தொழில்நுட்பம்

சியோமியின் Mi9 ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பமும் இருக்கும்

Published On 2019-02-15 05:39 GMT   |   Update On 2019-02-15 05:39 GMT
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான Mi 9 மாடலில் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. #XiaomiMi9 #Smartphone



சியோமி நிறுவனம் தனது Mi 9ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போனின் பேக் பேனல் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

தற்சமயம் சியோமியின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் Mi 9 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் எஃபெக்ட் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற அம்சம் ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றிருந்தது.

புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக நிறத்தை பெற லேசர் ஹாலோகிராஃபிக் வழிமுறை மற்றும் டபுள்-லேயர் கோட்டிங் பயன்படுத்தப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது. புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வழக்கமான சென்சார், டெப்த் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 48 எம்.பி. சோனி IMX486 பிரைமரி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,335) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் கடந்த வாரம் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஒரு வாரத்திற்குள் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையானதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சீனாவில் மட்டும் ரெட்மி நோட் 7 விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
Tags:    

Similar News