தமிழ்நாடு செய்திகள்

எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டி, அமைச்சரவையில் பங்கா? - நயினார் நாகேந்திரன் பதில்

Published On 2026-01-09 10:38 IST   |   Update On 2026-01-09 10:38:00 IST
  • சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

* பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.

* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

* பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

Tags:    

Similar News