தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்., டி.டி.வி. மீண்டும் இணைந்தாலும் அது உடைந்த கண்ணாடிதான் - செல்வப்பெருந்தகை

Published On 2025-09-18 10:10 IST   |   Update On 2025-09-18 10:10:00 IST
  • முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் விலகி உள்ளார்.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இணைந்தாலும் அது உடைந்த கண்ணாடி போன்று கீறல்களுடன்தான் இருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Tags:    

Similar News