என் மலர்
கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவாகி இருக்கும் முதல் வாகனமாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. மேலும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2. வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது.
புதிய அல்ட்ரோஸ் காரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏழு இன்ச் அளவில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது.

டாடா அல்ட்ரோஸ் கார்: 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் முறையே 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 90 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த காருக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கென புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., கார்னெர் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், முன்புறம் இரண்டு ஏர்பேக், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ்: எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி. எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட். (ஒ) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் காரை வாங்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் காருக்கான முன்பதிவுகளை ஜனவரி 21-ம் தேதி துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 1410 பேர் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கியா கார்னிவல் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு, அதன் பின் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கிறது.

கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.
புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 செலரியோ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 மாடல் துவக்க விலை ரூ. 4.41 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எஸ்.6 காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே மெஷ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் ஹெட்லேம்ப் வரை நீள்கிறது. இத்துடன் கூர்மையான பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி செலரியோ ஹேட்ச்பேக் மாடலில் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் டோர் ஹேண்டிள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ORVM-கள் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீல், எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங், பின்புறம் 60:40 விகிதத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுனருக்கு ஆட்டோ டவுன் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், சைல்டு ப்ரூஃப் பின்புற லாக், ஸ்டாப் லேம்ப்கள் உயரமாக பொருத்தப்பட்டுள்ளன.
மாருதி செலரியோ மாடலில் 998சிசி, மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பி.எஸ். விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்திய சந்தையில் வெற்றிகரமான மாடலாக இருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அந்நிறுவனம் டீசல் வேரியண்ட் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது.
இந்நிலையில், இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கார் பி.எஸ்.6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்ப்பர், புதிய வடிவமைப்பு கொண்ட முன்புற கிரில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் முன்புற பம்ப்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பம்ப்பரின் இருபுறங்களில் ஃபாக்லைட்கள் வழங்கப்படலாம்.
முன்புறம் போன்றே காரின் பின்புறத்திலும் புதிய டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் விரும்புவோர் வாங்கிக் கொள்ளும் வகையில் கூடுதல் அம்சமாக வழங்கப்படலாம். உள்புறம் புதிய நிறத்தாலான இருக்கைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் பலேனோ மாடலில் உள்ள புதிய ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ யூனிட் புதிய காரிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்கள் மட்டுமின்றி, ஓட்டுனரின் செயல்பாடு மற்றும் எரிபொருள் பயன்பாடு போன்ற விவரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் எம்.ஜி. இசட்.எஸ். மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த காரின் விலையும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும், எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதன் முன்பதிவுகள் டிசம்பர் 21, 2019 இல் துவங்கப்பட்டது.
இந்நிலையில், முன்பதிவு துவங்கிய ஒரு மாதத்திற்குள் எம்.ஜி. இசட்.எஸ். காரை வாங்க சுமார் 2300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு அறிமுகமான ஹெக்டார் மாடல் மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இரண்டாவது மாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டு நிகழ்விலேயே புதிய காரை வாங்கும் முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக விலை அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான இரண்டாம் கட்ட முன்பதிவில் விலை மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.
எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ பி.எஸ். 6 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பி.எஸ்.6 இகோ மாடல் விலை ரூ. 3.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இகோ பி.எஸ்.6 மாடலின் என்ஜின் தவிர சிறுசிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இகோ மாடலில் மேம்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மாருதி நிறுவனத்தின் மற்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 101 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இகோ சி.என்.ஜி. வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. இதன் சி.என்.ஜி. வேரியண்ட் லிட்டருக்கு 21.8 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி இகோ கார் பல்வேறு வேரியணட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கார் முதன்முதலில் 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் ஜனவரி 27-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் எம்.ஜி. மோட்டார் விற்பனையகம் சென்று ரூ. 50,000 கட்டணத்தில் புதிய எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்ய முடியும்.
எம்.ஜி. இசட்.எஸ். இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக அந்நிறுவனத்தின் ஹெக்டார் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் எம்.ஜி. இசட்.எஸ். கார்: ஐதராபாத், ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தினை குர்கிராமில் துவங்கியது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. காரின் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் துவக்க விலை ரூ. 21.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. டாப் எண்ட் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட் டீசல் ஆட்டோமேடிக் விலை ரூ. 24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் ஜீப் காம்பஸ் காரின் இரண்டு வேரியண்ட்களிலும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் காம்பஸ் டிரெயில்ஹாக் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் காம்பஸ் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள புதிய பவர்டெரியன் ஏற்கனவே டிரெயில்ஹாக் மாடல்களில் உள்ள பவர்டிரெயின் போன்றதாகும். இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்னிவல் எம்.பி.வி. கார் நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்.பி.வி. கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவின் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய கார்னிவல் கார் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கியா எம்.பி.வி. கார் பல்வேறு சீட்டிங் அமைப்புகளில் வெவ்வேறு விலையில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் என்ட்ரி லெவல் மாடலில் ஒன்பது பேரும், நடுத்தர மாடலில் எட்டு பேர், டாப் எண்ட் மாடலில் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் வெவ்வேறு விலைகளில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

இதில் ஏழு பேர் அமரக்கூடிய மாடலில் நப்பா லெதரால் ஆன இருக்கைகள், பின்புற இருக்கைகளில் பொழுதுபோக்கிற்கு இரண்டு 10.1 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப் எண்ட் மாடலில் 18 இன்ச் அலாய், டூயஸ் பேன் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கார்னிவல் காரில் 200 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
கார் தயாரிப்பில் பிரபல நிறுவனமாக அறியப்படும் கிரேட் வால் மோட்டார்ஸ் விரைவில் இந்திய சந்தையில் ஹாவல் பிராண்ட் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாவல் பிராண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது.
ஏற்கனவே சீனாவின் எம்.ஜி. மோட்டார்ஸ் பெருமளவு வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த சீன நிறுவனமும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. எஸ்.யு.வி. மாடல் கார்கள் தயாரிப்பில் சீனாவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக கிரேட் வால் மோட்டார்ஸ் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடலான ஹெச்4, ஹெச்6 மற்றும் ஹெச்9 மாடல் கார்கள் அனைத்தும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இது தவிர இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான வேய் மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள பேட்டரி கார்களும் கண்காட்சியில் இடம்பெறும்.

இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஹாவல் ஹெச்4 மாடலானது மிகவும் கூர்மையான முன்பகுதியைக் கொண்டது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஹூண்டாய் கிரெடா மாடலைக் காட்டிலும் இது பெரியதாகும்.
இதன் பக்கவாட்டு தோற்றம் பார்ப்பதற்கு ஜீப் கம்பாஸை போன்றிருக்கும். இது 4.4 மீட்டர் நீளம் உடையது. 2,660 மி.மீ. சக்கரங்களை உடையது. இது 170 ஹெச்.பி. திறன் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் டியூயல் கிளட்ச் மற்றும் ஏ.எம்.டி. வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பி.எஸ்.6 கார் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் பி.எஸ்.6 சான்ட்ரோ காரின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
அதன்படி புதிய பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விலை ரூ. 4.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 22,000 முதல் ரூ. 27,000 வரை அதிகமாகும்.

மேலும் ஹூண்டாய் சான்ட்ரோ சி.என்.ஜி. வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சான்ட்ரோ காரின் வடிவமைப்பு டால்-பாய் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்புறம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுண்ட்கள், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. முன்புற கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பர் பகுதிகளை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்படுகிறது.
இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், பின்புற ஏ.சி. வென்ட்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், யு.எஸ்.பி. போர்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி., பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதி, பவர் விண்டோக்கள், பின்புறம் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இ.கே.யு.வி.100 காட்சிக்கு வைக்கப்பட்டது.
மஹிந்திராவின் புதிய இ.கே.யு.வி.100 கார் இந்திய சந்தையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலின் தோற்றம் பார்க்க பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் மேம்பட்ட கிரில், ஹெட்வொர்க் மற்றும் டெயில்லைட்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.
மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில் 40 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இது 53 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100 இருக்கும். இதன் விலை ஒவ்வொரு மாநிலத்தின் சலுகைகளுக்கு ஏற்ப மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






