் வெளியிட திட்டமிட்டு இருக்கும் 15 புது மாடல்களில் ஒன்றாக புதிய இ கிளாஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தோற்றத்தில் புது மாடலில் மேம்பட்ட முன்புறம், புதிய பம்ப்பர், கிரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், புது டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் புதிய MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹே மெர்சிடிஸ் வாய்ஸ் கமாண்ட் வசதி, 2 யுஎஸ்பி போர்ட்கள், பின்புற சென்டர் கன்சோல் தொடுதிரை வசதி கொண்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பார்கிங் அசிஸ்ட், பார்கோடிரானிக், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளது. புதிய மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 80.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
நிசான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இவை எக்சேன்ஜ் சலுகை, தள்ளுபடி மற்றும் லாயல்டி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இது மார்ச் 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

சலுகையை பொருத்தவரை ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் லாயல்டி பலன் வழங்கப்படுகிறது. இந்த பலன்கள் என்ஐசி உள்ள விற்பனையகங்களில் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பகுதி மற்றும் காரின் வேரியண்டிற்கு ஏற்ப சலுகை மதிப்பு வேறுபடும்.
இந்தியாவில் நிசான் கிக்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 105 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் மற்றும் 154 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2021 செலரியோ மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் செலரியோ ஹேட்ச்பேக் காரின் புது தலைமுறை வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் நாடு முழுக்க சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி புதிய தலைமுறை மாருதி சுசுகி செலரியோ மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடல் அளவில் பெரியதாகவும், அதிக இடவசதியுடன் தற்போதைய மாடலை விட பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என்பதால், இதன் விலையும் தற்போதைய வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். புதிய செலரியோ ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்மில் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், வேகன்ஆர் மற்றும் டிசையர் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.
புதிய மாடலில் முன்புறம் இரட்டை ஏர் பேக், ஸ்பீடு அலெர்ட்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் எல்இடி லைட்டிங், புதிய அலாய் வீல்கள், மேம்பட்ட டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகியின் புதிய தலைமுறை செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் ஆட்டோ கியர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் அசத்தலான புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டாடா டியாகோ விளங்குகிறது. முன்னதாக டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. தற்போது டியாகோ மாடல் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக டாடா டியாகோ மாடல் டெக்டானிக் புளூ நிறத்தில் கிடைத்தது. தற்போது இந்த நிறத்திற்கு மாற்றாக டாடா டியாகோ மாடல் அரிசோனா புளூ எனும் புது நிறத்தில் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சபாரி மாடலும் இதே நிற சாயல் கொண்டுள்ளது.

புதிய நிறம் தவிர டாடா டியாகோ மாடல் - விக்டரி எல்லோ, பிளேம் ரெட், பியல்சென்ட் வைட், பியூர் சில்வர் மற்றும் டேடோனா கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிஷன் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் பியர்ல் கேப்சூல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் புதிய நிறங்களில் அசத்தல் தோற்றம் கொண்டுள்ளது. புது நிறம், அலாய் வீல்கள் மற்றும் புது பொருட்களால் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் லம்போர்கினி உருஸ் பியர்ல் கேப்சூல் எடிஷன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், உருஸ் மாடல் துவக்க விலை ரூ. 3.15 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பியர்ல் கேப்சூல் எடிஷன்- ஜியாலோண்டி, வெர்டி மேண்டிஸ் மற்றும் அரான்கோ பொரியலிஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் 23 இன்ச் ஹை-கிளாஸ் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. உருஸ் ஸ்டான்டர்டு மாடலில் 21 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்புற இருக்கைகள் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 4.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் உள்ளது.
இது 641 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சம் 305 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் மாடலை வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.
ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் புதிய எம்340ஐ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் விலை ரூ. 62.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் புதிய 3 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்றது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். தற்போது இந்த மாடல் விற்று தீர்ந்ததாக பிஎம்டபிள்யூ இந்தியா வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதலில் முன்பதிவு செய்த 40 வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் உள்ள பிரபல பந்தய களத்தில் சிறப்பு பயிற்சி வழங்குவதாக பிஎம்டபிள்யூ ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ கார் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது.
இந்த என்ஜின் 387 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர்கள், 19 இன்ச் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹெச்யுடி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் கொண்டுள்ளது.
ஆடி நிறுவனம் தனது இ டிரான் சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது இ டிரான் மாடல் டீசரை ஆடி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
இ டிரான் மட்டுமின்றி இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடலையும் ஆடி அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களும் இந்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2019 ஆண்டு ஆடி நிறுவனம் இ டிரான் மாடலை காட்சிப்படுத்தியது.

புதிய இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல் ஒரே பிளாட்பார்மில் உருவாகி இருக்கின்றன. எனினும், ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் போன்ற ஸ்லோபிங் ரூப்லைன், புது தோற்றம் கொண்ட பின்புறம் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இ டிரான் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் இவை அனைத்தும் கொண்டுவரப்படுமா அல்லது ஒற்றை வேரியண்ட் மட்டும் அதிக திறனுடன் வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நான்கு வேரியண்ட், ஐந்து நிறங்கள் மற்றும் புது அம்சங்கள் நிறைந்த 2021 ரெனால்ட் டிரைபர் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2021 டிரைபர் மாடல் காரினை அறிமுகம் செய்தது. புதிய 2021 ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 5.30 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் 2019 வாக்கில் டிரைபர் எம்பிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 டிரைபர் மாடலுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. 2021 ரெனால்ட் டிரைபர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய டிரைபர் மாடலில் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள், எல்இடி இன்டிகேட்டர் மற்றும் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர 2021 டிரைபர் மாடல் செடார் பிரவுன் எனும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது. இந்த மாடல் RXE, RXL, RXT மற்றும் RXZ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் 2021 டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் புது வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஸ்கோடாவின் பல மாடல்களின் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் ஸ்கோடா நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் ரேபிட் புது வேரியண்ட் இருக்கிறது.
புதிய ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த தகவலை ஸ்கோடா இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் அடுத்த 12 மாதங்களில் நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது.
இவற்றில் முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இதைத் தொடர்ந்து புதிய தலைமுறை ஆக்டேவியா மாடலும் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல்களின் வெளியீட்டு விவரங்களை ஜாக் ஹாலிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.
டொயோட்டா நிறுவனம் மார்ச் மாதம் முழுக்க தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் யாரிஸ், அர்பன் குரூயிசர் மற்றும் கிளான்சா மாடல்களுக்கு கிடைக்கின்றன.

டொயோட்டா யாரிஸ் மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. யாரிஸ் மாடலுக்கு கூடுதலாக ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டொயோட்டா கிளான்சா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா, புதிய பார்ச்சூனர் மற்றும் வெல்பயர் போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
போக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடலை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது.
போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2021 டி ராக் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது போக்ஸ்வேகன் கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் டி ராக் மாடல் ரூ. 19.99 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒற்றை வேரியண்ட்டில் ஐந்து வித நிறங்களில் கிடைத்தது. சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்பட்ட டி ராக் மாடல் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

2021 டி ராக் மாடலும் இதேபோன்று கொண்டுவரப்படும் என தெரிகிறது. புதிய டி ராக் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப், 6 ஏர்பேக், டையர் பிரஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2021 டி ராக் மாடல் ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டார், டாடா ஹேரியர் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தனது எஸ்யுவி மாடல் இது தான் என அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்யுவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா இந்திய சந்தையில் ஆறு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மைல்கல் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் எட்டியுள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் பிரெஸ்ஸா மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே ஆண்டில் விட்டாரா பிரெஸ்ஸா ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
அதிக வரவேற்பை தொடர்ந்து இந்த எஸ்யுவி ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் அக்டோபர் 2017 வாக்கில் இது இரண்டு லட்சம் யூனிட்களை கடந்தது. இந்த இலக்கை மாருதி சுசுகி ஒன்பது மாதங்களில் எட்டியது. முதற்கட்டமாக பிரெஸ்ஸா மாடல் 1.3 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. இதன்பின் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இது 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
2019 பிப்ரவரி மாதத்தில் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் நான்கு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்தது. பின் 2019 டிசம்பரில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. கடந்த மாதம் பிரெஸ்ஸா மாடல் 11,585 யூனிட்கள் விற்பனையானது.






