தமிழ்நாடு செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Published On 2026-02-14 15:20 IST   |   Update On 2026-02-14 15:20:00 IST
  • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
  • அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக கூறிக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை துறையூர் அருகில் போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

நட்பாக பழகி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News