தமிழ்நாடு செய்திகள்

நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

Published On 2025-12-26 07:26 IST   |   Update On 2025-12-26 07:28:00 IST
  • எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

சென்னை:

எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரெயில்களிலும் கட்டணம் உயர்ந்தது.

இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிவித்த புதிய ரெயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தது.

நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்று (26-ந்தேதி) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும்.

நாடு முழுவதும் ரெயில் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில் கட்டணங்களில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News