தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-03-08 11:23 IST   |   Update On 2025-03-08 11:23:00 IST
  • பெண் ஒருவர் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.
  • பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டினார். இதனை தொடர்ந்து மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* பெண் ஒருவர் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.

* பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

* பெண் சிசு கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.

* அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

* அ.தி.மு.க. அரசு பெண்களை பாதுகாத்தது. தி.மு.க. ஆட்சியில் சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்று விமர்சித்தார். 

Tags:    

Similar News