தமிழ்நாடு

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பிப்.8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்

Published On 2024-02-02 03:33 GMT   |   Update On 2024-02-02 03:33 GMT
  • நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
  • தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

சென்னை:

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிப்.8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News