கரூர் விவகாரம் குறித்து விஜய் ஒருபோதும் பேசமாட்டார் - டி.கே.எஸ். இளங்கோவன்
- தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
- அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. மீது த.வெ.க. தலைவர் விஜய் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுதொடர்பாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது, அண்ணா முதலமைச்சராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை.
* மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.
* முதல் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார்.
* தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
* அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
* கட்சி பதவிக்காக கொள்ளை அடிப்பதாக த.வெ.க.வினரே குற்றம்சாட்டுகின்றனர்.
* மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்?
* தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி என்ன பேசியிருக்கிறார் விஜய்?
* பா.ஜ.க.வின் அடிமையாக விஜய் உள்ளார் என்றார்.
* தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார்.
* கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார்.