தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க. அரசு தவறு செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2025-04-07 12:03 IST   |   Update On 2025-04-07 12:03:00 IST
  • டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
  • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.

* டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.

* டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க. அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.

* டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?

* நமது மாநிலத்தில் வழக்கு நடந்ததால், தி.மு.க. செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம்.

* தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.

* டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

* அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல.

* கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்?

* மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி.

* இந்த 9 மாதத்தில் எந்த அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்?

* 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. என்ன செய்தது?

* தூம்பை பிடித்து வாலை பிடித்த கதையாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

* நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.

* தமிழ்நாட்டிற்கு தி.மு.க. அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். 

Tags:    

Similar News