தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை- வானதி சீனிவாசன்
- வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
- அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
* வேளாண் பட்ஜெட்டில் 60 சதவீதம் திட்டங்கள் மத்திய, மாநில அரசு பங்களிப்பு என அறிவிப்பு.
* வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
* தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.
* அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
* வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.