தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி
- நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார்.
- சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான
தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, அதிமுக சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.
நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்
மேற்கண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வவேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.