என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வர இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
      • பின்னால் நின்ற நபர் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறி உள்ளார்.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.

      அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது பின்னால் நின்ற நபர் அவரது கார்டு ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அப்போது 2 பேரின் கார்டு களும் தவறி கீழே விழுந்ததும், மர்ம நபர் இசக்கிதுரையின் கார்டை மாற்றி எடுத்து விட்டு சென்றுவிட்டார்.

      சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 2 முறை தலா ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி துரை தன்னிடம் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது ஈரோட்டை சேர்ந்த நபரின் கார்டு என்பது தெரியவந்தது. உடனே வங்கிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மூலம் கார்டு உரிமையாளருக்கு போன் செய்தபோது, மர்ம நபர் அந்த கார்டின் உரிமையாளரிடம் இருந்து இதேபோல் கார்டை ஏமாற்றி பறித்து வந்தது தெரியவந்தது.

      இதையடுத்து அந்த நபர் குறித்து கடையநல்லூர் போலீசில் இசக்கிதுரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். கடையநல்லூர் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.

      • குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
      • ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

      சுரண்டை:

      தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

      கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

      • அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
      • ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும்

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் தினந்தோறும் அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு பூஜையுடன் வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். மேலும் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

      • ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தை பிடித்தது.
      • மாஸ்டர்கள் சண்முக சுந்தரம், குத்தாலிங்கம், சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழகத்தின் 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

      போட்டியை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தொழிலதிபர் பூங்குன்றன் வேலாயுதம், கோமதிநாயகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மாஸ்டர் குத்தாலிங்கம் வரவேற்று பேசினார். நெல்லை வளர்மதி முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.

      போட்டியில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் மிஸ்டர் தென்காசி மற்றும் ஆடவருக்கான மாடலிங் போட்டியில் 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்து கொண்டனர்.

      இதில் ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தையும், புளி யங்குடி ராயல் மாஸ்டர் ஜிம் 2-வது இடத்தையும் பிடித்தது. அவர்களுக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

      பரிசளிப்பு விழாவில் மருத்துவர்கள் அப்துல் அஜீஸ், செல்வகணேஷ், காஜாமைதீன், பூங்குன்ற வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

      மாஸ்டர் சண்முக சுந்தரம், மாஸ்டர் குத்தாலிங்கம், மாஸ்டர் சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அசோசியேசன் சார்பாக வழங்கப்பட்டது.

      போட்டியில் சண்முக சுந்தரம், போஸ் முத்துப் பாண்டியன், கனல் குமார், தமிழரசன், முகமது ஹீரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். விழாவில் மாஸ்டர்கள் கணேசன், ஜோதி மாணிக்கம் மற்றும் பாரத் உடற்பயிற்சியின் விளையாட்டு வீரர்கள் என திரளானோர் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

      முடிவில் மாஸ்டர் முருகன் நன்றி கூறினார்.

      • கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
      • நிகழ்ச்சியில் மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் 137-வது பிறந்த தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷணன் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம். ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் முருகையா, மேரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் குட்டிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

      • தோரணமலை முருகன் கோவிலானது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட கோவிலாகும் ஆகும்.
      • விழாவில் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

      கடையம்:

      தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமையும், பழமையும் உடைய கோவிலாகும்.

      தோரணமலை முருகன் கோவில்

      தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, ரெயில்வே காவல்துறை போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக சுற்று வட்டார கிராமப்புறம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் திறனை மேம்படுத்தும் மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கான மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ள மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

      இதில் எலும்பு- மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

      நீளம் தாண்டுதல்

      விழாவில் திரளான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்பட பயிற்சிகளை திறம்பட செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

      கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மைதானம் அமைத்துக் கொடுத்த கோவில் நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

      • அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
      • அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

      தென்காசி:

      தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

      குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.

      • ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.
      • உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

      தென்காசி:

      தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.

      இரட்டையர்கள் சாதனை

      அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.

      மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 1500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் தங்கம், 400 மீட்டரில் வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

      கலெக்டர் பாராட்டு

      இந்நிலையில் மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 வயது இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் மற்றும் தகடகங்களை போட்டியில் சாதனை படைத்துள்ள உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் ஆகியோருக்கு தென்காசி கலெக்டர் வாழ்த்து க்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.

      மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் என்.ஆர். மணி, தலைவர் ராம்குமார், செயலாளர் முருகன், துணை செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சங்கர், இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவகுமாரி, பள்ளியின் முதல்வர் செய்யது, துணை முதல்வர் கவுரி மற்றும் ராணுவவீரர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

      • தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. ‌
      • நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்யலாம்.

      கடையம்:

      கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்டு ள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

      கடையம் வட்டாரத்தில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடனா மற்றும் ராமநதி அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.

      இந்த காலகட்டத்தில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்ய நெல் நாற்று விடும் பணி நடக்கிறது. பின்வரும் காலங்களில் மழை பெய்ய தவறி விட்டால் நெல் பயிரை காப்பாற்ற முடியாது. எனவே விவசாயிகள் குறைந்த வயது நெல் ரகங்களான ஐ.ஆர். 50, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்கள் அல்லது தண்ணீர் தேவை குறைவாக உள்ள உளுந்து, சோயா மொச்சை, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து தண்ணீரை சேமித்து கொள்ளலாம்.

      மேலும் நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நாற்று பாவி நடவு செய்யாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் நெல் பயிரை அறுவடை செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.
      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார்.

      சுரண்டை:

      சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சங்க ஆண்டு விழா, பாண்டியனார் நூலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

      நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை எஸ்.தங்கையா நாடார் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள், முன்னாள் சங்க தலைவர்கள் வி.கே.எஸ். பன்னீர்செல்வம், வி.கே.ரத்தினநாடார், காமராஜர் வணிக வளாக வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கே.எஸ் சேர்மசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அண்ணாமலை கனி அனைவரையும் வரவேற்றார்.

      சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், சுரண்டை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொ.காசிராணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

      நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். பாண்டியனார் நூலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

      முன்னதாக சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து விழா நடக்கும் காமராஜர் அரங்கத்திற்கு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.முருகன், துணைச் செயலாளர் கே.டி.பாலன், பொருளாளர் டி.ரவி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வி.ராமர், சி.எம்.சங்கரேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

      • காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது.
      • நிகழ்ச்சியில் திப்பணம்பட்டி ஊராட்சி தலைவர் ஐவராஜா, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிர மணியன், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெத்தநாடார்பட்டி வைகுண்டராஜ், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் மேரி மாதா, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      • 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
      • நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்

      ஆலங்குளம்:

      தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள காமராஜர் சிலை அகற்றப்பட உள்ளது. இதை யடுத்து பஸ் நிலையத்தின் கீழ்புறம் புதிய சிலையை அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்தது.

      அந்த இடத்தில் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா காமராஜர் பிறந்த நாளான நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்கினார். ஆலங்குளம் பேருராட்சி துணைத்தலைவர் எஸ்.டி.ஜான்ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.எஸ். காமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் டி.சாலமோன் ராஜா வரவேற்றார்.

      தொடர்ந்து கல்வி கண் திறந்த காமராஜரின் புதிய வெண்கல சிலையை ஆலங்குளம் டி.டி.ஏ. பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தின ராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு திறப்பு விழாவிற்கு வந்திருந்த வர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

      மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பழனி நாடார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல தலைவர் டி.பி.வி. வைகுண்ட ராஜா, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், தமிழ் செல்வி போஸ், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலடி எழில்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

      மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட தலைவர் டி.பி.வி. கருணாகரராஜா, தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ், காமராஜர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு கமிட்டி பொருளாளர் பர்வீன்ராஜ், மூத்த வழக்கறிஞர் பால கணேசன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரம், நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உதயராஜ், நகர நாடார் சங்க தலைவர் தூசி. செல்வராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநிலத் தலைவர் ஞானபிரகாஷ், சுபாஷ் சந்திரபோஸ், நகர தலைவர் தாமஸ், வட்டார தலைவர் ரூபன், ச.ம.க. நகர தலைவர் ஜெயபாலன், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, அருணாச்சலம், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் தங்க செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      முன்னதாக ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீஅரசடி வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து நெல்லை பேட்டையை சேர்ந்த ஜாண்பாவா சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சியோடு 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலை மையில் 121 முளைப்பாரி மற்றும் பொய்க்கால் குதிரை, கரகாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து புதிய சிலையை அலங்கரித்தனர். இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலி பர்கள், இளம்பெண்கள், முதிய வர்கள் என திரளா னவர்கள் வந்து ரசித்தனர்.

      காமராஜரின் புதிய வெண்கல சிலை திறக்கப்படுவதை அறிந்த பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமலஹாசன் கட்சியி ன் மாவட்ட நிர்வாகி யான தொழி லதிபர் கருணாக ரராஜா மூலமாக வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியி ருந்தார். முடிவில் வட செ ன்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் நன்றி கூறினார்.

      இந்த விழாவில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத் தலைவர் சிவ அருணன், முதல் வகுப்பு அரசு ஒப்பந்த தாரர் கரையாளனூர் சண்முகவேல், தொழில திபர்கள் மணிகண்டன், மோகன்லால், தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வ மோக ன்தாஸ் பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் பிரபா கரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


      காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

      காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.


       


      ×