தமிழ்நாடு செய்திகள்

ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-05-24 13:15 IST   |   Update On 2025-05-24 13:15:00 IST
  • பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது.
  • எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

மாநிலத்தின் நிதியை கேட்டு பெறுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ணத்தான் செய்வார். ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தொடர்ந்து பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து குரல் கொடுப்போம்.

மிரட்டி அடி பணிய வைக்க பார்த்தார்கள். பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்குன கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கைகள் உடைய கட்சி. தவறு செய்பவர்கள் தான் பயப்படணும். நாங்கள் யாருக்கும் அடிபணியணும், பயப்படணும்னு அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றார். 

Tags:    

Similar News