தமிழ்நாடு செய்திகள்
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி - திமுகவை விமர்சித்த சீமான்
- சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
- வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்...
திருச்சி:
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது.
* மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என தி.மு.க. செயல்படுகிறது.
* சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
* 100 சதவீதம் இந்து என பா.ஜ.க. கூறினால் 90 சதவீதம் இந்து என தி.மு.க. கூறுகிறது. ஆன்மிக ஆட்சி நடக்கிறது என சேகர்பாபு கூறுகிறார்.
* வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்... என்றார்