தமிழ்நாடு செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க. இன்று போராட்டம்

Published On 2025-05-05 05:00 IST   |   Update On 2025-05-05 05:00:00 IST
  • பஹல்காம் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
  • இதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News