உலகம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன் தாக்குதல்: 4 வீரர்கள் பலி

Published On 2024-10-14 04:10 IST   |   Update On 2024-10-14 04:10:00 IST
  • பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது.
  • லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.

டெல் அவிவ்:

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், இஸ்ரேலின் பினியாமினா பகுதியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிக அளவிலான டிரோன்கள் ஏவப்பட்டன.

இதில் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர் என்று, 50-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News