தமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த் வாகனத்தில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை

Published On 2024-04-16 07:06 GMT   |   Update On 2024-04-16 07:06 GMT
  • அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.
  • மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

மதுரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினரும், வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அதன்படி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அவரது தாயாரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.

தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கினார். அதன் பின், பறக்கும்படை அதிகாரிகள் கார் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். வாகன சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News