தமிழ்நாடு செய்திகள்

அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு

Published On 2025-04-12 10:43 IST   |   Update On 2025-04-12 10:43:00 IST
  • அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே நேற்று, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கருப்பு நிற புறாக்களை பறக்க விட்டும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும், அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 192 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News