தமிழ்நாடு செய்திகள்

கோவையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்

Published On 2025-11-18 12:39 IST   |   Update On 2025-11-18 12:39:00 IST
  • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
  • சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கோவையில் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News