காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
- இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்த விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஷாக் தார், "காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.