தமிழ்நாடு செய்திகள்

புதிய சிபிஐ மாநிலச் செயலாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2025-09-13 17:35 IST   |   Update On 2025-09-13 17:35:00 IST
  • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

இவ்வாறு அவர கூறினார்.

Tags:    

Similar News