தமிழ்நாடு செய்திகள்

விஜயை கைது செய்யாதது ஏன்?- தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி

Published On 2025-10-03 07:24 IST   |   Update On 2025-10-03 07:24:00 IST
  • விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான்.
  • விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன்.

விஜயை பார்ப்பதற்காக வந்ததால் தான் 41 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான். விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. வெளிநாட்டில் இருந்து ராகுல் கேட்டு கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?. ராகுல் குறித்து வந்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News