தமிழ்நாடு செய்திகள்

வேளாண் நில கணக்கெடுப்புக்கு மாணவிகளை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது- பிரேமலதா

Published On 2024-11-15 14:26 IST   |   Update On 2024-11-15 14:26:00 IST
  • பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு கடித்துள்ளது.
  • அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததையும் காட்டுகிறது.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள் செய்ய வேண்டிய வேலையை எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியப்போக்கோடு வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.

இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு கடித்த நிலையில் மீண்டும் மாணவர்கள் டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததையும் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News