தமிழ்நாடு செய்திகள்

ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது- நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-11 11:54 IST   |   Update On 2025-06-11 11:54:00 IST
  • உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

நெல்லை:

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

* ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.

* உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.

* சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.

* சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

* 19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?

* சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை.

* 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

* 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார். 

Tags:    

Similar News