தமிழ்நாடு செய்திகள்

மருத்துவமனையில் இருந்தபடி "ஓரணியில் தமிழ்நாடு" நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு

Published On 2025-07-26 15:58 IST   |   Update On 2025-07-26 15:58:00 IST
  • திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர முதலமைச்சர் அழைப்பு .
  • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு என தகவல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் அறிவுரைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News