தமிழ்நாடு செய்திகள்

துரோகிக்கு அடையாளமாக காட்டப்படும் நபர் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

Published On 2026-02-22 06:57 IST   |   Update On 2026-02-22 07:00:00 IST
  • திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.
  • இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் நேற்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரையில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி துரோகி என்று கூறியுள்ளார். யார் துரோகி? ஸ்டாலின் தான் துரோகி. திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.

மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? 5 ஆண்டில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு, மிக எளிதில் கிடைக்கும் கஞ்சா என பட்டியல் நீள்கிறது.

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். நம் பிள்ளைகளை சீரழித்தவர் ஸ்டாலின். போதைப் பொருள் விற்பதே திமுக தான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது,"மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News