தமிழ்நாடு செய்திகள்

உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-11 10:34 IST   |   Update On 2025-08-11 10:34:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
  • முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றார் .

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.

இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றடைந்தார். .

இந்நிலையில், உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திடலுக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News