தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள போகிறது- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2025-11-05 20:47 IST   |   Update On 2025-11-05 20:47:00 IST
  • பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
  • பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு தொடக்கம் இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் 'வந்தே மாதரம்' பாடல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற் காக 7 நாட்கள் நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.

வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அதன் வீரர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சி குறைவான பதிப்புகளை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பதிப்புகளை தேடி தேடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர் கொள்ள போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கால மாகிய பிறகும் பெண்கள் பகல், இரவு நேரத்தில் தனிமையில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் மாணவி யினை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத் காரம் செய்து ஆடையின்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.

இதற்கு பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்களும் அதன் கூட்டணியை சார்ந்த வர்களும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. இது போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மகாராஷ் டிரா மாநிலத்தின் நடை பெற்றிருந்தால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்களும் போதை ஆசாமியும் தான் சுதந்திரமாக சுற்றித் தெரிகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இல்லை. போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாளு வதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. நிர்பையா நிதியை கூட சரியாகப் பயன்படுத்த வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News