வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...
இருபோக சாகுபடி பரப்பு 33 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ரூ.510 கோடி செலவில் உழவர்களின் வேளாண் கருவிகள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அவையில் பங்கேற்றுள்ளனர்.
உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்