தமிழ்நாடு செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல போலீஸ் தடை!

Published On 2026-02-08 14:40 IST   |   Update On 2026-02-08 14:40:00 IST
  • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
  • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரப்பூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம் தரர்பில் இப்படி தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News