தொகுதிகள் பெற்றுதர 'ரெடி' போட்டியிட எத்தனை பேர் 'ரெடி?' -நிர்வாகிகளை தெறிக்க விட்ட ராமதாஸ்
- இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்று கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.
- பேச்சுவார்த்தை இழுபறியாகி செல்வதற்கு என்ன காரணம் என்று கட்சியினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்று கேட்க தொடங்கி இருக்கிறார்கள். 6 முதல் 7 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு இரண்டு கட்சிகளும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படாததால் நாம் எந்த அணியில் இடம் பெற போகிறோம்? பேச்சுவார்த்தை இழுபறியாகி செல்வதற்கு என்ன காரணம்? என்று கட்சியினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
கட்சியினரின் ஆர்வம் புரிந்தாலும் கட்சி தலைமைக்கு தானே நிலைமை தெரியும். தங்கள் ஆதங்கத்தை நிர்வாகிகள் சிலர் டாக்டர் ராமதாசிடம் நேரிலேயே கேட்டு உள்ளார்கள்.
அதை கேட்டதும் சிரித்து கொண்டே நான் தொகுதிகளை கேட்டு வாங்கி தர ரெடியாக இருக்கிறேன்.
உங்களில் எத்தனை பேர் போட்டியிட ரெடியாக இருக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்கள். அவர் இவ்வாறு கேட்டதற்கு காரணம் வேட்பாளர்கள் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பார்கள். எனவே பண பலம் முக்கியம். அதை மனதில் வைத்தே இவ்வாறு கேட்டுள்ளார்.
அதை கேட்டதம் நிர்வாகிகள் தெறித்து ஓடாத குறைதான்.