தமிழ்நாடு செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநருக்கு சம்பட்டி அடி அடிப்பது போல் உள்ளது- அமைச்சர் கோவி செழியன்

Published On 2025-11-22 15:05 IST   |   Update On 2025-11-22 15:05:00 IST
  • தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.
  • ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்:

தஞ்சையில் இன்று மாநகர, பகுதி இளைஞரணி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என யார் பிறந்தநாள் என்றாலும் அறிவுப்பூர்வமான, ஆக்கபூர்வமான பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பதுதான் தி.மு.க தலைவர்களின் நோக்கம். அதன் அடிப்படையில் தான் இன்று இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .

தலைவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தொண்டர்கள் செய்யும் ஒரே இயக்கம் தி.மு.க தான். உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ந்தேதி வரை 48 நிகழ்ச்சிகளை இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்குவது, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முகாம்கள் நடத்துவது, இளைஞர்கள், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, பொது கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.

ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தமிழ்நாடு தான் எங்களுக்கு தாய் வீடு என கூறி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் கிடையாது. சட்டமன்றங்கள் கூடி அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ அதற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சம்மட்டி அடி அடிப்பது போல் உள்ளது. இந்த உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்தால் அது மத்திய அரசுக்கு மற்றும் மத்திய அரசுக்கு துணை போகும் ஆளுநர்களுக்கு பலவீனம் என்பதை தெரிந்து தான் தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் பல்வேறு சமூக வலைதளங்கள் ஒரு மேக மூட்டத்தை போல் மறைக்க பார்க்கிறது. ஆனால் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சருக்கு தான் அதிகாரம்

மக்களாட்சி தத்துவம் என்பது முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் பித்தலாட்டம் செயலை செய்வாரானால் சட்டத்தின் தீர்ப்புப்படி தெளிவுபடுத்தி மாநில முதலமைச்சருக்கு தான் முழு அதிகாரம் உண்டு. அது துணைவேந்தரை நியமிப்பது என்றாலும், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது என்றாலும் அமைச்சரவை என்ன தீர்மானம் கொண்டு வருகிறதோ அதற்கு ஒப்புதல் தரவேண்டிய கடமைதான் ஆளுநருக்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்படும். இந்தத் தீர்ப்பின் விரிவாக்கம் ஒன்று அமைச்சரவை அனுப்பிய மசோதாவிற்கு கையெழுத்து இட வேண்டும், இல்லையெல் திருப்பி அனுப்ப வேண்டும்.

அப்படி இல்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. அதைத் தவிர நீண்ட நாட்களாக மசோதாவை வைத்துக் கொண்டு இருப்பது அவரது வேலை அல்ல என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை அவர் புரிந்து செயல்பட வேண்டும் என்றார். 

Tags:    

Similar News