தமிழ்நாடு செய்திகள்

ED சோதனை என்பதால் டெல்லி பயணமா? - முதலமைச்சருக்கு சீமான் கேள்வி

Published On 2025-05-23 13:05 IST   |   Update On 2025-05-23 13:05:00 IST
  • நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு?
  • அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால்தான் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரிடம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரிக்க தடை விதித்த உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

* நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு?

* அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால்தான் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்.

* 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்தாண்டு மட்டும் செல்வது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News