வழிபாடு
null

நாளை சந்திராஷ்டமம் : பதட்டமே வேண்டாம் - இதை செய்தாலே போதும்

Published On 2025-10-13 16:47 IST   |   Update On 2025-10-13 16:52:00 IST
  • சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.
  • திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம காலம். பொதுவாக சந்திராஷ்டம நாள் தோஷமான நாளாகத்தான் கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த நாட்களில் பயணம் செய்ய மாட்டார்கள், தேவையில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள், அதிலும் சிலர் வாயைத் திறந்து பேசக் கூட மாட்டார்கள்.

ஏனென்றால் இந்த நாட்களில் தேவையில்லாமல் மனம் அலைபாயும், நினைத்த காரியங்கள் கைகூடாமல் போகும், அதனால் மன உளைச்சல் கூட ஏற்படலாம் என நம்புகின்றனர். அதனால் இந்த நாட்களில் அமைதியாக இருப்பதே நல்லது என நினைத்து அதிகம் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.

அதிலும் செவ்வாய்கிழமையில் சந்திராஷ்டமம் வந்துவிட்டால் அவ்வளவு தான். சிலர் அந்த நாளில் எந்தவொரு முக்கியமான வேலையையும் தொடங்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாந்திராஷ்டம நாளிலும் பார்த்து பார்த்து அந்த நாளை கடக்க வேண்டும் என்றில்லை. பின்வருபவற்றை பின்பற்றினாலே போதும். அன்றைய நாளில் மன அமைதியாய் நிறைவாய் இருக்கலாம்.

* சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.

* சந்திராஷ்டம நாட்களில் தங்களால் முடிந்தவர்கள் குல தெய்வத்தை நேரில் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் மனதார நினைத்துக்கொள்ளலாம்.

* உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவில் அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.




* தங்களால் முடிந்தவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.

* தெய்வ வழிபாடு செய்யும்போதே முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முதலானவற்றை மனதார செய்துவிட்டு அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.

* முக்கியமாக அன்றைய தினம் தேவையில்லாமல் மற்றவர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதமும் செய்யக்கூடாது.

* திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

* எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும்.

இன்று சந்திராஷ்டம நாள் விபரீதமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று எப்போதும் எதிர்மறையாக யோசித்துக்கொண்டே இருக்காமல் இறைவுணர்வோடு, நேர்மறை எண்ணங்களோடு அன்றைய நாளை கடக்க வேண்டும்.

Tags:    

Similar News