வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...
கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரின் டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை பயிர் சேதத்திற்கான நிவாரணம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 1000-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்பட்டுள்ளன- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் 46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் தி.மு.க. அரசின் திட்டங்களால் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
1.86 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
3 ஆண்டுகளில் ரூ.61 கோடி 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
4 ஆண்டுகளில் 349 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரின் டன் உணவு தானியங்கள் உற்பத்தி.
இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்