தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன் முடிவு நல்லதுதான்: சசிகலா

Published On 2026-03-02 18:35 IST   |   Update On 2026-03-02 18:35:00 IST
  • ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது.
  • செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை.

அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச் செயலாளராக உள்ளார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்துள்ளார். அவர் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்று சசிகலா கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் செங்கோட்டையன் குறித்து சசிகலா கூறுகையில் "செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை. புதிதான ஒரு இடத்துக்கு போயிருக்கிறார். அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என்பதுதான் என் கருத்து" என்றார்.

Tags:    

Similar News